இடுகைகள்

சமீபத்திய இடுகை

கூட்டறிக்கை - கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிக

படம்
26 ஆகஸ்ட் 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் பகுதியிலுள்ள சக்தி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் மேனிலை வகுப்பில் பயின்று வந்த சிறீமதி எனும் மாணவி சூலை 13 - ஆம் நாளன்று ஐயத்திற்கு இடமான முறையில் மர்ம மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும், பொதுமக்களும் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 4 நாள்கள் நடைபெற்ற போராட்டத்தை ஒட்டி அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காததால், தமிழ்நாட்டிற்கு வெளியே இந்திய அளவில் இவ்விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. மாணவியின் தாயாரின் அவலக்குரலுக்கு ஆதரவாக, தன்னெழுச்சியான பெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பிறகும்கூட, காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.  அதனால் சூலை 17-ஆம் நாள் ஒன்றுகூடிய பெருமளவிலான போராட்டத்தில் ஒரு கும்பல் புகுந்து பள்ளியின் மீது தாக்குதல் நடத்தி ஆதாரங்களை அழித்துள்ளது. இதன் விளைவாகக் கொலைக்குற்றம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வன்முறை என்ற பெயரில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் விசாரணை அமைப்பு (சிபி-சிஐடி) இப்பொழுது

மக்களாட்சி காப்போம்! மக்கள் நலன் காப்போம்! - கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிவுத்துறையினரின் கூட்டறிக்கை

படம்
11 ஏப்ரல் 2019 எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முன்னெப்போதும் காணாத ஒரு நெருக்கடியை மக்கள் முன்னே தோற்றுவித்துள்ளது. பொதுவாக, அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க பிரசாரம் செய்யும்போது, குடிமக்கள் தங்கள் அரசியல் தேர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பதே சார்புகளற்ற பொது மன்றக் கலாசாரத்தை வளர்க்க உதவும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக மத்தியில் ஆளும் கட்சி நம் நாட்டின் மக்களாட்சி கலாசாரத்தின் அடிப்படைகளையே ஆபத்திற்குள்ளாக்கியுள்ள நிலையில், மக்களாட்சியின் தூண்களான நிறுவனங்களெல்லாம் மமதையுடன் சிதைக்கப்படும் நிலையில், சமூகம் முழுவதும் அச்சமும் வெறுப்பும் பரவும் நிலையில், குடிமக்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக  மக்களாட்சியின் இருப்பைக் காக்க  முன்வரவேண்டிய தேவை இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் நாம் கண்ட காட்சிகள் நம் தேசத்திற்குப் புதியவை; தாங்கள் உண்ணும் உணவிற்காகவும், வழிபடும் கடவுளுக்காகவும் சாதாரண மக்கள், அதிகாரத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட கும்பல்களால் கொல்லப்பட்டார்கள்; மூளைச்சலவை செய்யப்பட்ட குண்டர்களால் அறிஞர்களும், எழுத்தாளர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்; இந்தக் கொலை

நம்‌ மருத்துவர்‌ ஜீவா

படம்
நிபுணத்துவம்‌ அவரவர்‌ துறை சார்ந்தது என்று சிலர்‌ கருதுகிறார்கள்‌. ஓரளவு உண்மை இந்த அளவீடு . துறைசார்‌ தேடல்‌, ஆய்வு, பணியாற்றுகை போன்றன நிபுணத்துவம்‌ என்ற போதும்‌, சமூகம்‌ சார்ந்து மக்களுக்குப்‌ பணியாற்றும்‌ உமையோடு தொடர்புடையது நிபுணத்துவம்‌. முனிவர்கள்‌, யோகிகள்‌ தவவலிமையைப்‌ பெருக்கிக்‌ கொண்டு போவதுபோல்‌, சமூகத்துக்குப்‌ பயன்படாத நிபுணத்துவம்‌ பயனில்லா ஒன்றாகிவிடும்‌. நம்‌ ஜீவானந்தம்‌ ஒரு மருத்துவர்‌. மருத்துவம்‌ இன்றைக்குப்‌ பணம்‌ கொட்டும்‌ தொழில்‌. அறிஞர்‌ பெர்னார்ட்ஷா குறிப்பிடுவார்‌, "ஒருவர்‌ எத்தனை உயிர்களைக்‌ கொல்கிறாரோ, அத்தனைக்குப்‌ பெரிய மருத்துவர்‌. எத்தனை பொய்கள்‌ உரைக்கிறாரோ அவ்வளவுக்கு அவர்‌ நல்ல வழக்கறிஞர்‌". மருத்துவம்‌, வழக்குரைத்தல்‌ போன்றவை மக்கள்‌ நலனுக்காக இல்லாமல்‌, பணம்‌ கொட்டும்‌ வணிகமாக மாற்றப்பட்டதால்‌ உதித்த கருத்து இது. உடல் நோய்‌ பார்த்தல்‌ போலவே, மனித சமூகத்துக்கும்‌ நோய்‌ உண்டு, மனித சமூக நோய்க்கு மருத்துவம்‌ காண வேண்டுமெனக்‌ கருதும்‌ சமுதாய மருத்துவர்‌ நம்‌ மருத்துவர்‌. சாமானியர்களின்‌ வாழ்வுப்‌ பயன்பாட்டுக்கு மருத்துவத்தைக்‌ கையாளவேண்டுமெனு

