இடுகைகள்

சமீபத்திய இடுகை

சுய தரிசனம்

படம்
01-10-2020 சென்னை தீபன்,  சில விசயங்களை உன்னுடன் பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன். தொலைபேசியில் இத்தனை தர்க்கரீதியாக பேச இயலாது. எழுத்துக்கள் மூலமாக ஓரளவுக்கு  எண்ணங்களை தெளிவாகக் கொண்டுவர சாத்தியமாகும். அன்பு செலுத்துதல், அன்பை வெளிப்படுத்துதல் என்பது வேறு; ஏமாளியாக இருப்பது வேறு. அன்பை, பாசத்தை குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமல்ல, உறவு, நட்பு என என்னைச் சூழவுள்ள அனைத்துத் திசைகளிலும் பரிமளிக்கச் செய்துவிட்டு, பண விசயத்தில் நான் ஏமாளியாக இருந்திருக்கிறேன். இப்போதும் இருந்து வருகிறேன். பெரியப்பா சொன்னதாக அம்மா ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறாள்; ”பணத்தின் அருமை இப்போது இவனுக்குத் தெரியாது”. பின்னர் இவன் எக்கசக்கமாக கஷ்டப்படப் போகிறான் என்ற அர்த்தத்தில் சொன்னது உண்மை என உணரமுடிகிறது. ஆனால் எனது குணவியல்பை மாற்றிக்கொள்வது இனிமேல்  சாத்தியமில்லை எனக் கருதுகிறேன்;  இனிமேல் சரிப்படுத்திக் கொள்வதால் என்ன பெரிதாய் விளையப் போகிறது என்னும் கேள்வி எழுந்தாலும், ஓரளவு என்னை நிலைப்படுத்திக் கொள்ளலாம்.    முழுதும் ஒரு புனைவு உலகத்திலேயே நான் வாழ்ந்து வந்ததாக கருதுகிறேன். பணம், சொத்து எல்லாமும் அர்த்தம

அவரும் நானும் - க.பஞ்சாங்கம்

படம்
கரிசல் காட்டு எழுத்தாளர், சமூகப் போராளி, தோழர் பா.செயப்பிரகாசம் 81ஆவது வயதில் கால வெள்ளத்தில் கரைந்துவிட்டார். மனித வாழ்வில் எதிர்கொள்ள நேரும் எந்த ஒன்றையும் பாதிக்கப்பட்டவர் பக்கம் நின்றே சிந்தித்தல், பேசுதல், எழுதுதல், செயல்படுதல் என்கிற மகத்தான இடதுசாரி மனநிலையில் பார்த்தவர் அவர். அவரோடு நெருக்கமாகப் பழகக் கிடைத்த காலம், என் தனிப்பட்ட வாழ்வில் அடர்த்தியாகத் துக்கத்தை அடைகாத்துக் கிடந்த 1977 வாக்கில்தான் அமைந்தது. 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகிப் பாளையங்கோட்டையில் சிறை வாழ்வைக் கண்டவர் என்ற முறையில், திமுக ஆட்சிக்கு வந்த 1967-க்குப் பிறகு தமிழ் முதுகலை முடித்திருந்த அவருக்கு மக்கள் தொடர்பு அதிகாரி என்கிற புதிய அரசு வேலை கிடைத்தது. இடதுசாரிக் குடும்பத்தைத் தேடிப் பெண் பார்த்துத் திருமணமும் நடைபெற்றது. இந்நிலையில், 1975இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டவுடன், அவருடைய அரசு வேலை போயிற்று. விளாத்திகுளம் அருகில் உள்ள ராமச்சந்திரபுரம் என்கிற கரிசல் காட்டுப் பூமியில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், வேலை ஏதுமின்றிப் பிள்ள

