இடுகைகள்

சமீபத்திய இடுகை

உச்சி வெயில் - நாவல் வெளியீட்டு நிகழ்வு

படம்
வர்க்க அரசியலை கலை நயத்தோடு பதிவு செய்துள்ளார் பா.செயப்பிரகாசம் சென்னை, செப். 24 - வர்க்க அரசியலை கலை நயத்தோடு பா.செயப்பிரகாசம்  பதிவு செய்துள்ளார் என்று எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கூறினார். மறைந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘உச்சி வெயில்’ நாவல் வெளியீடு மற்றும் மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் பி.வி.பக்தவச்சலத்தின் 16ஆம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் சனிக்கிழமையன்று (செப்.23) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை பி.வி.பக்தவச்சலம்  அறக்கட்டளையும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டக்குழுக்களும் இணைந்து  நடத்தின. நாவலை எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன் வெளியிட, எழுத்தாளர் க.பஞ்சாங்கம் பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய ச.தமிழ்ச்செல்வன், “தமிழ் நவீன இலக்கியத்தின் நுட்பமான படைப்பாளி பா.செயப்பிரகாசம். சிறுகதைகளில் உச்சத்தை தொட்டவர். தடம் புரளாத வாழ்க்கையை வாழ்ந்தவர்”  என்றார். “இந்த நாவல், தற்போதுள்ள  கல்வி முறை குறித்து கேள்வி எழுப்புகிறது; விமர்சிக்கிறது. கிராமங்களில், கல்வி நிலையங்களில் சாதிவெறி எப்படி  ஆட்சி செய்கிறது என்பதை வ

மண்ணின் குரல் - நூல் அறிமுகம்

படம்
கரிசல் மண்ணின் படைப்பாளிகளில் ஒருவரான வீர. வேலுச்சாமியின் சிறுகதைகள், கவிதை, கடிதங்கள், சிறுவர் கதைகள் ஆகியவற்றைத் தொகுத்து உருவான நூல்.  1970களின் தொடக் கத்தில் இவரது நிறங்கள் என்ற தொகுப்பு வெளிவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் சேகரித்த ‘தமிழ்நாட்டு சிறுவர் கதைகள்’  வெளியானது. இவற்றுடன் வேறு சில படைப்புகள் கடிதங்களையும் சேர்த்து இந்த தொகுப்பு உருவாகி உள்ளது. அவரது சிறுகதைகள் எதார்த்த வாழ்விலிருந்து உருவி எடுத்து கோர்த்த அழகான ஆபரணங்கள். பா.செயப்பிரகாசம் குறிப்பிட்டிருப்பதுபோல் ‘மனதைச் சுண்டியிழுக்கும் அளவான உச்சரிப்பு; நம்முடன் நேரடியாகப் பேசும் வாஞ்சனையான உரையாடல்’ கொண்டவை. சிறுவர் கதைகள் பகுதியில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையுமே இன்றைக்கு நாற்பதைக் கடப்பவர்கள் தங்கள் பால்யத்தில் கேட்ட கதைகள் என்பது மிகமுக்கியமானது. குறிப்பாக ‘வால் போயி கத்தி வந்துச்சு’  கதையை இப்போது யாராவது  குழந்தைகளுக்குச் சொல்கிறார்களா? இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி எல்லோரும் எளிமையாகப் படிக்கக் கூடிய நூல் இது. வீர. வேலுச்சாமி படைப்புகள் தொகுப்பு: பா.செயப்பிரகாசம், விலை ரூ 250 வெளியீடு: பரிசல் புத்தக நிலை

