சூரியதீபனின் மூன்றாவது முகமும் அதன் முன்னுரையும் - கோ. கேசவன்
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSm0Gjj0xQDoXtymuknl2_ONLy4WmyZ4TxZlLkBRLqtq69mWBtxcfII7-Qel1gHAj-0_XCg-lUMsaiRe8gX9dN_pXs_l-P93uDxwSL7Qn3CL1bvAzTnna62U6hrNc_ghULcMumygsPM6321_hqC1IFB66023pWSjeY3RrYnSwMuMiod34PdxyUlcTcj_SX/w275-h400/20190908_174832.jpg)
சூரியதீபனின் மூன்றாவது முகம் என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு மக்கள் கலாச்சாரக் கழகத்தின் வெளியீடாக அண்மையில் (டிசம்பர், 1988) வந்துள்ளது. இதற்கு முன்னரே சூரியதீபனின் கதைத் தொகுதிகள் நான்கு வெளியாகியுள்ளன. மூன்றாவது முகம் தொகுப்பில் உள்ள கதைகளையும் அதன் முன்னுரையையும் குறித்துச் சில கருத்துகளைப் பரிமாறிக் கொள்தலே இங்கு நம் நோக்கமாகும். இத்தொகுப்பில் 1981-1986ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பத்துக் கதைகள் உள்ளன. வாழ்விலிருந்து எனது இலக்கியம் - புரட்சிகர அரசியலும் அமைப்புமே எனது உலைக் களன் எனத் தலைப்பிட்ட நீண்ட முன்னுரை, வெறும் சம்பிரதாய முன்னுரையாக இல்லை. அம்முன்னுரை ஆசிரியரின் வாழ்க்கையையும் இலக்கியக் கோட்பாட்டையும் தெரிவிக்கிறது. ஒரு கலைஞனைப் பற்றித் தெரிந்துகொள்ள இவை இரண்டும் அவசியங்களாகும். சிறுகதைகளுக்குள் போகும் முன் முன்னுரையில் உள்ளனவற்றை காண்போம். சூரியதீபன் தன் பாலிய, இளமைக் காலங்களின் வறுமையைத் தெரிவிக்கின்றார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டமையையும், பின்னர் அதிலிருந்து விலகி புரட்சிகர அரசியலுக்குத் திரும்பி