ஈழத்தில் பா.செயப்பிரகாசம், அக்டோபர் 2002 - புகைப்பட தொகுப்பு

படம்
2002 ஈழத்தில் ’அமைதி ஒப்பந்த காலத்தின்’ போது, 19-22 அக்டோபரில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ”மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில்” பா.செயப்பிரகாசம் பங்கேற்றார். கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, திரை இயக்குநர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் - என ’சரிவிகித உணவுக் கலவை போல்’ ஐவர் பங்கேற்ற அந்நிகழ்வில் ஒவ்வொரு நாள் நிறைவிலும் ஒருவர் உரையாற்றினர். மூன்றாம் நாள் நிகழ்வில் இவருடைய உரை நிகழ்ந்தது. ’மானுடத்தின் தமிழ்க்கூடல்‘ மாநாட்டின் தொடர்ச்சியாய் ஈழத்தில் பத்து நாட்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களின் தொகுப்பாக ”ஈழக் கதவுகள்” என்னும் நூல் வெளியானது.  எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், ஓவியர் மருது, திரை இயக்குநர் புகழேந்தி, கவிஞர் இன்குலாப் திரை இயக்குநர் புகழேந்தி, கவிஞர் இன்குலாப், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், ஓவியர் மருது, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஓவியர் மருது, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் இன்குலாப், திரை இயக்கு

புதர்கள் விலக்கப்படுகின்றன

படம்
கோ.கேசவனின் "பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை" நூல் முன்னுரை.

பேனா

சீன மூலம்: அய் - குங்                 ஆங்கில வழி தமிழில்:   சூரியதீபன் மனஓசை:   ஆகஸ்டு 1986 அந்தப் பேனாவை நீண்டநேரம் நோக்கினேன் அதனிடம் நான் கேட்டேன் 'என்ன வகைப் பிறவி நீ?' பேனா அழகு காட்டியது - ஒரு பதிலும் சொல்லாமல். என் மனதில் கடந்த கால நினைவுகள் ஓடின. ஒரு உழவன் சொன்னான் 'இந்த பேனா ஒரு கலப்பையையினும் கனமாயிருக்கிறது'. அந்தப் பழம்பெரும் விவசாயி, பேனா தன் விரலிடுக்கிலிருந்து தப்பித்துவிடும் போல் பயந்து இறுகப் பற்றி, கோடு கோடாய்க் கிழித்தான். கடைசியில் தாளும் கிழிந்தது. ஒரு பேராசிரியன், பேனாவை ஏந்தினான் அது அவனுடைய கைகளில் வளர்வது போல தோன்றியது. ஒரு கையில் சிகரெட்டுடன் பேனா முனையில் காற்று சுழன்று அடிப்பது போல் சிந்தனைகளை லாவகமாய்ச் சுழற்றினான். ஆனால் அவன் எழுதியது என்னவென்று யாருக்கும் தெரியாது. ஒரு தூரிகையின் முனை, ஓநாயின் மெல்லிய ரோமத்தால் செய்யப்படுகிறது. ஆனால், ஒரு கத்தியைப் போல் எதிரியின் நெஞ்சுக் கூட்டுக்குள் பாயும். ஒரு பேனாவின் முனை உலோகத்தால் செய்யப்படுகிறது. ஆனால், சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிகளை 'எம்பிராய்டரி' செய்யும் ஊசி போல் பூவேலை செய்யும