சமவெளிகளில்‌ தீப்பிடிக்கும்‌...

படம்
(மக்கள்‌ கவிஞர்‌ மாயாண்டி பாடல்கள்‌ - முன்னுரை) "எறும்புப்‌ புற்றில்‌ இருக்கிற அரிசியைத்‌ தேடி பசியெடுத்த மக்கள்‌ அலைந்தார்கள்‌. பரத்தையர்‌ வீடுகளில்‌, பணம்‌ படைத்த தலைவர்கள்‌ இன்னிசை கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்‌. சேர, சோழ, பாண்டியர்‌ என்பவர்கள்‌ தங்களுக்குள்ளேயே, சொத்துக்களுக்‌காக போரிட்டுக்‌ கொண்டார்கள்‌. தோற்றவன்‌ நாட்டையும்‌ ஊரையும்‌, அவனுடைய விளைந்த பயிர்களையும்‌ தீயிட்டுக்‌ கொளுத்தி மகிழ்ந்தார்கள்‌. தாங்க முடியாத வரிப்‌ பளுவால்‌ மக்களை கொடுமைப்படுத்தினார்கள்‌. ஓயாது போர்‌ செய்தல்‌, குடித்தல்‌, பரத்தையரோடு கழித்தல்‌ என்று வாழ்ந்தார்கள்‌.” 'வீதியிலே பாலோடியது, வீடுகளிலே தேனோடியது' என்று அளந்து விடப்படுகிற சங்க காலத்தின்‌ சித்திரம்‌ தான்‌ இது. இதுவரை -- பேரரசர்கள்‌, சிற்றரசர்கள்‌, மேட்டுக்‌ குடியினர்‌ -- இவர்களின்‌ வாழ்க்கையே, மக்களின்‌ வாழ்க்கையாகச்‌ சொல்லப்பட்டது. இவர்களின்‌ அரசியலே, மக்களின்‌ அரசியலாக நமக்குப்‌ படம்‌ போடப்பட்டது. சங்க காலம்‌, சங்க இலக்கியம்‌ பற்றி இன்னும்‌ ஒரு முழுமையான ஆய்வு தரப்படவில்லை. விஞ்ஞானப்பூர்வமாக இன்னும்‌ அவை விளக்கப்படவில்லை. இவை ம

