பா.செயப்பிரகாசத்தின் கடைசி நேர்காணல்
24 ஆகஸ்ட் 2021 அன்புள்ள அப்பா, நீண்ட காலமாக நான் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்விகளைக் கீழே தொகுத்துள்ளேன். அவரவர் வாழ்க்கையின் வேகத்தில் & மனஸ்தாபத்தில் - பல மனம் விட்டுப் பேசவேண்டிய தருணங்களை நாம் அனைவரும் இழந்து விட்டோம். நாம் குடும்பமாக உட்கார்ந்து இவைகளைப் பகிர்ந்து கொண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை (its called family time here in foreign countries). அதனால் தான் இக்கேள்விகள், ஏனென்றால் உங்களை பற்றி முழுவதுமாக அறியாமல் போய்விடுமோ என மனம் அரித்துக் கொண்டேயிருக்கிறது. விருப்பமான கேள்விகளுக்கு பதில் அளிக்கவும். உங்கள் பதில்கள் என் கடைசி வரை நினைவில் வாழும். தீபன் ************************************************************************************************ 2 செப்டம்பர் 2021 தீபன், நீ கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளேன். தனிப்பட்ட கேள்விகளாயினும், பதில் தர ஒரு வாரம் எடுத்துக் கொண்டது. சுய விமர்சனமாக, தன்னிலை விளக்கமாக, நிறைய நிறைய வாழ்வுக்குள் போய்த் தேடி, தோண்டி எடுத்துக் கொடுக்க வேண்டியதாயிற்று. ’முக்காலே மூணு வீசம்’ சரியாக வந்துள்ளது என நினைக்கிறேன். அன்புள்ள