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - இதழ் அட்டைகளில்

படம்
  

அஞ்சலி: வீ.தேவராசன் - தொடுவானத்தின் இழப்பு

படம்
நெல்லுட்ல ரமாதேவி தெலுங்கில் எழுதிய “பெயர்” என்ற கதை:   வீ.தேவராசனின் மொழியாக்கக் கதை என்னை வெகுவாகப் பாதித்தது; வாசக தாகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் எல்லோரையும் ஈரத்திருக்கும். பெண்ணடிமைத்தனம் பழைய பாணியில் இயங்குவதில்லை. முதலாளித்துவ வளர்வினூடாக, பெண்ணடிமை புதிய புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப உத்திகளுடன் மறு வளர்ச்சி பெறுகிறது. ஆண் பெருமிதம், பாலியல் சீண்டல்,    பெண்ணைத் துன்புறுத்தல், மட்டுப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்தல் போன்ற பல்வேறு வினைகளால் மீண்டும் மீண்டும் புதிய வடிவத்தில் புதிய அனுபவத்தில் இங்கு உருவாக்கப்படுகிறது; இத்தனை தெளிவாகச் சொன்ன ஒரு கதையை மிகச் சிறப்பாக தமிழில் ஆக்கம் செய்த நண்பர் வீ.தேவராசனை பாராட்டி உரையாட அலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.  அலைபேசி எடுப்பதற்கு மறுமுனையில் அவர் இல்லை; அலைபேசியும் தொட முடியாத மற்றொரு முனைக்கு அவர் மறைந்து போயிருந்தார்.  மகள் அன்புமலர் பேசினார். ”அப்பா இறந்து இன்றுடன் 32- வது நாள்” என தகவல் தந்தார்.  தேனி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊர் அம்பாசமுத்திரம். ஜூலை 26 - அன்று சொந்த ஊர் சென்று சென்னை திரும்பிய போது, ஆதம்பாக்கத்தில் உள்ள

பா.செயப்பிரகாசத்தின் “கரிசலின்‌ இருள்கள்‌” - எஸ்.ராமகிருஷ்ணன்

படம்
கரிசல்‌ கதைகளின்‌ உலகில்‌ தனித்துவம்‌ பெற்றவர்‌ பா.செயப்பிரகாசம்‌. இதுவரை கதை உலகின்‌ காலடி படாத கிராமத்தின்‌ ஒடுக்கப்பட்ட மக்களையும்‌ அவர்களின்‌ வாழ்க்கைப்‌ பாடுகளையும்‌ விவரிக்கக்கூடியது இவரது எழுத்து. முப்பத்தைந்து வருடங்‌களுக்கும்‌ மேலாக சிறுகதைகள்‌, கட்டுரைகள்‌ எழுதிவரும்‌ தீவிர இலக்கியவாதியான செயப்பிரகாசம்‌ “விழிகள்‌”, “சதங்கை”, “மனஓசை" போன்ற இதழ்களில்‌ தொடர்ந்து எழுதி வந்தவர்‌. சமூக விடுதலையை நோக்கியதாக எழுத்து அமைய வேண்டும்‌ என்ற உரத்த சிந்தனை கொண்ட பா.செயப்பிரகாசத்தின்‌ மொத்தச்‌ சிறுகதைகள்‌ 'பா.செயப்பிரகாசம்‌ கதைகள்‌' என்ற தலைப்பில்‌ வெளியாகி உள்ளன. இவரது 'ஒரு கிராமத்து ராத்திரிகள்‌' என்ற தொகுப்பு, தமிழ்ச்‌ சிறுகதையுலகில்‌ குறிப்பிடத்தக்க ஒன்று. “கரிசலின்‌ இருள்கள்‌” என்கிற பா.செயப்பிரகாசம்‌ கதையும்‌ திருமணத்தின்‌ வலியைப்‌ பற்றியது. ஆனால்‌, இங்கு திருமணத்தால்‌ பிரச்னை ஏற்படுவதில்லை. மாறாக, கிராமத்தில்‌ உள்ள ஒடுக்கப்பட்ட மனிதன்‌ ஒருவன்‌ தனது திருமண நாளில்கூட சந்தோஷமாக இருப்பதற்கு உயர்ந்த சாதி மனிதர்களால்‌ அனுமதிக்கப்படுவது இல்லை என்கிற உண்மையைச்‌ சொல்கிறது

Appeal to Indian President against Death Penalty

படம்

பொங்கு தமிழ் இணையத்தில் யதீந்திரா எழுதிய கட்டுரைக்கு பா.செயப்பிரகாசத்தின் எதிர்வினை