சூரியதீபனின் 'ஈழக்‌ கதவுகள்‌' - ஜெயந்தன்‌

படம்
இருபது லட்சம்‌ ஈழத் தமிழர்களும்‌ பதினெட்டு லட்சம்‌ தோட்டத் தொழிலாளத்‌ தமிழர்களும்‌ நித்தமும்‌ வயிற்றில்‌ நெருப்பைக்‌ கட்டிக்கொண்டு நாட்களை கழித்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. எந்த நேரத்தில்‌ எது நடக்கும்‌, எது நடக்காது என்று சொல்ல முடியாது. சிங்கள பேரினவாத வெறிபிடித்த காடையர்களும்‌ பேரினவாத அரசும்‌ அதன் படைகளும்‌ புத்த மதத்தைப்‌ பேரினவாதமாக ஆக்கிக்கொண்டுவிட்ட பிக்குகளும்‌ வெறியாட்டம்‌ போடுகிறார்கள்‌. 2004 வரை என்ற அளவில்‌ கூட 17,600க்கும்‌ மேற்பட்ட போராளிகளும்‌ 70,000 பொதுமக்களுமாக மொத்தம்‌ 87,600 உயிர்கள்‌ காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. அமைதி ஒப்பந்தங்களையெல்லாம்‌ சிங்கள அரசு கிழித்து காற்றில்‌ பறக்கவிட்டுக்‌ கொண்டிருக்கிறது. ஆனால்‌ பத்திரிகைகளும்‌ இதர ஊடகங்களும்‌ / தமிழகத்து ஊடகங்கள்‌ உள்ளிட்டு / ஈழத்திற்கு முதுகை திருப்பிக்கொண்டு நிற்கின்றன. ஏப்போதாவது “போராளிகளுக்குக்‌ கொஞ்சம்‌ சேதாரம்‌” என்பதாக சின்ன கட்டம்‌ கட்டிப்‌ போடுவதோடு சரி அநேகமாக இருட்டடிப்பு என்ற நிலை. இந்த நிலையில்‌ பத்தே நாட்கள்‌ ஈழத்தில்‌ தங்க நேர்ந்த சூரியதீபன்‌ ஈழத்தின்‌ கதவுகளைத்‌ தானே ஓர்‌ ஊடகமாக நின்று திறந்து வைக்கிற

நூல் அறிமுகம்: உச்சி வெயில் – ஜனநேசன்

படம்
கரிசல் காட்டில் விளைந்த வைரங்களில் ஒருவர் பா.செயப்பிரகாசம். இவர் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உயரதிகாரியாக பணியாற்றி பணி நிறைவு செய்தவர். பணியில் இருந்தபோது பா.செயப்பிரகாசம் என்ற பெயரில் சிறுகதைகளையும், சூரியதீபன் என்ற புனைபெயரில் கவிதைகள், கட்டுரைகளும் எழுதினார் . பா.செ.யின் எழுத்தாளுமை அவரது சிறுகதைகளால் அறியப்படுகிறது. ‘ஒரு ஜெருசலேம்‘, ‘காடு’, ‘இரவுகள் உடையும்’ போன்ற சிறுகதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கன. ’அம்பலகாரர் வீடு‘, ‘தாலியில் பூச்சூடியவர்கள்‘ போன்ற கதைகள் பா.செ.யின் கதையாளுமையின் உச்ச படைப்புகளாகும். கரிசல் இலக்கியத்தில் நவீன முகமாகக் கருதப்பட்டு பிதாமகர் கி.ராஜநாராயணன் உள்ளிட்ட பிற கரிசல் படைப்பாளிகளிலிருந்து தனித்து நிற்கிறார். வெயில் பூத்து, மழை அரிதாகிப் போன கரிசல் பூமியின் வெக்கை மனிதர்களை, பாடுகளை, மகிழ்வை, கொண்டாட்டங்களை, உண்ணும் உணவு வகைகளை வாசக மனங்கவரும் வகையில் படைப்புகளாக்கி உள்ளார். இவர்கள் படைப்புகள் பேசும் மக்கள் கரிசல் பகுதியினர் என்ற போதும், இந்த படைப்பாளிகளின் பார்வையும், எடுத்துரைப்பும் பிரபஞ்சம் தழுவியவை. கரிசல் வட்டத்துக்குள் சுருக்கி அடக்குவதை பா.செ

