இடுகைகள்

சமீபத்திய இடுகை

தொடரும் தோழமை

Date: Sat, 31 Oct 2015 To: siva gnanam, Gnanamoorthy Santhakumar  அன்பு நண்பருக்கு, நலம் தானே? நான் பா.செயப்பிரகாசம். நினைவிருக்கும். நோர்வேயிலிருந்து  புறப்படுகையில் ரூபன் சிவராஜா விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஏற்றி அனுப்பினார். லேசாய்ப் பொஸுபொஸு வென்று தூறல் வீசிய காலைப் பொழுதாக அது அமைந்தது. இனிய காலையும், அது போன்ற தங்களின் இனிய விருந்தோம்பலும் பழகுதலும் நெஞ்சை நனைத்திருந்தன. தமிழ் மண்ணில் இறங்கியதும் அதனை அஞ்சலில் அறிவிக்க எண்ணினேன். கி.பி.அரவிந்தன் நூல் அறிமுக நிகழ்வுகளினை இங்கு வந்ததும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டி வந்ததால் உடன் அஞ்சலிட சாத்தியமற்றுப் போயிற்று. அக்டோபர் 24- மதுரை,  25- தஞ்சை என சிறப்புடன் நடந்தன. நவம்பர் 7-ல் சென்னையில் நடத்த உள்ளோம். அழைப்பு பார்வைக்கு இணைத்துள்ளேன்.  இந்திய சமூகம் வேறொரு திசை நோக்கிச் செல்வதை தாங்கள் அறிவீர்கள். காலத்தின் தொடர்ச்சியை நூற்றாண்டு என்கிறார்கள். நூற்றாண்டுகளின் தொடச்சியினை யுகம் என்கிறோம்; இது இருண்ட காலம். இருண்டகாலத்தின் தொடச்சியான இன்றைய இது கறுப்பு யுகம். காவிகளின், மதவாத சக்திகளின், சகிப்புத் தன்மையின்மையின் கறுப்பு ய

கி.பி.அரவிந்தன் ஒரு கனவின் மீதி - நூல் அறிமுக நிகழ்வு, 2015

படம்
நோர்வே -  06.09.2015 ‘கி.பி அரவிந்தன்: ஒருகனவின் மீதி’ – நோர்வேயில் நடந்த நூல் அறிமுகம் காலம் : 06.09.2015 ( ஞாயிறு ) நேரம் :  மாலை  4  மணி இடம் : Linderud  பாடசாலை   மண்டபம்  - Statsråd Mathiesens vei 27, 0594 Oslo ‘கி.பி அரவிந்தன்:ஒருகனவின் மீதி’ எனும் நூல் ஈழப்போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர், சிந்தனையாளர் எனத் தமிழ்ச் சூழலில் பன்முகப் பரிமாணங்களையும் வகிபாகத்தினையும் கொண்டிருந்த கி.பி அரவிந்தன் அவர்களின் நினைவுகளைத் தாங்கி தமிழகத்தில் உருவாக்கம் பெற்றுள்ளது. இந்நூல் புலம்பெயர் நாடுகளில் முதன்முறையாக நோர்வேயில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. தமிழ்3 வானொலியின் ஏற்பாட்டில் 06-09-15 ஒஸ்லோவில் இதன் அறிமுகநிகழ்வு இடம்பெற்றது. ஆயுதப் போராட்டத்தை முன்மொழிந்து, அதில் துணிந்து இறங்கிய முன்னோடிகளில் ஒருவராக, தமிழீழ விடுதலைக்கான கருத்தியல் ரீதியான, சிந்தனை ரீதியான பங்களிப்பாளராக, தமிழின் முக்கிய இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவராக என மூன்று பெரும் இயங்குதளங்களில் அரவிந்தனது வகிபாகத்தைக்  குறிப்பிடலாம். இம்மூன்று இயங்குதளங்களும் முறையே தாயகம், தமிழகம், புலம் என மூன்று வெவ்வேறு வாழ்விடங்களில்,