பங்குப்பெற்ற நிகழ்வுகள் 1982, 1983 - இந்தியா

படம்
கே.ஏ.குணசேகரன் கலை நிகழ்வு, 22 நவம்பர் (இரவு), 1982 இடம்: மதுரை வடக்கு வெளிவீதி, தேவி திரையரங்கம் அருகில்.  தொடக்க உரை: பா.செயப்பிரகாசம் கிராமிய இசைப்பயிற்சி முகாம் , மே 1983 27-5-1983- இசை உத்தி முறை 28-5-1983 இசைக் கருவிகள் இயக்குமுறை 29-5-1983 பாடல்கள் பயிற்சி முறை இடம்: பாலமேடு செல்லும் வழியில் 20 கி.மீ.தொலைவில் சாத்தையாறு அணைக்கட்டு மாந்தோப்பில் நடத்தியவர்: கே.ஏ.குணசேகரன், கிராமியக் கலையகம் பங்குபெற்றோர்: ச.தமிழ்செல்வன், கிருஷ்ணசாமி, பொதியவெற்பன், சு ப்ரபாரதிமணியன், காவ்யா சண்முக சுந்தரம், சூரியதீபன் (எ) பா.செயப்பிரகாசம், ராஜேந்திரசோழன் (அஸ்வகோஸ்), பாரதி வாசன்

'ஒரு ஜெருசலேம்' சிறுகதை தொகுப்பு ஆய்வு பேட்டி

படம்
நேர்காணல் செய்தவர்: பா.ஜான்சி வீரஓவு நாள்‌: 24.04.2017 1. உங்களுக்கு சிறுகதை எழுதும்‌ ஆர்வம்‌ எப்படி வந்தது? பள்ளி நூலகத்தில்‌ சிறுகதை, நாவல்‌, நாடகம்‌ முழுவதையும்‌ வாசித்த முதல்‌ மாணவன்‌. கல்லூரி வாழ்வில்‌ கவிதைகள்‌ தொடர்பான வாசிப்பும்‌ சமூக உணர்வுகளும்தான்‌ சிறுகதை எழுதுவதற்கானத்‌ தூண்டுதல்‌. 2. சிறுகதை எழுதுவதற்குக்‌ காரணமாக அமைந்தது எது? நேர்மை, நியாயம்‌, மனதில்‌ போட்டு கொமைதல்‌ இதுவே மூலக்காரணமாக அமைந்தது. 3. உங்கள்‌ படைப்பின்‌ முதல்‌ வாசகர்‌? நான்தான்‌. 4. உங்களதுப்‌ பணியினைத்‌ தங்களது படைப்பு பாதித்தது உண்டா? இல்லை. புரட்சிக்கரமான கருத்துகளுக்கு மடங்கி போகும்போது சூரியதீபன்‌ எனும்‌ புனைப்பெயர்‌ பயன்படுத்த வேண்டியதாயிற்று. 5. உங்கள்‌ கதைக்களம்‌ எதைச்‌ சார்ந்தது? கிராமம்‌, கிராமம்‌ சார்ந்த வாழ்க்கை, நகரம்‌, நகரம்‌ சார்ந்த வாழ்க்கை, அலுவலக வாழ்க்கையில்‌ எதிர்கொண்ட பிரச்சினைகளே கதைக்களமாக அமைந்தது. 6. உங்கள்‌ கல்லூரி வாழ்க்கை இனிமை மிகுந்ததா? வறுமை மிகுந்தது. 7. படைப்பாளியின்‌ தனித்தன்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்‌? சமகாலத்திற்கு ஏற்றாற்போல்‌ கருத்துகளை உருவாக்கியும்‌ கொள்கையோட

