முன் ஏரைப் பற்றி பின் ஏரின் பார்வை
எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர் ஆசிரியர்: பா.செயப்பிரகாசம் வெளியீடு: நூல்வனம் எம்.22, 6வது அவென்யூ, அழகாபுரிநகர், ராமாபுரம், சென்னை - 6000 089 பக்:80, விலை ரூ.60 ----மயிலைபாலு செல்பேசி: 91765 49991, 94440 90186 “முன் ஏரு போற வழியில்தான் பின் ஏருபோகும்” என்பது கிராமத்துச் சொலவடை. குடும்பத்திற்குப் பொறுப்பானவர் சரியான பாதையில் சென்றால் மற்றவர்களும் அதனைப் பின்பற்றுவார்கள் என்பது இதன்பொருள். பொதுவாகவும் வயல்களில் ஏர்பூட்டும்போது நன்றாகவசப்பட்ட, வாளிப்பான, ஆழமானாலும் அகலமானாலும் அசராது நடைபோடுகிற; சண்டித்தனம் செய்யாத காளைகளைத்தான் முன் ஏரில் பூட்டுவார்கள். ஏர் ஓட்டுபவரும் நேரத்தை மட்டுமே நினைவில் கொண்டிருப்பவராக அல்லாமல் கடமைக்கு முன்னுரிமை அளிப்பவராகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். இப்படித்தான் கலை இலக்கிய உலகிலும் அடுத்தத் தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்குவோரை முன்னத்தி ஏர் என்கிறோம். மக்கள்மனங்களை உழுதுப்பண்படுத்தி நற்கருத்துக்களான வித்துக்களை விதைத்து அறிவுப் பயிர்வளர அவர்கள் காரணமாக இருக்கிறார்கள். அந்த வகைமையில் 95 வயதை நிறைவு செய்து காத்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் கி.ராஜ