லீனா மணிமேகலைக்கு படைப்பாளிகள் கண்டனம்

01 பிப்ரவரி 2014 லீனா மணிமேகலை ஈழத்தமிழர் தோழமைக்குரல், ஈழத்தமிழர், மீனவச் சமூகம், மற்றும் பழங்குடியினரின் போராட்டங்களை அவமதிப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதனை வெளிப்படுத்தி அவரது உண்மை உருவத்தையும் ஆதிக்க அரசியல் குணத்தையும் புலப்படுத்தியதற்காக பெண்ணுரிமைப் போராட்டத்தை தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு படைப்பாளியை மனநோய் மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன் எனத் திமிர்த்தனத்துடன் கூச்சலிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சுகிர்தராணி பொன். சந்திரன், PUCL தனலஷ்மி, PUCL இன்பா சுப்ரமணியன் ஒவியர் காந்திராஜன் லஷ்மி சரவணக்குமார் பிரேம் மகேஷ் – அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம் கு. பாரதி –புரட்சி கயல் மாறன் பாஸ்கர் வழக்கறிஞர் லிங்கன் விமலா – புதுச்சேரி மீனவப் பெண்கள் இயக்கம் பெரியாண்டி பொம்மி மஞ்சுளா காஞ்சனா அன்பு தவமணி சுரேஷ் ராமசாமி செல்வக்குமார் பாண்டி பா.செயப்பிரகாசம் இன்குலாப் கோவை. ஞானி பேரா. சரஸ்வதி தாமரை தமிழ்நதி பாமா பிரபஞ்சன் ஜமாலன் தமிழவன் பரமேஸ்வரி பஞ்சாங்கம் வறீதையா கான்ஸ்தந்தீன் வழக்கறிஞர் ரஜினி அ.யேசுராசா தீபச்செல்வன் அ.இரவி பரணி கிருஷ்ணரஜனி ஜெரோம் கல்பனா சக்கேஷ் சந்

கரிசல்காட்டுச் சூரியன் காலத்தில் கரைந்தது - சூரியதீபன் (எ) பா.செயப்பிரகாசம் (1941- 2022)

படம்
முற்போக்கு இலக்கிய வட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியவர் ஜே.பி. எனத் தோழர்களால் அன்போடு அழைக்கப் பட்ட சூரியதீபன்(எ) பா.செயப்பிரகாசம் அவர்கள். எழுத்தாளர்களிலேயே மிகவும் மாறுபட்டவர் ஜே.பி. எழுத்தோடு வேலை முடிந்து விட்டது என ஓய்வெடுப்பவரல்ல இவர். மக்களின் மீதான தாக்குதல் எங்கிருந்து வந்தாலும் களத்தில் குதிக்கும் போராளி. போராட்ட உணர்வு அவரது இரத்த அணுக்களிலேயே இருந்த ஒரு நற்கூறு ஆகும். அதனால்தான் கல்லூரிக் காலத்திலேயே இந்தித் திணிப்பை எதிர்த்து இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இத்தகைய போராட்டக் கனல் இறுதிவரை அவரது உள்ளத்தில் கனன்று கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொழிக் காப்புப் போராட்டமானாலும், ஈழத் தமிழர் சிக்கலானாலும், எழுதுகோலை வாளாகப் பயன்படுத்தியவர் அவர். மனித உரிமை மீறல் குறித்து எந்தவொரு முன்னெடுப்பினை எடுக்க நினைத்தாலும், எழுத்தாளர்களில் நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் ஜே.பி. அவர்கள்தான். முற்போக்கு இலக்கிய உலகில் அடர்த்தியான சுவடுகளைப் பதித்த "மனஓசை" இதழ் மூலம் அவராற்றிய பணி காத்திரமானது. எண்ணற்ற இளம் எழுத்தாளர்களை ஊ

