இடுகைகள்

சமீபத்திய இடுகை

சூரியதீபனின்‌ மூன்றாவது முகமும்‌ அதன்‌ முன்னுரையும்‌ - கோ. கேசவன்‌

படம்
சூரியதீபனின்‌ மூன்றாவது முகம்‌ என்ற சிறுகதைத்‌ தொகுப்பு தமிழ்நாடு மக்கள்‌ கலாச்சாரக் கழகத்தின்‌ வெளியீடாக அண்மையில்‌ (டிசம்பர்‌, 1988) வந்துள்ளது. இதற்கு முன்னரே சூரியதீபனின்‌ கதைத்‌ தொகுதிகள்‌ நான்கு வெளியாகியுள்ளன. மூன்றாவது முகம்‌ தொகுப்பில்‌ உள்ள கதைகளையும்‌ அதன்‌ முன்னுரையையும்‌ குறித்துச்‌ சில கருத்துகளைப்‌ பரிமாறிக்‌ கொள்தலே இங்கு நம்‌ நோக்கமாகும்‌. இத்தொகுப்பில்‌ 1981-1986ஆம்‌ ஆண்டுகளில்‌ வெளிவந்த பத்துக்‌ கதைகள்‌ உள்ளன. வாழ்விலிருந்து எனது இலக்கியம்‌ - புரட்சிகர அரசியலும்‌ அமைப்புமே எனது உலைக்‌ களன்‌ எனத்‌ தலைப்பிட்ட நீண்ட முன்னுரை, வெறும்‌ சம்பிரதாய முன்னுரையாக இல்லை. அம்முன்னுரை ஆசிரியரின்‌ வாழ்க்கையையும்‌ இலக்கியக்‌ கோட்பாட்டையும்‌ தெரிவிக்கிறது. ஒரு கலைஞனைப்‌ பற்றித்‌ தெரிந்துகொள்ள இவை இரண்டும்‌ அவசியங்களாகும்‌. சிறுகதைகளுக்குள்‌ போகும்‌ முன்‌ முன்னுரையில்‌ உள்ளனவற்றை காண்போம்‌. சூரியதீபன்‌ தன்‌ பாலிய, இளமைக்‌ காலங்களின்‌ வறுமையைத்‌ தெரிவிக்கின்றார்‌. திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ பக்கம்‌ ஈர்க்கப்பட்டமையையும்‌, பின்னர்‌ அதிலிருந்து விலகி புரட்சிகர அரசியலுக்குத்‌ திரும்பி

கிராமத்து நெருப்பு

பத்துநாள் பேய்மழை கண்மாய் பிடுங்கி கரை, தரை, தெரியாமல் காடெல்லாம் வெள்ளம் அத்தோடு மேகங்கள் எச்சம் காட்டி மேல்மழை அத்தது கண்மாய்க்குள் கிடைத்தால் நெல்காயப்போடலாம் கேடு காலத்திற்கு கிரிக்கெட் ஆடலாம் முந்தின விதைப்பு வெள்ளத்தில் போனது பிந்தின விதை புழுதியில் மருளுது மண்ணுக்குள்ளிருந்து ஆகாயம் பார்த்து மயங்கும் முளை; மண்ணுக்கு மேலிருந்து ஆகாயம் பார்த்து மயங்குவான் சம்சாரி. “சேலை பிழியற அளவு சிந்தினாப் போதும் ஜீவனை முடிஞ்சி வச்சிக்கிருவோம்” என்பாள் செண்பகம் அத்தை. உப்பங்காற்றுக்கு என்ன அவசரம்? உரத்து வீசுது உப்பங்காற்றின்  மழைக்கு அதிகாரம் இல்லை! சொல்லிச்சொல்லி மாய்வார் அய்யா. சூரியனிலிருந்தும் சூழ்ந்த வானிலிருந்தும் கோடி கோடி காலமாய் வீசும் காற்றிலிருந்தும் வழிகிறது இருள் ஈரல்குலை கருகும்வரை  பாய்கிறது நெருப்பு. ஆன்மாவின்  ஆழத்தைத் தொடுகிறது வறட்சி.  - சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்)