பா.செயப்பிரகாசத்தின்‌ 'வனத்தின்‌ குரல்‌' - ஜெயந்தன்‌

படம்
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்‌ ஏகமாய்‌ எழுதிக்‌ குவித்துக்‌ கொண்டிருக்கும்‌ பா. செயப்பிரகாசத்தின்‌ கணக்கில்‌ இன்னொரு வரவு “வனத்தில்‌ குரல்‌” இது 19 கட்டுரைகளின்‌ தொகுப்பு. கட்டுரைகள்‌ பல திசைகளிலும்‌ விரிவன. இருப்பினும்‌ நூலைப்‌ படித்து முடித்து பின்‌ நினைவின்‌ முதல்‌ இடத்தை ஆக்கிரமித்துக்‌ கொள்வது கடைசியாக உள்ள 2 பயணக் கட்டுரைகள்‌. மலேசியா பற்றிய கட்டுரைக்குத்தான்‌ வனத்தின்‌ குரல்‌ என்ற தலைப்பு கொடுத்துள்ளார்‌. உண்மையில்‌, அவரே கட்டுரையின்‌ உள்ளே ஓரிடத்தில்‌ சொல்லிருப்பது போல அது வனத்தின்‌ அவலக்குரல்‌. இந்த அவலக்குரல்‌ தமிழர்கள்‌ குரல்‌ என்பதுதான்‌ நம்மை விசேஷமாக துன்புறுத்துகிற ஒரு விஷயம்‌. அதோ இந்த அவலம்‌ தமிழர்கள்‌ நூற்றாண்டுகளாய்‌ தங்கள்‌ தலையில்‌ தாங்களே வைத்துக்‌ கொண்ட கொள்ளி என்பதை அறியும்போது நமது மனக்கஷ்டம்‌ எல்லை கடக்கிறது. ஆரம்பத்தில்‌ மலேசியா கன்னி நிலமாகத்‌ தான்‌ இருந்திருக்கிறது. பிறகுதான்‌ ஜாவா, சுமித்ரா போன்ற தீவுகளிலிருந்து மக்கள்‌ அங்கே குடியேறியிருக்கிறார்கள்‌. பிறகு அதை வளப்படுத்த தமிழர்களும்‌ படைபடையாகச்‌ சென்று அங்கு இறங்கியிருக்கிறார்கள்‌. ஒரு காலக்‌கட்டத்தில்‌

நதியோடு பேசுவேன் - வாசகர் மதிப்புரை

படம்
புத்தகத்தின் பெயர்: நதியோடு பேசுவேன் வகை: கவிதைத் தொகுப்பு  ஆசிரியர்: சூரியதீபன்   வெளியீடு: 'அகரம்-அன்னம்' / 2003 விலை: ரூ.30/- பக்கங்கள்: 80 சூரியதீபனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இந்நூல். "ஜெருசலேம்" எனும் அற்புத கதைத் தொகுப்பைக் கொடுத்தவர் பா.செயப்பிரகாசம் எனும் இயற்பெயர் கொண்ட சூரியதீபன். "கவிதையில் இணையும் 'சொல்' தனது நிஜமான உருவத்திலிருந்து கழன்று, அச்சொல் உணர்த்தும் அர்த்தத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றையோ அல்லது பலவற்றையோ குறிப்பதாகிறது" எனும் கருத்தாக்கம் கொண்டவர் இக்கவிஞர்; அதனை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். 'கவிதை என்பது உரத்துப் பேசாத மௌனம்; நேரடி விவரிப்பைத் தவிர்த்த ஒன்று' எனும் நவீன கவிஞர்களின் மனவோட்டத்திற்கு நேரெதிரானது சூரியதீபனின் கவிதை மொழி. மக்கள் உணர்ச்சிமயமான தங்கள் வாழ்க்கையை, வலிகளை, இன்பப்பெருக்கை, உவமைகள், சொல்லாடல்கள் மூலம் வெளிப்படுத்தும் போது ஆயிரங்காலத்துச் செறிவு வெளிப்படுகிறது; அந்த செறிவுகளின் அதிர்வுகளை தனது கவிதை மொழியாக்கக் கருப்பொருளாகக் கொண்டவர் சூரியதீபன். மக்கள் மொழியை தனக்க

பா.செயப்பிரகாசம் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

படம்
உங்களுக்கு பின், உங்கள் நினைவு எப்படி அனுசரிக்க பட வேண்டும் என நினைக்கிறீர்கள்? என் எழுத்துக்களால் கொண்டாடப்பட வேண்டும்.  - பா.செயப்பிரகாசம் ( கடைசி நேர்காணலில் ) தினமலர், 23 அக்டோபர் 23 2023 எழுத்தாளர் பா.செயபிரகாசம் நினைவு நாள்... தமிழ், தமிழீழம், சமூகம், கலை, இலக்கியம் என பல நிலைகளில் பல ஆண்டுகள் இணைந்து செயல்பட்ட தோழர் எழுத்தாளர் சூரியதீபன் என்கிற பா.செயபிரகாசம் அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாள் இன்று.. - ஓவியர் புகழ் தூய தமிழ்த்தேசியர், இந்தி எதிர்ப்பு போராளி, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களுக்கு முதலாம் ஆண்டு புகழ் வணக்கம். -  இறையழகன் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் (சூரிய தீபன்) மறைந்து ஓராண்டு. ••••••••••••••••••••••••••••••••••••••••••• [1941 - 23.10.2022]  1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர் தலைவராக இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் தளைப்படுத்தப்பட்டவர். இடதுசாரி சிந்தனையாளர், எழுத்தாளர். "மன ஓசை" இதழில் அவர் எழுதியவற்றை விரும்பிப் படித்துள்ளேன். ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பில் மிகவும் ஈடுபாடு காட்டியவர். -  குப்பன் சா