பள்ளிக்கூடம் நாவல் - வாசகர் மதிப்புரை

படம்
புத்தகத்தலைப்பு: பள்ளிக்கூடம் ஆசிரியர்: பா.செயப்பிரகாசம் ** தமிழ்நாட்டின் ஒரு சிறுநகரமான வில்வநத்தத்தின் அரசு உயர்நிலைப் பள்ளியே கதை மையம்.  ** இந்தப் பள்ளியே அனைத்துக்கும் சாட்சியாயிருப்பதால் நாவலுக்கும் “பள்ளிக்கூடம்” என்று பெயர் வைத்திருக்கிறார் ** நாவலின் தலைப்பு பள்ளிக்கூடம் என்றிருப்பதால் வெறும் ஆசிரியர்கள், மாணவர்களோடு கதை நின்றிடவில்லை. ** பள்ளிக்கூடம் ஆலமரத்தின் மையத்தூணாய் இருக்க பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதியம், பெண்ணியம் என்று கதையின் போக்கு வளைந்து நெளிந்து கிளைபரப்பி விரிந்து கொண்டே செல்கிறது. ** எத்தனை கிளை பரப்பி நாவல் விரிந்தாலும் நாவலின் மையமாய் இருப்பது மனிதம்! ** புறக்கணிக்கப்படும் அரசுப்பள்ளிகள், பாதிக்கப்படும் ஆசிரியர்கள், மாணவர்கள், எளியவர்கள், பெண்கள் , என அனைவரையும் திகட்டத் திகட்ட நேசித்த ஒரு எளிய “மனிதனின்” எழுத்துக்களே இந்நாவல். ** நாவலின் கதைப்போக்கு சுருக்கமாய்…. வில்வநத்தம் ஒரு சிறு நகரம். சுற்று வட்டார கிராமங்கள் அனைத்துக்குமான அரசு உயர்நிலைப்பள்ளி அங்குள்ளது. சமீபகாலத்தில் அப்பகுதியில் பிரபலமான தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகளால் அப் பள்ளியின் மாணவர்கள

தாலியில் பூச்சூடியவர்கள் கதை - வாசகர் மதிப்புரை

படம்
"தாலியில் பூச்சூடியவர்கள்" பா.செயப்பிரகாசம் அவர்களின் கதை. திரு எஸ்.ரா.வின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு சிறுகதைகள் தொகுப்பிலுள்ள ஒரு கதை. தீண்டாமை என்ற விஷப் பாம்புக்கு ஏராளமான கொடும்பற்கள். அதில் ஒன்றை படம் பிடிக்கிறது கதை. தீண்டாமையின் பெயரில் கடைப்பிடிக்கப்படும் பத்தாம் பசலித் தனம், சுயநலம், நரித்தனம் என ஒவ்வொன்றையும் தோல் உரிக்கிறது இக்கதை. பேச்சுவழக்கில் சாதிய பெயர்களை குறிப்பிட்டு கதை சொல்லும் பாங்கில் நிதர்சனம் நெஞ்சில் அறைகிறது. சாதி அமைப்புகளின் அடக்குமுறைகளின் கிராமிய மனிதர்களின் வாழ்க்கைமுறை எளிய மக்களின் துயரம் என போகிற போக்கில் அனைத்தையும் சொல்லிவிடுகிறது. தைலி என்ற பள்ளர் இனத்தை சேர்ந்த பெண் புதிதாக திருமணமாகி ஒரு ஊருக்கு வருகிறாள். அங்கு அவள் எதிர்கொள்ளும் சாதிய கொடுமைகளையும் தீண்டாமையின் இரட்டை வேடத்தையும் கூறி, எளியவர்களே என்றும் ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார்கள் என்ற முடிவுடன் கதை நம் நினைவுகளில் தொடர்கிறது. இக்கதை என்னுள் ஏற்படுத்திய கேள்விகள்: தீண்டாமை இன்று முழுவதும் ஒழிந்து விட்டதா? உனக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கும் தீண்டாமையின் எச்சத்தை களைய நாம் தயாரா? இன்ற