தோழருக்கு, தமிழ்ப் பெண்கள் இலங்கை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது பற்றிய தங்கள் கட்டுரை வாசித்தேன். அதற்கு வரவேற்பு நல்கிய கடிதமும் கண்டேன். முதலில் இராணுவத்தில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டது தொடர்பில் அரசாங்கம் போதிய கவனத்துடன் அனுகியிருக்கவில்லை என்று குறிப்பிட்டு நிறுத்திக் கொள்கிறீர்கள். அந்த வெளி நிரப்பப் படவில்லை. தற்செயலான ஒன்றாய் இது தோன்றவில்லை. அந்த வெளி வேண்டுமென்றே விடப்பட்டுள்ளதாய் தெரிகிறது. அரசின் செயல்பாடுகளை விமரிசிக்காமல் ஓரம் போகும் போக்கை சமீபகாலமாய் தங்கள் கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. இன்றைய காலத்தில் எது முக்கியமானதாய் முன்னிறுத்தப்பட வேண்டு என்ற குறியிலக்கு தவறுவதை காணலாம். இது எவ்வகையிலும் இனவழிப்புக்கு உடந்தையாக இருந்த ஐ.நா.வையோ கொலையாளிகளான இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ, எல்லாமும் எடுத்துத் தந்து எதுவுமே தான் செய்யாதது போல் காட்டிக் கொள்ளும் சர்வதேசத்தின் மனச்சாட்சிக்கோ சிறு நெருடலையெனும் தரப் போவதில்லை. மாறாக தமிழ் மனச்சாட்சியையே கேள்விக்குள்ளாக்குகிறது. வரவேற்க வேண்டியது.  நீங்கள் முன்வைக்கும் அத்தனை விமர்சனங்களோடும் பல விழுக்காடுகள் உடன்பாடு எனக்கு;

பா.செயப்பிரகாசம்: நிபந்தனையில்லாத அபூர்வ மனிதர் - பாவண்ணன்

படம்
1982இல் என்னுடைய முதல் சிறுகதை தீபம் இதழில் வெளியானது. சிறுகதையே என் வெளிப்பாட்டுக்கான வடிவம் என்பதைக் கண்டுணர்ந்த பிறகு தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதினேன். ஒருபோதும் பிரசுர சாத்தியத்தைப்பற்றிய யோசனையே எனக்குள் எழுந்ததில்லை.  அப்போதெல்லாம் கதையின் முதல் வடிவத்தை வேகமாக ஒரு நோட்டில் எழுதிவிடுவேன். தொடங்கிய வேகத்தில் சீராக எழுதிச்சென்று ஒரே அமர்வில் முடிப்பதுதான் என் பழக்கம். அடுத்தடுத்து வரும் நாட்களில் அந்தப் பிரதியை மீண்டும் மீண்டும் படித்து தேவையான திருத்தங்களைச் செய்வேன். அதற்குப் பிறகே அந்தச் சிறுகதையை வெள்ளைத்தாட்களில் திருத்தமான கையெழுத்தில் படியெடுப்பேன். ஒவ்வொரு முறையும் கார்பன் தாட்களைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் கூடுதல் பிரதிகள் கிடைக்கும்படி செய்துகொள்வேன். ஒவ்வொரு பிரதியையும் ஒரு கோப்புக்குள் சேமித்து வைப்பேன். ஏழெட்டு சிறுகதைகள் எழுதிமுடிக்கும் வரைக்கும் காத்திருப்பேன். பிறகு அந்தப் பிரதிகளை வரிசையாக அடுக்கி நானே ஒரு பெரிய நோட்டு போல தைத்து, அத்தொகுதிகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வேன். அந்தக் காலத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வாரம்