மக்களுக்கானதே எழுத்து

படம்
பகுதி 1 பகுதி 2 பகுதி 3

மக்களின்‌ கண்களால்‌

படம்
(1989ல் வெளியான இன்குலாப்‌பின் "யாருடைய கண்களால்" புத்தக முன்னுரை) 1989 சனவரி 1-ந்‌ தேதி டெல்லி கார்பெட்‌ பூங்காவில்‌ அவருக்கெனத்‌ தனியாக தயாரிக்கப்பட்ட சிறப்புப்‌ பொமுது போக்கு நிகழ்ச்சிகளை, தனது பரிவாரங்களுடன்‌ ரசித்துக்கொண்டிருந்‌தார்‌ இந்தியாவின்‌ இளைய பிரதமர்‌. அதே பொழுதில்‌ தொழிலாளர்கள்‌ நிறைந்த டெல்லி காசியாபாத்‌ பகுதியில்‌, வீதி நாடகத்தில்‌ மக்கள்‌ பிரச்னைகளை உணர்ச்சிப்‌ பிரவாகமாய்‌ வழங்கிக்கொண்டிருந்‌தார்கள்‌ சப்தர்‌ ஹஸ்மியும்‌ அவரது கலைஞர்களும்‌. சப்தர்‌ ஹஸ்மி கொலை செய்யப்படுகிறார்‌. ஒருவர்‌, இந்தியாவை 21-ம்‌ நூற்றாண்டுக்கு அலக்‌காகத்‌ தூக்கிக்கொண்டு போவதாகப்‌ பிரகடனம்‌ செய்த பிரதமர்‌. "எனது நாடகங்கள்‌ மூலம்‌ போராடும்‌ அமைப்புகளுக்கு மக்களைக்‌ கொண்டு வருவேன்‌" என்று அறிவித்தவர்‌ ஹஸ்மி. மக்கள்‌ நீந்திக்‌ கழிக்கவென இருந்த நீர்த்தடாகத்தை, ஏகாதிபத்திய முதலைகளின்‌ நீச்சல்‌ குளமாக மாற்றிய பணியை வேகமாக முடுக்கிவிட்டிருப்பவர்‌ ஒருவர்‌. உற்பத்தி சாதனங்கள்‌ அனைத்தும்‌ உழைப்‌பவர்களுக்குப் பொதுவுடைமையாக்கல் வேண்டும் என்று விரும்பிய ஹஸ்மி, 'மகாபாரதம்‌, இராமாயணங்களை

కమతంగారి ఇల్లు (அம்பலகாரர் வீடு)

படம்
- Tennati Temmera, Compilation and translation by Sa Vem Ramesh (October 2021)

ஆய்வு: பள்ளிக்கூடம் நாவல் - பன்முகப்பார்வை

படம்

ஆய்வு: 'ஒரு ஜெருசலேம்' சிறுகதைத் தொகுப்பு காட்டும் சமுதாயம்

படம்
 

கந்தர்வன் கடிதம்

படம்
பி 5/4, ஆலங்குளம் ஹவுசிங் யூனிட்,  புதுக் கோட்டை – 622005 19-01-1995 அன்புத் தோழர் ஜே.பி அவர்களுக்கு, வணக்கம். இன்று நூலஞ்சலில் ‘எண்பதுகளில் சிறுகதை’ பற்றிய ஒரு நூலை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். இதற்கு ஒரு முக்கிய காரணமுண்டு. உங்களோடு எனக்கிருந்த நெருக்கமும் உங்கள் எழுத்தும் எனக்கு இன்றும் ஆதர்சம். மேற்கண்ட தலைப்பில் இரண்டாண்டுகளுக்கு முன் மதுரைப் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு அது. ஒரு முன்னோடி எழுத்தாளரான உங்களைக் குறிப்பிட்டு எந்தக் கட்டுரையாளரும் சொல்லாதது எனக்குக் கவலயளித்தது. என் கட்டுரையின் கடைசிப் பகுதியில் அந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தேன். அதை நீங்கள் படிக்க வேண்டுமென்பதற்காக இதை உங்களுக்கு அனுப்பவில்லை.  நீங்கள் இப்போது எழுதாமலிருப்பது சரியல்லவென்றும், எழுத உங்களை ரோசப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் அனுப்பியிருக்கிறேன். முரட்டு அரசியல் மனசில் ஏறியதற்கும் உங்கள் மென்மைக் குணமே காரணம்.  இரண்டுமே என் போன்றோரை உங்கள் பால் ஈர்த்தது. எந்த அரசியல் நிலைப்பாடும் கலைஞனைப் படைக்க விடாமல் செய்துவிடக்கூடாது. நீங்கள் எழுத வேண்டும். இன்னொன்று ஒரு