தெக்கத்தி ஆத்மாக்கள் - வாசகர் மதிப்புரை

படம்
தெக்கத்தி ஆத்மாக்கள் பா.செயப்பிரகாசம் விகடன் பிரசுரம் (2007) 160 Pages விலை ₹60 தான் பிறந்து, வளர்ந்த கரிசல் காட்டையும், அங்கு வாழ்ந்த/வாழ்கின்ற  மனிதர்களையும் மனம் நெகிழ எடுத்துரைக்கும் உன்னதமான நூல். ஆனந்த விகடனில் வந்த இந்த தொடருக்காக, தான் வாழ்ந்த மண்ணுக்கு பயணித்து, இன்றைய நிலமையையும் கண்டு இந்நூலை எழுதியுள்ளார். கிராமத்துப் பாதை என்ற முதல் கட்டுரையில் சொந்த ஊருக்கு செல்லும் பாதையில் செல்லும் பொழுது, இன்று இழந்து போனவைகளை விவரிக்கிறார். ஆனாலும், "பிறந்த ஊரை நோக்கி செல்லும் அந்த பாதையைப் போல இனிமையானதில்லை" என்று குறிப்பிடுகிறார். அடுத்து வரும் ஒவ்வொரு கட்டுரையிலும், கரிசல் காட்டு மாந்தர்களை, மண் மணம் மாறாமல், அவர்களது, அன்றைய வாழ்க்கை முறையும், இன்றைய நிலமையையும் எடுத்து இயம்புகிறார்.       வெள்ளாமை காவலில் பேரெடுத்த, இளவட்டங்களுக்கு சிலம்பாட்டம் கற்றுக் கொடுக்கும், மனா செனா, வியர்வைத் தண்ணி சிந்தாத, காலோடு கால் உரசிடாத, சதங்கைகள் பேசவைக்கிற தேர்ந்த ஆட்டக்காரர்களை உருவாக்கிய எஸ்.சிவசங்கரம் பிள்ளை என்ற ஒயில் கும்மி வாத்தியார், சன்னம் சன்னமாக குயத்தொழிலை ஏறக் க

காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர் - வாசகர் மதிப்புரை

படம்
நூல்: காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்  ஆசிரியர்: பா. செயப்பிரகாசம்  வெளியீடு: வம்சி  விலை: ரூ. 180 எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், ஒரு கரிசல் எழுத்தாளர். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இணை இயக்குராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தற்போது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார். 11 சிறுகதைத் தொகுப்புகளும், 12 கட்டுரை தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். இது இவரது 12 வது சிறுகதைத் தொகுப்பாகும். இந்நூலில் 13 சிறுகதைகள் உள்ளன.  இந்நூல் முழுவதும் கரிசல் வாழ்வைப்பற்றி பதிவு செய்கிறார். சொலவடைகள் சிரமமில்லாமல் வந்து விழுகின்றது. இடையே கவிதை, புதுக்கணக்கு என்று நம்மை கதைகளோடு பயணிக்கவைக்கிறார். எகத்தாளம் நிரம்ப உண்டு.      நண்பனிடமிருந்து வரவேண்டிய பாக்கியை வசூலிப்பது "மொச்சிக்கொம்பில் வில்லேத்துர" மாதிரி இருந்தது என்று கரிசல் மொழியில் உணர்த்துகிறார்.          மதுரை மீனட்சி கோயிலுக்கு கிழக்கில் ஒரு மொட்டை கோபுரம் உள்ளது, அதை மதுரைக்காரர்கள் மேற்கு மொட்டை கோபுரம் என்று கூறுகின்றனர்!!!         "பணக்காரன் என்றால் தர்மம் செய்யணும் படித்தவன் என்றால் நூல் செய்யணும்." "நொங்கையெ

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிப்போம்!

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிப்போம்! தமிழ்ப் படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் வேண்டுகோள்  (02.09.2010 சென்னை செய்தியாளர் சந்திப்பு - செய்திக்குறிப்பு)  எதிர் வரும் 2011 ஆம் ஆண்டு சனவரி 5, 6, 7, 8 தேதிகளில் கொழும்புவில் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த இருப்பதாக சில எழுத்தாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 3ல் கொழும்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அங்குள்ள சிலரும், புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் கூடி, இந்த மாநாட்டை நடத்த முடிவெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் கூட்டுச் சதியோடு இலங்கை அரசு கடந்த ஆண்டு மாபெரும் தமிழின அழிப்புப் போரை நடத்தி எண்ணற்ற போராளிகளையும் அப்பாவிப் பொது மக்களையும் கொன்று குவித்தது உலகெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசப் போர் நெறிமுறைகளையும் போர்க் கைதிகள் தொடர்பான ஒப்பந்தங்களையும் மீறி இலங்கை அரசு சிங்கள இனவெறியோடு தமிழினத்தின் மீது தொடுத்த தாக்குதல்களுக்கும் நிகழ்த்திய கொடூரங்களுக்கும் எதிராக வெகுண்டெழுந்த உலக நாடுகள் இலங்கை அரசுக்கு எதிரான தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஐரோப்ப