இறுதித் துளிவரை வாழ்ந்தவர் - களந்தை பீர்முகம்மது

படம்
இலக்கிய உலகைத் தொட்டுக்கொண்டிருந்த பருவம், வாசகனாக - பார்வையாளனாக. திருச்செந்தூர் தோழர்களின் உறவு பலமாக இருந்தது. காணும் இடங்கள்தோறும் அவர்கள் இருந்தார்கள். தாமரை, தீபம், கண்ணதாசன், கணையாழி போன்ற இலக்கிய நறுமணங்களை நாசி சுவாசித்துக்கொண்டிருந்தது. பா.செயப்பிரகாசத்தின் கதைகளை தாமரை இதழில் வாசிக்கிறபொழுதுகளில் ஏதோ ஒரு புதிய உணர்வு மேவி வருவதை உணர்ந்தேன். “நம்ம பக்கத்து ஊர்க்காரர்தான் போலிருக்கு” என்கிற எண்ணம் உண்டாயிற்று. கரிசல் மண்ணின் வாடை அடிக்கிறதே? அதற்கும் மேல் அந்தத் தமிழ்நடை அப்போது காணக் கிடைக்காத தன்மைமிக்கதாகவும் இருந்தது. பின்னர் நானும் எழுத்தாளன் ஆனேன். சூரங்குடி எழுத்தாளர் அ.முத்தானந்தம் அறிமுகம் கிடைத்தபோது, அவர் பா.செ பற்றிக் கொஞ்சம் சொன்னார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சிறுகதைப் போட்டியை நடத்தியபோது, என் கதைக்கும் பரிசு கிடைத்தது. சென்னையில் பரிசளிப்பு விழா. பரிசை வாங்கிக்கொண்டு ஊருக்கும் திரும்பிவிட்டேன். சில வாரங்கள் கழித்து முத்தானந்தத்தின் கடிதம் வந்தது. சென்னை விழாவிற்கு பா.செயப்பிரகாசம் வந்திருந்ததாகவும், அவர் என்னைப் பார்த்ததாகவும் ஆனால் என்னுடன் பேச வா

காணொளி - மூன்று தமிழர் உயிர் காக்க தொடர் பட்டினி போராட்டத்தின் 18 ஆம் நாள் உரை

படம்
மூன்று தமிழர் உயிர் காக்க நடந்த தொடர் பட்டினி போராட்டத்தின் 18 ஆம் நாளான 9-10-2011 அன்று மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில் கலந்து கொண்ட பா.செயப்பிரகாசம் கருத்துரை. பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4

பா.செயப்பிரகாசத்தின் கடைசி நேர்காணல்

படம்
 24 ஆகஸ்ட் 2021 அன்புள்ள அப்பா, நீண்ட காலமாக நான் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்விகளைக் கீழே தொகுத்துள்ளேன்.  அவரவர் வாழ்க்கையின் வேகத்தில் & மனஸ்தாபத்தில் - பல மனம் விட்டுப் பேசவேண்டிய தருணங்களை நாம் அனைவரும் இழந்து விட்டோம். நாம் குடும்பமாக உட்கார்ந்து இவைகளைப் பகிர்ந்து கொண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை (its called family time here in foreign countries). அதனால் தான் இக்கேள்விகள், ஏனென்றால் உங்களை பற்றி முழுவதுமாக அறியாமல் போய்விடுமோ என மனம் அரித்துக் கொண்டேயிருக்கிறது. விருப்பமான கேள்விகளுக்கு பதில் அளிக்கவும். உங்கள் பதில்கள் என் கடைசி வரை நினைவில் வாழும். தீபன் ************************************************************************************************ 2 செப்டம்பர் 2021 தீபன், நீ கேட்ட  கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளேன். தனிப்பட்ட கேள்விகளாயினும், பதில் தர ஒரு வாரம் எடுத்துக் கொண்டது. சுய விமர்சனமாக, தன்னிலை விளக்கமாக, நிறைய நிறைய வாழ்வுக்குள் போய்த் தேடி, தோண்டி எடுத்துக் கொடுக்க வேண்டியதாயிற்று. ’முக்காலே மூணு வீசம்’ சரியாக வந்துள்ளது என நினைக்கிறேன்.  அன்புள்ள