அன்புள்ள ரவி

படம்
5 ஆகஸ்ட் 2012 அன்புள்ள ரவி, தங்களிடமிருந்து செய்தி எதுவும் வாராமையால் ஒரு நீண்ட, செறிவான படைப்புக்கு அமர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கால இடைவெளி அதற்கானதாகத் தெரிகிறது. நடைமுறை ரீதியில் அந்த இடத்திற்கு என்னால் சென்றடைய முடியாமலிருப்பதுதான் எனது அவலம். அது ஒரு சுகக்கேடு. பாலைகள் நூறு வாசித்த பின் புதுவை ஞானம் - இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர்; மார்க்சியர்.(தனக்கு தெரிந்த ஆரம்பகால மார்க்சிய நிலையில் நின்று இன்றும் தன்னையும் தன் செயல்பாடுகளையும் உலகையும் காண்பவர்.) ஆனால் மிகச்சீரிய நுண்ணிய கிரகிப்பும் எடுத்துரைப்பும் கொண்ட விமர்சகர். பாலைகள் நூறு படித்தபின் "இலக்கியம் என்பது வாழ்க்கையைக் கண்டு கொள்வது. வாழ்க்கையை முன்னுக்குக் கொண்டு செல்வது" என்ற கார்க்கியின் வாசகத்திற்கு நிரூபணமாக இருப்பதாகச் சிலாகித்தார். ரொம்பவும் ஈர்க்கபட்டதாக தெரிவிக்கச் சொல்கிறார். பலருடைய எழுத்துக்கள் ஈழத்தமிழரின் நிலம் பெயர்தல் பற்றிக் கூறிக்கொண்டு போகையில் இவருடைய கதைகளே அதற்கான நிர்ப்பந்தங்கள் பற்றிப் பேசுகின்றன என்றார். நீங்கள் முடிந்தால் அவருடன் பேசலாம். இங்கு புதுச்சேரியில் தான் வாழ்கிறார். வீட

ஜூவி கட்டுரை

18 செப்டம்பர் 2012 தோழர்.  ஜூவி. கட்டுரையை அனுப்பியிருந்தேன். படித்தீர்களா? அன்புடன் கவின் மலர் 18 செப்டம்பர் 2012 தோழர், ஜூ.வி படித்தேன். விமர்சிக்கவோ குறை சொல்லவோ எதுவும் இல்லை. நன்றாகவே வந்துள்ளது. ஒவ்வொரு விசயத்தையும் வித்தியாசம், வித்தியாசமான முறைகளில் வெளிப் படுத்த வேண்டும் - ஒற்றை முறை அல்ல. அதனையே இதில் செய்துள்ளதாகக் காணுகிறேன். ஆனால் உண்மையை மறுப்பதாக இல்லை. அதையே தமக்குள் வரித்து உள் வைத்திருக்கிற ஒழுங்குகளை உடைப்பதாக இவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் எனத் தெரிகிறது. இவர்கள் விரும்பும் அல்லது கருதும் ஒழுங்குகளோடு வந்தால் அது ஒரு உயிர்ப்பற்ற வெளிப்பாடாக இருக்கும்.

மாவீரன் கேணல் பரிதியின் கொலை

படம்
10 நவம்பர் 2012 ஈழப் பிரதேசத்துக்குள் நடத்தி முடித்த யுத்தத்தை  இன்று புலத்துக்கும் நீட்டியிருக்கிறாரகள். புலம் பெயர் ஈழர்களின் கருத்துப் பரப்பல் இலங்கைப் பாசிச சக்திகளுக்கு தீராத தலையிடியாக வருகிறது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாத வேளை பாசிசம் ஆயுதத்தால் மவுனிக்க முயலுகிறது. அதை தன் உள்ளாட்கள் இல்லாமல் செய்ய இயலாது. இதுதான் மாவீரன் கேணல் பரிதியின் கொலை. எல்லை தாண்டிய பயங்கர வாதமும் இதுதான். செப்டெம்பர் 11, 2001-ல் அமெரிக்கா எல்லை தாண்டிய  பயங்கரவாதம் என்றது. அதைக் காரணம் காட்டி சதாம் ஹுசேனை அழித்தது. உலக நாடுகள் மேலெல்லாம் பாய்ந்து நாடகத்தை அரங்கேற்றியது. இந்தியா 2008-ல் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என மும்பைத் தாக்குதலை சுட்டிக் காட்டி உள்நாட்டு மக்களை வேட்டையாடியது. இதை இப்போது இலங்கையின் ராஜபக்‌ஷேக்களும் செய்கிறார்கள். இன்னும் விடுதலை விடியல் தெரியும் வரை நம் பணிகள் தொடருகின்றன. வால்ட் விட்மன் கவிதை வரிகளை கேணல் பரிதிக்கும் மாவீரர் நினைவுக்கும் காணிக்கை யாக்குவொம். “விடுதலைக்காக விதைக்கப்பட்ட கல்லறைகளில் விடுதலை விதை வளராத கல்லறை எதுவும் இல்லை.” பா.செயப்பிரகாசம்.