வாழ்ந்து கெட்டவர்கள்: பா.செயப்பிரகாசத்தின் அம்பலகாரர் வீடு

கடந்த ஒரு மாதமாக அந்த நண்பரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தாலும் சரி, அவரிடம் பேச வேண்டும் என்ற தேவை ஏற்பட்டாலும் சரி என்னைக் கொஞ்சம் தயார் செய்து கொள்ளவேண்டியிருக்கிறது. இணைப்புக் கிடைத்தவுடன் அவர் வழக்கமாகச் சொல்லும், ‘ஹலோ’ என்பதற்குப் பதிலாக ‘சாமியே சரணம்’ என்று சொல்கிறார். அவர் சொல்கிற அந்த வார்த்தைகளை நானும் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார். இப்படி எதிர்பார்ப்பது இவர் மட்டுமல்ல. தமிழ் நாட்டில் கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் ‘ஐயப்பன் பக்தி’ பண்பாட்டில் தங்களை இணைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள். தாங்கள் மாறிய நிலைக்கு மற்றவர்களையும் மாற்றும் நிர்ப்பந்தத்தைப் பக்திமான்களும், அவர்கள் வணங்கும் கடவுளும் கொடுக்கிறார்கள் என்ற வகையில் பக்தியும் கடவுளும் ஒருவிதத்தில் வரவேற்கப்பட வேண்டியனவே. இந்தப் பக்தியும் கடவுளும் ஏற்படுத்தும் மாற்றம் நிரந்தரமான மாற்றமாக இருந்தால் அதை மறுத்துப் பேசும் வல்லமை எந்த நாத்திகனுக்கும் ஏற்படப் போவதில்லை. ஆனால் அவை அவர்களிடத்தில் தற்காலிகமாகவே இருக்கிறது என்பதானாலேயே நாத்திகவாதமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பக்த

பா.செயப்பிரகாசம் என்னும் தெக்கத்திக்காரர்

படம்
நிலப்பரப்பு சார்ந்தும், சொல்முறைகள் சார்ந்தும், பேசப்பட வேண்டிய கதாமாந்தர்கள் சார்ந்தும் கரிசல் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவர் சூரியதீபன். அந்தப் பெயர் அறிமுகமானது மனஓசை இதழ் வழியாகவே. ஆனால் அதற்கும் முன்பே பா.செயப்பிரகாசம் என்ற பெயர் அறிமுகம். கரிசல் எழுத்தின் முன்னத்தி ஏராகக் கி.ராஜநாராயணன் பெயரை முதலில் வைத்துத் தொடங்கும் பெரும்பாலான பட்டியல்களில் மூன்றாவதாக வந்து நின்றவர் பா.செயப்பிரகாசம். இரண்டாவது பெயர் பூமணி. புரட்சிகரக் கட்சிகளின் கலை இலக்கிய அமைப்புகள் 1980களில் இதழ்களைத் தொடங்கி நடத்தியபோது முழுமையும் புரட்சிக்கு ஒப்புக்கொடுத்துக் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் மனஓசை அதிலிருந்து விலகிய அடையாளத்தோடு தன்னைக் காட்டிக்கொண்டது. அதற்குக் காரணமாக இருந்தவர் அதன் ஆசிரியப் பொறுப்பில் இருந்த சூரியதீபன். மனஓசையை ஓரளவு திகசியின் ஆசிரியப் பொறுப்பில் வந்த தாமரையின் நீட்சியாகவே நடத்தினார். இலக்கிய வடிவங்கள், கதை சொல்லலில் புதிய உத்திகள், புரட்சியோடு தொடர்பற்ற - ஆனால் வர்க்கப் பார்வையால் கவனிக்கப்பட வேண்டிய மாந்தர்கள் உலவும் எழுத்துகளைத் தொடர்ந்து வெளி

