கூட்டறிக்கை - கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிக

26 ஆகஸ்ட் 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் பகுதியிலுள்ள சக்தி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் மேனிலை வகுப்பில் பயின்று வந்த சிறீமதி எனும் மாணவி சூலை 13 - ஆம் நாளன்று ஐயத்திற்கு இடமான முறையில் மர்ம மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும், பொதுமக்களும் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 4 நாள்கள் நடைபெற்ற போராட்டத்தை ஒட்டி அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காததால், தமிழ்நாட்டிற்கு வெளியே இந்திய அளவில் இவ்விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. மாணவியின் தாயாரின் அவலக்குரலுக்கு ஆதரவாக, தன்னெழுச்சியான பெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பிறகும்கூட, காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதனால் சூலை 17-ஆம் நாள் ஒன்றுகூடிய பெருமளவிலான போராட்டத்தில் ஒரு கும்பல் புகுந்து பள்ளியின் மீது தாக்குதல் நடத்தி ஆதாரங்களை அழித்துள்ளது. இதன் விளைவாகக் கொலைக்குற்றம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வன்முறை என்ற பெயரில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் விசாரணை அமைப்பு (சிபி-சிஐடி) இப்பொழுது