தருமபுரி அடக்குமுறையைக் கண்டித்து அறிக்கை

படம்
28 நவம்பர் 2012 To: நிர்மலா கொற்றவை தோழர், முந்திய அஞ்சல் கண்டிருப்பீர்கள். நான் வெளிநாட்டில் இருப்பதால், 30-ஆம் நாள் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் எனது இச்சிறு அறிக்கையை வாசிக்க முடிந்தால் நல்லது. சிறு அளவிலேயே எழுதியுள்ளேன். குற்றவாளிக் கூண்டில் ஐ.நா - என்ற குரல் உலகெங்கும் எழுந்துள்ளது. கொலைக்கு நீதி வழங்க வேண்டியவர்களே, கொலைக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பது மறுக்க இயலாத குற்றச் சாட்டு. அது போலவே சாதீய ஒடுக்கு முறைக்கு எதிராய் நின்றதாய், இப்போதும் நிற்பதாய் பாவனை செய்தவர்கள், இன்று பகிரங்கமாய் குற்றவாளிகளாக நிறுத்தப் படுகிறார்கள். புரட்சியாளர் பாலன் வீரத் திருஉரு நிற்கிற அதே நாயக்கன் கொட்டகையில் நடந்த சூரையாடல் எல்லாம் ஒரு நாடகம் என்கிறார் பா.ம.க ராமதாஸ். அதிகரித்துக் காட்டுவதற்காக தாழ்த்தப்பட்டவர்களே அவர்கள் குடிசையைக் கொளுத்திக் கொண்டார்கள் என்கிறார். "கடந்த ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் வன்னிய குலப் பெண்கள் இருபதுபேர் தாழ்த்தபட்ட சாதியினரால் காதல் நாடகத்துக்கு இரையாகி விரட்டப்பட்டிருப்பதாக," காடுவெட்டி குரு கோபாவேசப்படுகிறார். மாமல்லபுரத்தில் பா.ம.க நடத்திய வன்

அன்புள்ள பஞ்சுவுக்கு

படம்
7 டிசம்பர் 2012 அன்புள்ள பஞ்சுவுக்கு, ஆஸ்திரேலியா நலமாக வந்தடைந்தேன். பருவநிலை இதமாக உள்ளது. கையோடு காலச் சுவடு எடுத்து வந்தேன். தங்களின் மதுரை நிகழ்வின் பேச்சுச் சுருக்கம் வாசித்தேன். சுய தரிசனம் தெளிவாகக் கிடைத்துள்ளது. அதனூடாகவே விமர்சனமும் வெளிப்படக் கிடைத்தது. காலச்சுவடு மூலம் வெளிப்பத்தப்படும் எந்தப் பொருளும் கருத்தும் கவனத்தில் கொள்ளப்படும் என்பதை நயமான தன்மையில் காட்டியுள்ளீர்கள். மட்டுமல்ல, பல நேரங்களில் விவாதத்திற்குரியதாகவும் ஆக்கப்படும் எனவும் கவனப்படுத்தியிருக்கிறீர்கள். தமிழ்க் கலை இலக்கியச் சூழலின் உள் செயல்படும் அரசியல் பற்றியும் சுய அனுபவங்களிலிருந்தே சுட்டிக் காட்டியுள்ளிர்கள். ஒவ்வொருவர் வாழ்வின் இலக்கிய முயற்சிகளும் ஒவ்வொரு வகையாகவே தொடங்கும். அதற்கென்று பொதுத் தன்மை என இருப்பதில்லை. இருக்க வேண்டுமென்பதும் இல்லை. தங்களின் உரையில் இது மையம் கொண்டுள்ளது. வாழ்த்துக்கள்.