கவிஞர்‌ புவியரசுக்கு கடிதம்‌

கவிஞர்‌ புவியரசு அவர்களின்‌ சன் தொலைக்காட்சிப்‌ பேட்டி; புல்லாங்குழல்‌ கவிதைகள் தொப்பு - இவை மீது வரையப்பட்ட கடிதம்‌ சென்னை 01.03.2000 இனிய, தோழமையின்‌ புவி அவர்களுக்கு, நீங்களாக இல்லாமலிருந்தால்‌ நான்‌ இதை எழுதியிருக்க மாட்டேன்‌. எதைச்‌ சொல்வது என்று வருகிற போதே, அதை யாரிடம்‌ வைப்பது என்பதும்‌ சேர்ந்து வருகிறது. இன்று தொலைக்காட்சியில்‌ (1.3.2000) தங்களைக்‌ கண்டேன்‌. தன்னூற்றாக மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. அதே பொழுதில்‌ சூரியத்‌ தொலைக்காட்சி (Sun TV) புவிக்கும்‌, புல்லாங்குழல்‌ கவிஞன்‌ புவிக்கும்‌ நிறைய வித்தியாசம்‌ கண்டேன்‌. சன்‌ தொலைக்காட்சி புவி சமுக மனிதன்‌ - ஒன்றிரண்டு பிசிறுகள்‌ இருந்தாலும்‌ கூட. புல்லாங்குழல்‌ கவிஞன்‌ அதை மறைத்துக்‌ கொண்டு பிறந்திருக்கிறான்‌. பேச்சில் பளிச்சென்று எகிறும் இந்த பாங்கு கவிதைகளில் ஒளிந்து கொண்டு விட்டது. அதை எந்த முடுக்கில் ஒளித்து வைத்து விட்டீர்கள் என்று தேடவேண்டும். இப்படியாக இப்போது ஊரார்‌ சொற்களை உண்டு செரித்துக்‌ கழிகிற வாழ்க்கை... (பக்‌, 15) நான்‌ யோசித்த வேளையில்‌ எனதென்று எதுவுமில்லை என்பது தெரிந்தது (பக்‌, 5) இப்படி நமது இயல்பு இல்லாத குணவாக

மக்கள்‌ கவிதை

படம்
உலகம்‌ ஒரு உலகமாக ஆகி இருக்கிற இந்தக் காலத்தில்‌, அரசியல்‌, பொருளாதாரம்‌ போன்ற துறைகளில் மட்டுமின்றி, கலை, கலாச்சாரத்திலும்‌, உலக நாடுகள் மிகவும் நெருக்கமாகப்‌ பிணைந்துள்ளன. ஒரு மாறுதலுக்கான அம்சம்‌, உலகின்‌ ஒரு பகுதியில்‌ இன்னும்‌ முளை வெடிக்காமல் மூடுண்டு கிடக்கிறபோது வெளியிலிருந்து, உலக நாடுகளிலிருந்து வரும்‌ தாக்கம் அதை உடைக்‌கிறது. பிற துறைகளுக்குப்‌ போலவே, கலாச்‌சாரத்திலும்‌ முகையவிழ்ப்பை வெளித்தாக்கம் செய்வது தவிர்க்க இயலாதது. தமிழில்‌ புதுக்கவிதைகளின்‌ தோற்றத்திற்‌குரிய கலாச்சாரச் சூழல்‌ இருந்தபோது வெளியிலிருந்து தாக்கம் அதனை உருவப்படுத்தியது. தமிழில்‌ புதுக்கவிதைகளின்‌ தோற்றம்‌ மேலை நாடுகளின்‌ இலக்கியத்‌ தொடர்போடு தொடர்‌புடையது. ஆனால் எப்போதும்‌ வெளித்தாக்கம்‌, இங்குள்ள மரபை வளப்படுத்தி, வாசகத்‌ தளத்தோடு இசைவு கொள்ள வேண்டும்‌. "வெளியிலிருந்து எதையும்‌ முற்‌றாகவும்‌, நிரந்தரமாகவும்‌ திணித்து விட முடியாது, ஒரு குறிப்பிட்ட பகுதியின்‌ அகச்‌சூழலுக்குப்‌ பொருந்திவரும் பொழுது மட்டுமே இத்தகு செல்வாக்கு வேர்‌ கொள்ளமுடியும்‌. இல்லையெனில்‌ சில முன்னோடிகளின் முயற்கி என்ற அளவிலே அது ம

