சுய தரிசனம்
01-10-2020 சென்னை தீபன், சில விசயங்களை உன்னுடன் பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன். தொலைபேசியில் இத்தனை தர்க்கரீதியாக பேச இயலாது. எழுத்துக்கள் மூலமாக ஓரளவுக்கு எண்ணங்களை தெளிவாகக் கொண்டுவர சாத்தியமாகும். அன்பு செலுத்துதல், அன்பை வெளிப்படுத்துதல் என்பது வேறு; ஏமாளியாக இருப்பது வேறு. அன்பை, பாசத்தை குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமல்ல, உறவு, நட்பு என என்னைச் சூழவுள்ள அனைத்துத் திசைகளிலும் பரிமளிக்கச் செய்துவிட்டு, பண விசயத்தில் நான் ஏமாளியாக இருந்திருக்கிறேன். இப்போதும் இருந்து வருகிறேன். பெரியப்பா சொன்னதாக அம்மா ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறாள்; ”பணத்தின் அருமை இப்போது இவனுக்குத் தெரியாது”. பின்னர் இவன் எக்கசக்கமாக கஷ்டப்படப் போகிறான் என்ற அர்த்தத்தில் சொன்னது உண்மை என உணரமுடிகிறது. ஆனால் எனது குணவியல்பை மாற்றிக்கொள்வது இனிமேல் சாத்தியமில்லை எனக் கருதுகிறேன்; இனிமேல் சரிப்படுத்திக் கொள்வதால் என்ன பெரிதாய் விளையப் போகிறது என்னும் கேள்வி எழுந்தாலும், ஓரளவு என்னை நிலைப்படுத்திக் கொள்ளலாம். முழுதும் ஒரு புனைவு உலகத்திலேயே நான் வாழ்ந்து வந்ததாக கருதுகிறேன். பணம், சொத்து எல்லாமும் அர்த்தம