தொடரும் தோழமை

படம்
Date: 31 Oct 2015 To: siva gnanam, Gnanamoorthy Santhakumar  அன்பு நண்பருக்கு, நலம் தானே? நான் பா.செயப்பிரகாசம். நினைவிருக்கும். நோர்வேயிலிருந்து  புறப்படுகையில் ரூபன் சிவராஜா விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஏற்றி அனுப்பினார். லேசாய்ப் பொஸுபொஸு வென்று தூறல் வீசிய காலைப் பொழுதாக அது அமைந்தது. இனிய காலையும், அது போன்ற தங்களின் இனிய விருந்தோம்பலும் பழகுதலும் நெஞ்சை நனைத்திருந்தன. தமிழ் மண்ணில் இறங்கியதும் அதனை அஞ்சலில் அறிவிக்க எண்ணினேன். கி.பி.அரவிந்தன் நூல் அறிமுக நிகழ்வுகளினை இங்கு வந்ததும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டி வந்ததால் உடன் அஞ்சலிட சாத்தியமற்றுப் போயிற்று. அக்டோபர் 24- மதுரை,  25- தஞ்சை என சிறப்புடன் நடந்தன. நவம்பர் 7-ல் சென்னையில் நடத்த உள்ளோம். அழைப்பு பார்வைக்கு இணைத்துள்ளேன்.  இந்திய சமூகம் வேறொரு திசை நோக்கிச் செல்வதை தாங்கள் அறிவீர்கள். காலத்தின் தொடர்ச்சியை நூற்றாண்டு என்கிறார்கள். நூற்றாண்டுகளின் தொடச்சியினை யுகம் என்கிறோம்; இது இருண்ட காலம். இருண்டகாலத்தின் தொடச்சியான இன்றைய இது கறுப்பு யுகம். காவிகளின், மதவாத சக்திகளின், சகிப்புத் தன்மையின்மையின் கறுப்பு யுகம்.

கி.பி.அரவிந்தன் ஒரு கனவின் மீதி - நூல் அறிமுக நிகழ்வு, 2015

படம்
நோர்வே -  06.09.2015 ‘கி.பி அரவிந்தன்: ஒருகனவின் மீதி’ – நோர்வேயில் நடந்த நூல் அறிமுகம் காலம் : 06.09.2015 ( ஞாயிறு ) நேரம் :  மாலை  4  மணி இடம் : Linderud  பாடசாலை   மண்டபம்  - Statsråd Mathiesens vei 27, 0594 Oslo ‘கி.பி அரவிந்தன்:ஒருகனவின் மீதி’ எனும் நூல் ஈழப்போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர், சிந்தனையாளர் எனத் தமிழ்ச் சூழலில் பன்முகப் பரிமாணங்களையும் வகிபாகத்தினையும் கொண்டிருந்த கி.பி அரவிந்தன் அவர்களின் நினைவுகளைத் தாங்கி தமிழகத்தில் உருவாக்கம் பெற்றுள்ளது. இந்நூல் புலம்பெயர் நாடுகளில் முதன்முறையாக நோர்வேயில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. தமிழ்3 வானொலியின் ஏற்பாட்டில் 06-09-15 ஒஸ்லோவில் இதன் அறிமுகநிகழ்வு இடம்பெற்றது. ஆயுதப் போராட்டத்தை முன்மொழிந்து, அதில் துணிந்து இறங்கிய முன்னோடிகளில் ஒருவராக, தமிழீழ விடுதலைக்கான கருத்தியல் ரீதியான, சிந்தனை ரீதியான பங்களிப்பாளராக, தமிழின் முக்கிய இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவராக என மூன்று பெரும் இயங்குதளங்களில் அரவிந்தனது வகிபாகத்தைக்  குறிப்பிடலாம். இம்மூன்று இயங்குதளங்களும் முறையே தாயகம், தமிழகம், புலம் என மூன்று வெவ்வேறு வாழ்விடங்களில்,