நூற்றாண்டுகளினூடாக நடக்கும்‌ குரல்

படம்
“மண்டை மயிரிறுதி மாவிடிச்சவளே மயானம்‌ போறவரை தோசை சுட்டவளே” நாட்டுப்புறச் சொலவடை ஒன்றிருக்கிறது. வார்த்தைகளால்‌ அடுக்கி அடுக்கிச்‌ சொன்னாலும்‌, பெண்ணின்‌ பாதரவு தீரப் போவதில்லை. மெல்லியலாள்‌, பூங்கொடி, அனிச்சமலர்ப்பாதம்‌ போன்ற வர்ணிப்புகள்‌ பெண்‌ என்னும்‌ உழைப்புக்குப்‌ பொருத்தப்பாடுடையன அல்ல: யாவும்‌ கலைமனதின்‌ புனைவுகள்‌ தாம்‌; பெண்ணில்‌ மெல்லியலாளரும்‌ உளர்‌ என்று கருத்து எவருக்கு உண்டோ அவர்கள்‌ பெண்‌ பற்றிய கருத்து நிலையிலிருந்து மாறவேயில்லை என்பது அர்த்தம்‌. மனித குலத்தில்‌ சரிபாதி பெண்கள்‌. அவர்களுக்கு இல்லாள்‌, இல்லத்‌ தலைவி, தாய்‌ போன்ற விருதுளை அளித்துச்‌ சமையலறைப்‌ பண்டமாக ஆக்கி வைத்துள்ளோம்‌. பெண்ணுக்குக் கடமை, பொறுமை, பணிவு, கற்பு என்று வரையறுத்துள்ளோம்‌. அதையே வள்ளுவரும்‌, "பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்" என்று பேசுகிறார்‌. பிறன்மனை நோக்காமை, பொருட்பெண்டிர்‌ போன்ற அத்தியாயங்கள்‌ ஆண்களை நோக்கியவைதாமே என்று கேள்வி எழுகிறது. ஆனால்‌ திருக்குறளில்‌ பெண்ணுக்கு முதன்மை இல்லை; ஆண்‌ சார்ந்தவளாக பெண்‌ நோக்கப்படுகிறாள்‌ என்ற கவிஞர்‌ இன்குலாபின்

அவனே போர்‌ வீரன்‌

படம்
தொகுப்பு முழுதும்‌ பயணிக்க கை கொடுக்கிறது அபூர்வமான கதைமொழி. அரிதிலும்‌ அரிதான கதை மொழி அகரமுதல்வனுக்கு அனாயசமாய்‌ வருகிறது. வேறு எவர்‌ போலவும்‌ எழுதவில்லை; எவருடைய பின்‌ தொடரும்‌ நிழலில்லை. இதுவரை பேசபடாத அவரது அனுபவங்கள்‌ தனித்துவமானவை. அந்த நிலத்தில்‌ வாழ்வு கனவாக இருந்தது. சாவு இயல்பாக இருந்தது. வாழவேண்டுமெனும்‌ கனவு வாழ்க்கை முழுதும்‌ வந்து கொண்டிருக்கிறது; மரணம்‌ அன்றாட நிகழ்வாக நடக்கிறது. அது நெல்‌ விளையும்‌ வயல்வெளி அல்ல. மரணம்‌ விதைக்கும்‌ போர்‌ விளையும்‌ பூமி. நமக்கு வாழ விருப்பம்‌; சாகப்பயம்‌. ஒரு அழகான கனவு போன்ற வாழ்க்கையை வாழவேண்டும்‌ என்ற ஆசை இந்தப்‌ போராளிக்குள்ளுமிருக்கிறது. களம்‌ நீங்கி, இருளடித்த காட்டுக்குள்‌ ஒடி முனையை எய்துகையில்‌, அது வெட்ட வெளியாய்‌ முடிகிறது. தொகுப்பு முழுதும்‌ பயணித்து முடிக்கையில்‌, ஒரு உண்மை புலனாகிறது. இந்த யுத்தத்துக்கு முடிவு கொண்டு வருவது எப்படி? பஃபி செயிண்ட்‌ மேரி என்ற பாடகி சொல்வார்‌: “இனியும்‌ கட்டளைகள்‌ மேலிருந்து, தொலைதாரத்திலிருந்து இறங்குதல்‌ கூடாது அவனிடமிருந்து, உங்களிடமிருந்து என்னிடமிருந்து உதிக்க வேண்டும்‌ சகோதரர்களே, யுத்தத

சொந்த ஊரை நோக்கிப்‌ போகிறது இந்தப்‌ பாதை...