சூரியதீபனின் 'நதியோடு பேசுவேன்' - ஜெயந்தன்‌

படம்
சூரியதீபன்‌ உரக்கவே சிந்திக்கிறார்‌. அதைச் சரியாகவே வெளிப்பாடு செய்கிறார்‌. இதற்கு அவரது இரண்டாவது கவிதைத்‌ தொகுதியான “நதியோடு பேசுவேன்‌” நூலும்‌ சாட்சியும்‌ சொல்கிறது. தான்‌ படித்த பச்சையப்பன்‌ கல்லூரிக்கே மீண்டுமொரு நாள்‌ சிறப்புரையாற்ற வந்த அண்ணா பேசிய தலைப்பு “ஆற்றங்கரை நாகரிகம்‌”. மனித நாகரிகத்தின்‌ தொட்டில்கள்‌ ஆடியதெல்லாம்‌ அற்றங்கரை ஓரங்களில்தான்‌ என்பது சரித்திரம்‌ சொல்லும்‌ சேதிதான்‌. அனால்‌ அவரது சீடர்களே போலீஸை மண்வெட்டியாக கொண்டு அந்த நாகரிகத்தை அந்த நதியிலேயே, நதியோடு நதியாகப்‌ புதைப்பார்கள்‌ என்று யாராவது எதிர்பார்த்திருக்க முடியுமா? புதைத்தார்கள்‌. இருபத்தியோரு குண்டுகள்‌ முழங்க எக்காளம்‌ ஊதி கனத்த பூட்ஸ்‌ கால்களை தரையில்‌ உதைத்து சல்யூட்‌ அடித்து மெல்ல மெல்ல சவப்பெட்டியை தண்ணீரில்‌ இறக்காத குறையாக. 1999 ஜுலை 28 மாஞ்சோலைத்‌ தோட்டத்‌ தொழிலாளர்களுக்காக நீதி கேட்டு பேரணியாகச்‌ சென்ற தலித்துகளை தாமிரபரணி நதியொன்றே தப்பும்‌ மார்க்கமாக இருந்த குறுகிய இடத்தில்‌ தடிகளால்‌ அடித்து நதிகளில்‌ தள்ளினார்கள்‌. தத்தளித்து கரையேற முயன்றவர்களை நீண்ட கழிகளால்‌ மீண்டும்‌ உள்ளே தள்ளினார்கள

பா.செயப்பிரகாசமும் சூரியதீபனும்

படம்
(காக்கை சிறகினிலே - டிசம்பர் 2022ல் வெளியான கட்டுரையின் செழுமைபடுத்தப்பட்ட வடிவம்.) இது என் முதல் கட்டுரை. நான் எழுதும் முதல் கட்டுரையே என் தந்தையின் நினைவு கட்டுரையானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஆனால் அவரை பற்றி (என் பார்வையில்) நான் புரிந்து கொண்ட விடையங்களை  நினைவுகளாக பகிர்ந்துகொள்வது, என் தந்தைக்கு நான் செய்ய வேண்டிய கடமையாக கருதுகிறேன். அப்பாவுக்கு விடியர் காலையில் எழுந்திருக்கும் பழக்கம் உண்டு. அதிகாலையின் அமைதியில் பால்கனியில் காலையை ரசித்தபடி எழுதுவது அவருக்கு மிகவும் பிரியம். மழை பெய்தால் இன்னும் கூடுதல் உற்சாகத்துடன் இருப்பார். அதிகாலை நேரங்களில் அவர் எழுதுவது அல்லது புத்தகம் படிப்பதை வழமையாக கடைசி வரை கொண்டிருந்தார். அவர் கடைசி நேர்காணலும் அவ்வாறே அவர் மறைந்த அன்று காலை செழுமை செய்து எனக்கு அனுப்பியிருந்தார்.  காலை எழுத்து பணி முடிந்ததும் சிறிது தூரம் நடைபயிற்சி செல்வது, குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வருவது, வாங்கி வந்த காய்கறிகளை குளிர்சாதன பெட்டியில் அடுக்குவது, கீரையை சமையலுக்கு ஆய்ந்து தருவது, அதன் பின் அலுவலகம் செல்வது என அவர் வாழ்வில் ஒரு ஒழுங்கை கடைசி