லீனா மணிமேகலைக்கு படைப்பாளிகள் கண்டனம்

01 பிப்ரவரி 2014 லீனா மணிமேகலை ஈழத்தமிழர் தோழமைக்குரல், ஈழத்தமிழர், மீனவச் சமூகம், மற்றும் பழங்குடியினரின் போராட்டங்களை அவமதிப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதனை வெளிப்படுத்தி அவரது உண்மை உருவத்தையும் ஆதிக்க அரசியல் குணத்தையும் புலப்படுத்தியதற்காக பெண்ணுரிமைப் போராட்டத்தை தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு படைப்பாளியை மனநோய் மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன் எனத் திமிர்த்தனத்துடன் கூச்சலிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சுகிர்தராணி பொன். சந்திரன், PUCL தனலஷ்மி, PUCL இன்பா சுப்ரமணியன் ஒவியர் காந்திராஜன் லஷ்மி சரவணக்குமார் பிரேம் மகேஷ் – அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம் கு. பாரதி –புரட்சி கயல் மாறன் பாஸ்கர் வழக்கறிஞர் லிங்கன் விமலா – புதுச்சேரி மீனவப் பெண்கள் இயக்கம் பெரியாண்டி பொம்மி மஞ்சுளா காஞ்சனா அன்பு தவமணி சுரேஷ் ராமசாமி செல்வக்குமார் பாண்டி பா.செயப்பிரகாசம் இன்குலாப் கோவை. ஞானி பேரா. சரஸ்வதி தாமரை தமிழ்நதி பாமா பிரபஞ்சன் ஜமாலன் தமிழவன் பரமேஸ்வரி பஞ்சாங்கம் வறீதையா கான்ஸ்தந்தீன் வழக்கறிஞர் ரஜினி அ.யேசுராசா தீபச்செல்வன் அ.இரவி பரணி கிருஷ்ணரஜனி ஜெரோம் கல்பனா சக்கேஷ் சந்

கரிசல்காட்டுச் சூரியன் காலத்தில் கரைந்தது - சூரியதீபன் (எ) பா.செயப்பிரகாசம் (1941- 2022)

படம்
முற்போக்கு இலக்கிய வட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியவர் ஜே.பி. எனத் தோழர்களால் அன்போடு அழைக்கப் பட்ட சூரியதீபன்(எ) பா.செயப்பிரகாசம் அவர்கள். எழுத்தாளர்களிலேயே மிகவும் மாறுபட்டவர் ஜே.பி. எழுத்தோடு வேலை முடிந்து விட்டது என ஓய்வெடுப்பவரல்ல இவர். மக்களின் மீதான தாக்குதல் எங்கிருந்து வந்தாலும் களத்தில் குதிக்கும் போராளி. போராட்ட உணர்வு அவரது இரத்த அணுக்களிலேயே இருந்த ஒரு நற்கூறு ஆகும். அதனால்தான் கல்லூரிக் காலத்திலேயே இந்தித் திணிப்பை எதிர்த்து இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இத்தகைய போராட்டக் கனல் இறுதிவரை அவரது உள்ளத்தில் கனன்று கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொழிக் காப்புப் போராட்டமானாலும், ஈழத் தமிழர் சிக்கலானாலும், எழுதுகோலை வாளாகப் பயன்படுத்தியவர் அவர். மனித உரிமை மீறல் குறித்து எந்தவொரு முன்னெடுப்பினை எடுக்க நினைத்தாலும், எழுத்தாளர்களில் நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் ஜே.பி. அவர்கள்தான். முற்போக்கு இலக்கிய உலகில் அடர்த்தியான சுவடுகளைப் பதித்த "மனஓசை" இதழ் மூலம் அவராற்றிய பணி காத்திரமானது. எண்ணற்ற இளம் எழுத்தாளர்களை ஊ