படம்
“வாங்க, போவோம்‌" “அவசரமா?” "நம்ம ஊருக்கு" “நகரம்‌ கசந்துருக்குமே” “வெயிலோட அருமை நிழல்லதானே தெரியும்‌. நுங்குத்தண்ணி இனிப்பு, பிளாஸ்டிக்‌ புட்டித்‌ தண்ணியிலே தானே தெரியுது" “ஆங்‌ அங்ஙன இப்ப ஊரிலயும் அதான கெடக்கு?" “ஆத்தங்கரை, கோரை, கோரைப்‌ பாய்‌, மூங்கில்‌ புதர்‌, புல்லாங்குழல்‌, பறை முழக்கம்‌, காக்கை.” “இங்க இல்லாத காக்காயா?" "இருக்கும்‌. காக்கை வயிற்றில்‌ தூங்கும்‌ வேப்பமர விதை, தவுட்டுத்‌ தொட்டியைப்‌ பார்த்து விட்டு 'அம்மா' என்றைக்கும்‌ மாடு இதெல்லாம்‌ அங்க மட்டும்தான்‌ இருக்கு." "வேற என்ன இருக்கும்‌?” “ஆல மர விழுதில்‌ ஆடும்‌ பசுவின்‌ பனிக்குடம்‌ துள்ளிக்‌ குதித்தோடும்‌ கன்றுக்‌ குட்டியிடம்‌ சொல்லும்‌ 'உன்னைப்‌ பெற்றறெடுத்த வலியின்‌ அடையாளம்‌'. நிலாச்சோறு சாப்பிட்டு விட்டுக்‌ கை கழுவ வந்த போது, வீட்டுக்குப்‌ பின்புறமாய்‌ உள்ள தொட்டியில்‌ கை கழுவ வந்து, மிதந்த 'பெளர்ணமி நிலா', பால்‌ வடியும்‌ பிஞ்சு நெல்மணி, தொண்டைக்‌ கதிரைக்‌ கூட்டம்‌ கூட்டமாய்க்‌ கொத்தித்‌ தின்னும்‌ குருவிகள்‌, வாயில்‌ வாரிப்போட்டுக்‌ கொண்ட குருவிக

மக்கள் கவிஞனுக்கு ஒரு விண்ணப்பம்

படம்
 

இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள இராஜதந்திரம்

சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கா, இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் 1942-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் இந்தியா பற்றிய சுதந்திர இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கும் என்ற டி.எஸ்.சேனநாயக்காவிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார். “விரும்பியோ விரும்பாமலோ இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் இந்தியா பக்கம்தான் அமையமுடியும்” என்பதே. ஆனால், அவர் 1948-இல் சுதந்திரமடைந்த இலங்கையின் முதலாவது பிரதமரான போது இந்தியாவிற்குப் பாதகமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை பிரித்தானிய அரசுடன் செய்து கொண்டார். அதன்படி இலங்கையில் திருகோணமலையில் பிரித்தானிய கடற்படைத்தளமும், கட்டுநாயக்காவில் பிரித்தானிய விமானப்படைத்தளமும் அமைக்கப்பட்டன. இவ்வாறு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவிற்கு எதிராக இந்தியாவின் எதிர்நாடுகளுடன் கூட்டுச்சேரும் போக்கு சிங்களத் தலைவர்களிடம் எப்போதும் உண்டு. பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் தொடர்பாக 1970-ஆம் ஆண்டு இந்தோ-பாக்கிஸ்தானிய யுத்தம் வெடித்தபோது அப்போதைய இலங்கைப் பிரதமராயிருந்த திருமதி.சறீமாவோ பண்டா

மளிகையிலிருந்து புத்தக மாளிகை!