மருத்துவர் பினாய்க் சென்னின் துணைவியார் இலினா சென் மீதான பொய் வழக்கை திரும்பப்பெறு

தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு 29, செய்தியாளர் குடியிருப்பு, திருவான்மியூர், சென்னை-600041, தமிழ்நாடு. FEDERATION OF TAMIL CREATIVE WRITERS AND TAMIL LOVERS 29, Journalists Colony, Thiruvanmiyoor, Chennai-600 041, Tamilnadu, INDIA. நாள்: 04-02-2011 பேராசிரியர் இலினா சென் மஹாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் (பெண்களுக்கான மகாத்மா காந்தி  சர்வதேச ஹிந்தி நிகர்நிலை பல்கலைக்கழகம்) உள்ள மகாத்மா காந்தி அந்தர் ராஷ்ட்ரீய விஸ்வ வித்யாலயாவின் பெண்ணியல் ஆய்வுத்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். பெண்ணியல் ஆய்வுக்கான இந்தியக் குழுமத்தின் (Indian Association for Women’s Studies) செயற்குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (People’s Union for Civil Liberties) அகில இந்திய துணைத் தலைவராகவும், சத்தீஸ்கர் மாநில செயலாளராகவும் செயல்பட்டு வந்த மருத்துவர் விநாயக் கென்னின் மனைவியாவார். பேராசிரியர் இலினா மீது மஹாராஷ்ட்ரா காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப்படை (Anti-Terrorism Squad) அந்நிய நாட்டவர் சட்டத்தின் (Foreigners Act) பிரிவு 7, 14 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்

பா.செயப்பிரகாசம் விழி.பா.இதயவேந்தனுக்கு எழுதிய மடல்

படம்
சென்னை 27 ஏப்ரல் 2004 அன்புள்ள தோழருக்கு இத்துடன் புரட்சிப்பாதை இதழ், கலை - ஏப்ரல் இதழில் வெளியான ஜேம்ஸின் "தேர்தல் அம்பேத்கர் முதலாக" கட்டுரை நகல் அனுப்பியுள்ளேன். சிறுகதைத் தொகுப்பான 'இருள் தீ' பற்றி விமர்சனம் எழுதுவதற்கான சாத்தியம் இப்போது இல்லை. இவ்வகையில் பலரின் எதிர்பார்ப்பை என்னால் நிறைவு செய்ய இயலுவதில்லை. உழைப்பு சக்தி குறைந்து விட்டதாகக் கொள்ளலாம். கூடவே எனது குறிப்பான திசைப்பணிகளை முடக்கிவிடுகின்றன. விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள். அதற்கான ஆதாரப் பணிகளில் ஈடுபட்டிருப்பீர்கள். தூரத்தில் நின்றுதான் வாழ்த்துச் சொல்ல முடிகிறதே தவிர, நெருங்கி வந்து கலக்க முடிவதில்லை. இதனால் அனுபவ இழப்பு நிகழ்கிறது என்பதொரு முக்கியமான யதார்த்தமாக இருந்தாலும், முடியாமல் காரணங்களையும் யோசிக்க வேண்டும். முதலில் தலித், தலித்தல்லாதோர் என்ற சொல்லாடலை பார்க்க வேண்டும். அதை நான் ஏற்பதில்லை அது அப்பாற்பட்டவர்கள் என்ற பொருளில் கையாளப்படுகிறது: அல்லது எதிரிகள் என்ற அர்த்தத்தில் கையாளப்படுகிறது. பெரும்பாலும் எதிரிகள் என்ற நிலையில் தான். தலித்துகள், தலித்தியவாதிகள் என்ற ச

எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர் - நூல் மதிப்புரை

படம்
கோடை வெயிலில் காய்ந்து சருகாய்ப் பறக்கும் கரிசல் மக்களின் வாழ்வியலை, பண்பாட்டை, அம்மண்ணின் மக்கள் மொழியில் படைத்தளித்த கி.ரா.வின் தனிமனித மாண்புகளை, 'எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர்’ என்ற தமது நூலின் மூலம் தமிழ்ச் சமூகத்தின் முன் வைத்துள்ளார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். மொத்தம் 9 கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ள இந்நூலை நூல்வனம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கி.ரா.வின் மக்கள் மொழிநடையை விமர்சித்த தனித்தமிழ் ஆர்வலர்களுக்கு பதில் சொல்லும் வகையில், மொழியில் ஜனநாயகம் வேண்டும் என்பதை கி.ரா ’திருக்குறளை சீர் பிரிச்சி எழுதிப்போட்டா பத்துப்பேர் புரிஞ்சிப்பாங்க’ என தனக்கே உரிய பானியில் சொன்னதையும் 'மொழியின் மீதான பண்டிதத்தன்மை என்பது மொழியை வளர்க்காது, மொழியில் ஏற்படும் மாற்றம் என்பது, ஆரோக்கியமான உடல் தன் ரத்தத்தை தானே சுத்திகரித்துக்கொள்ளுவது போல. அப்போது பழையன கழியும் புதியன புகும்,’ என்று அவர் சொன்னதையும் அதனடிப்படையில் தமது படைப்புகள் படைத்த கி.ரா.வின் மக்கள் மொழி மீதான தீராக் காதலை, ஆசிரியர் பேசுகிறார். புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'கி.ரா 95’ நிகழ்வில் உளவுத்துறை அத

பா.செயப்பிரகாசத்தின் புகழ்பெற்ற வரிகள்

படம்
"நெல்வயலில் ரோஜாவும் களைதான்!" "கேள்வியும் சிந்திப்பும் மாற்றை முன்னகர்த்தும் இயக்கிகள்" ”சொந்த ஊரை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையைப் போல் இனிமையானது வேறெதுவுமில்லை” “யார் எழுதுகிறார்கள் என்பதல்ல; என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து நம் முன்னால் வைக்கும் மிகப் பெரிய சவால்”   "யார் முன்தெரிவது, யாரை முன்னிறுத்துவது என்பது ஒரு போராளியாய் இருப்பவருக்கு முக்கியம் அல்ல. யார் தொண்டு செய்வது என்பது முக்கியம்" "நாற்காலி என்பது தேர்தல் மூலம் பெறப்படும் அதிகாரத்தின் குறியீடு. நாற்காலியில் உட்கார்ந்தவன் நாற்காலியாகவே ஆகிப் போனான் என்பது உள்ளுறையும் பொருள்." "பெரியார் காட்டிய ஒளிமிக்க புதிய சமுதாயத்துக்கும் பழஞ் சமுதாயத்துக்குமான போராட்டம் நடந்துகொண்டிருக்கிற காலத்தில் நாம் வாழுகிறோம். நாம் எந்தப்பக்கம் என்பதை தீர்மானம் செய்யவேண்டும்."   இன்றைய சமகால உலகறிவு என்பது - ”ஏதேனும் ஒன்றைப் பற்றி முழுமையாக அறிந்திருத்தல்,   எல்லாவற்றைப் பற்றியும் ஏதேனும் அறிந்திருத்தல்” என்னும் வழியில் அறிவுச் சேகர ஆற்றலாக ஒவ்வொரு படைப்பாளிக்கும் கைவசப்பட வேண்டும்.  