பள்ளிக்கூடம் நாவல் - வாசகர் மதிப்புரை

படம்
புத்தகத்தலைப்பு: பள்ளிக்கூடம் ஆசிரியர்: பா.செயப்பிரகாசம் ** தமிழ்நாட்டின் ஒரு சிறுநகரமான வில்வநத்தத்தின் அரசு உயர்நிலைப் பள்ளியே கதை மையம்.  ** இந்தப் பள்ளியே அனைத்துக்கும் சாட்சியாயிருப்பதால் நாவலுக்கும் “பள்ளிக்கூடம்” என்று பெயர் வைத்திருக்கிறார் ** நாவலின் தலைப்பு பள்ளிக்கூடம் என்றிருப்பதால் வெறும் ஆசிரியர்கள், மாணவர்களோடு கதை நின்றிடவில்லை. ** பள்ளிக்கூடம் ஆலமரத்தின் மையத்தூணாய் இருக்க பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதியம், பெண்ணியம் என்று கதையின் போக்கு வளைந்து நெளிந்து கிளைபரப்பி விரிந்து கொண்டே செல்கிறது. ** எத்தனை கிளை பரப்பி நாவல் விரிந்தாலும் நாவலின் மையமாய் இருப்பது மனிதம்! ** புறக்கணிக்கப்படும் அரசுப்பள்ளிகள், பாதிக்கப்படும் ஆசிரியர்கள், மாணவர்கள், எளியவர்கள், பெண்கள் , என அனைவரையும் திகட்டத் திகட்ட நேசித்த ஒரு எளிய “மனிதனின்” எழுத்துக்களே இந்நாவல். ** நாவலின் கதைப்போக்கு சுருக்கமாய்…. வில்வநத்தம் ஒரு சிறு நகரம். சுற்று வட்டார கிராமங்கள் அனைத்துக்குமான அரசு உயர்நிலைப்பள்ளி அங்குள்ளது. சமீபகாலத்தில் அப்பகுதியில் பிரபலமான தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகளால் அப் பள்ளியின் மாணவர்கள

தாலியில் பூச்சூடியவர்கள் கதை - வாசகர் மதிப்புரை

படம்
"தாலியில் பூச்சூடியவர்கள்" பா.செயப்பிரகாசம் அவர்களின் கதை. திரு எஸ்.ரா.வின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு சிறுகதைகள் தொகுப்பிலுள்ள ஒரு கதை. தீண்டாமை என்ற விஷப் பாம்புக்கு ஏராளமான கொடும்பற்கள். அதில் ஒன்றை படம் பிடிக்கிறது கதை. தீண்டாமையின் பெயரில் கடைப்பிடிக்கப்படும் பத்தாம் பசலித் தனம், சுயநலம், நரித்தனம் என ஒவ்வொன்றையும் தோல் உரிக்கிறது இக்கதை. பேச்சுவழக்கில் சாதிய பெயர்களை குறிப்பிட்டு கதை சொல்லும் பாங்கில் நிதர்சனம் நெஞ்சில் அறைகிறது. சாதி அமைப்புகளின் அடக்குமுறைகளின் கிராமிய மனிதர்களின் வாழ்க்கைமுறை எளிய மக்களின் துயரம் என போகிற போக்கில் அனைத்தையும் சொல்லிவிடுகிறது. தைலி என்ற பள்ளர் இனத்தை சேர்ந்த பெண் புதிதாக திருமணமாகி ஒரு ஊருக்கு வருகிறாள். அங்கு அவள் எதிர்கொள்ளும் சாதிய கொடுமைகளையும் தீண்டாமையின் இரட்டை வேடத்தையும் கூறி, எளியவர்களே என்றும் ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார்கள் என்ற முடிவுடன் கதை நம் நினைவுகளில் தொடர்கிறது. இக்கதை என்னுள் ஏற்படுத்திய கேள்விகள்: தீண்டாமை இன்று முழுவதும் ஒழிந்து விட்டதா? உனக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கும் தீண்டாமையின் எச்சத்தை களைய நாம் தயாரா? இன்ற