படம்
தொடங்கிய இடம்‌ மளிகைக்‌ கடை. அவர்‌ வேலைப்‌ பங்குதாரர்‌ (working partner). கடை உரிமையாளர்‌ முதலீட்டுப்‌ பங்குதாரர்‌. பெயர்‌ என்னவாக இருப்பினும்‌ வேலைப்பங்காளியான வேலாயுதத்துக்கு - இடது பக்க அடுக்குகளில்‌ புத்தகவரிசை. சாமான்‌ வாங்க வருவோரிடம்‌ சிநேக பாவம்‌ - இந்தப்‌ புத்தகம்‌ வாசித்தீர்களா, அந்த நாவல்‌ படித்தீர்களா என்று விசாரிப்பு; மளிகைச்‌ சிட்டையுடன்‌ புத்தகச்‌ சிட்டையும்‌ தொத்திக்‌ கொள்ளும்‌ - உரிமையாளரிடம்‌ இவ்வாறான சில சலுகைகள்‌; முன்னர்கடை இருந்த இடம்‌ கோவை ரங்கே கவுடர்‌ வீதி, இப்போது, கோவையின்‌ பிரதான மையமான டவுன்ஹாலில்‌ இரண்டு மாடிக்‌ கட்டிடத்தில்‌ விஜயா பதிப்பகம்‌. மளிகையிலிருந்து புத்தக மாளிகை! எங்கிருந்து தொடங்கி எந்தத்‌ தடத்தில்‌ நடந்து, எந்த எல்லையை அடைவது என்பதில்‌ அசாத்தியத்‌ தெளிவு. 2020 - செப்டம்பர்‌ 16. கி.ரா 98; சிறப்பாகக்‌ கொண்டாடத்‌ திட்டமிட்டிருந்தார்‌ வேலாயுதம்‌. அப்போது புதுவையில்‌ வாசித்தேன்‌. கி.ரா.வின் கதைகளில்‌ 'வேட்டி' உச்சம்‌ தொட்ட கதை. அற்புதக்‌ கதையின்‌ நினைவாக அழகான வேட்டி ஒன்று நெய்யச்‌ சொல்லி கி.ரா.வுக்குப்‌ பரிசளிக்க வேண்டுமென்று என்னிடம்‌ பேச

பா.செயப்பிரகாசக்தின்‌ "பள்ளிக்கூடம்‌” நாவல்‌: தமிழர்கள்‌ தமிழர்களாக இல்லை, சாதிகளாகச்‌ சிதைவுற்றுக்‌ கிடக்கிறார்கள்‌

படம்
1 மனித சமூகம்‌ என்பது அதிகாரங்களின்‌ விளையாட்டு மைதானமாக இருக்கிறது. இந்த அதிகாரங்கள்‌ குடும்பம்‌, மதம்‌, கல்வி, அரசு, நீதிமன்றம்‌, கலை இலக்கியம்‌ முதலிய நிறுவனங்களின்‌ வழியாக, ஒவ்வொரு தனிமனிதர்களையும்‌ திருகி, முறுக்கிச்‌ சாவி கொடுத்து மனித இயந்திரமாக ஓட வைக்கின்றன. விளைவு, ஒவ்வொரு மனிதர்களுமே அதிகார இயந்திரங்களாக மாற்றிப்போடப்‌ பட்டவர்கள்தான்‌. இப்படியான இந்த மனிதர்களை ஒரு பெரும்‌ போக்காகப்‌ பிரித்தப்‌ பார்த்தால்‌ இவர்கள்‌ இரண்டே பிரிவுக்குள்‌ வலுவாகச்‌ சமூக வெளியில்‌ இயங்கிக்‌ கொண்டே வருகிறார்கள்‌ எனக்‌ கணிக்க முடிகிறது. ஒன்று, மேற்கண்ட சமூக நிறுவனங்கள்‌ வழியாக அதிகாரத்தைக்‌ குவித்துச்‌ சுரண்டிச்‌ செழிப்பவர்கள்‌. மற்றொன்று, இந்தச்‌ சுரண்டும்‌ அதிகாரத்திற்கு எதிராக மாற்று அதிகாரத்தைக்‌ கட்டமைக்க முயலுகிறவர்கள்‌. அதாவது அறத்தின்‌ பாற்பட்டவர்கள்‌ என்று சமூக வரலாற்றில்‌ அடையாளப்‌ படுத்தப்‌ படுபவர்கள்‌. இந்தப்‌ பெரும்‌ பிரிவில்‌ நாம்‌ யார்‌ பக்கம்‌ போய்ச்சேர்கிறோம்‌ என்பதே நம்‌ வாழ்க்கைக்கான விதியாகி விடுகிறது. இந்தத்‌ தேர்வு, தந்தை பெரியார்‌ ஓரிடத்தில்‌ சொல்வது போல நமது குணநலன்‌ சார்ந்த