உறக்கந்தேடும் உலகிற்காய் - புத்தக கருத்துரை

படம்
நூலாசிரியர்: சார்ள்ஸ் வெளியீடு: மாணவர் கலை இலக்கிய மன்றம், 1989

பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2022 - இந்தியா

படம்
வேம்பு மக்கள் சக்தி இயக்கம் நடத்திய குழந்தைகளோடு கதையாடுவோம், 24.09.2022, விளாத்திகுளம்  (பா.செயப்பிரகாசம் மறைவுக்கு முன் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்வு) குழந்தைகளோடு கதையாடுவோம் என்ற கதைசொல்லி நிகழ்வில் கரிசல் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் கலந்துகொண்டு கதைசொல்லி வேலூர் திரு.நீதிமணி அவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

கலக பிம்பங்கள்

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவகை ஓவியம் மேலெழுந்து வருகிறது. காலம் அழிந்து போனபின்னும் காலத்தின் தொடர்ச்சியில் அந்த ஓவியங்கள் கொண்டாடப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்தின் கருத்துநிலைக்கும் கலை வெளிப்பாடுகளுக்கும் தொடர்பிருப்பது போலவே, ஓவியத்துக்கும் அதே தொப்புள்கொடி தொடர்கிறது. எனவே காலமறைதலோடு அந்த கருத்து நிலை மறைந்துவிட்டபோதும், அப்படியொரு கருத்து நிலவிய சாட்சியாக ஓவியம் நின்று பேசுகிறது. இதன் காரணமாகவே ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சரியாகக் கையகப்படுத்திய எந்த ஓவியமும் நூற்றாண்டுகள் தாண்டியும் நூற்றாண்டுகள் மேலாகவும் நடந்து போகிறது. எனவே நூற்றாண்டுகளாய் நின்று பேசும் ஓவியம் என்ற பெயரைத் தன்மேல் பதிவு செய்து கொள்கிறது. காலத்தின் மாறுதலை அடையாளப்படுத்துகிற நின்று பேசுகிற ஓவியங்களை நாம் கொண்டாட வேண்டும். சமணர்களைக் கழுவிலேற்றிய ஓவியங்கள் சில இடங்களில், குறிப்பாகக் கோயில்களில் காணப்படுகின்றன. சமணரைக் கழுவேற்ற கழிக்கும் என திருவுளமேயன்றும், சமணப் பெண்டிரை கற்பழிக்கத் திருவுளமேயென்றும் பாடிய திருஞான சம்பந்தரின் உள்ளத்து ஆசையை இந்த ஓவியங்கள் நிறைவேற்றியுள்ளன. உயிரோடு தீயில் எரிப்பது கொதிக்கும் எண்

சுய தரிசனம்

படம்
01-10-2020 சென்னை தீபன்,  சில விசயங்களை உன்னுடன் பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன். தொலைபேசியில் இத்தனை தர்க்கரீதியாக பேச இயலாது. எழுத்துக்கள் மூலமாக ஓரளவுக்கு  எண்ணங்களை தெளிவாகக் கொண்டுவர சாத்தியமாகும். அன்பு செலுத்துதல், அன்பை வெளிப்படுத்துதல் என்பது வேறு; ஏமாளியாக இருப்பது வேறு. அன்பை, பாசத்தை குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமல்ல, உறவு, நட்பு என என்னைச் சூழவுள்ள அனைத்துத் திசைகளிலும் பரிமளிக்கச் செய்துவிட்டு, பண விசயத்தில் நான் ஏமாளியாக இருந்திருக்கிறேன். இப்போதும் இருந்து வருகிறேன். பெரியப்பா சொன்னதாக அம்மா ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறாள்; ”பணத்தின் அருமை இப்போது இவனுக்குத் தெரியாது”. பின்னர் இவன் எக்கசக்கமாக கஷ்டப்படப் போகிறான் என்ற அர்த்தத்தில் சொன்னது உண்மை என உணரமுடிகிறது. ஆனால் எனது குணவியல்பை மாற்றிக்கொள்வது இனிமேல் சாத்தியமில்லை எனக் கருதுகிறேன்; இனிமேல் சரிப்படுத்திக் கொள்வதால் என்ன பெரிதாய் விளையப் போகிறது என்னும் கேள்வி எழுந்தாலும், ஓரளவு என்னை நிலைப்படுத்திக் கொள்ளலாம்.    முழுதும் ஒரு புனைவு உலகத்திலேயே நான் வாழ்ந்து வந்ததாக கருதுகிறேன். பணம், சொத்து எல்லாமும் அர்த்தமற்