பா.செயப்பிரகாசத்தின் புகழ்பெற்ற வரிகள்



"நெல்வயலில் ரோஜாவும் களைதான்!"



"கேள்வியும் சிந்திப்பும் மாற்றை முன்னகர்த்தும் இயக்கிகள்"



”சொந்த ஊரை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையைப் போல் இனிமையானது வேறெதுவுமில்லை”




“யார் எழுதுகிறார்கள் என்பதல்ல; என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து நம் முன்னால் வைக்கும் மிகப் பெரிய சவால்” 




 "யார் முன்தெரிவது, யாரை முன்னிறுத்துவது என்பது ஒரு போராளியாய் இருப்பவருக்கு முக்கியம் அல்ல. யார் தொண்டு செய்வது என்பது முக்கியம்"




"நாற்காலி என்பது தேர்தல் மூலம் பெறப்படும் அதிகாரத்தின் குறியீடு. நாற்காலியில் உட்கார்ந்தவன் நாற்காலியாகவே ஆகிப் போனான் என்பது உள்ளுறையும் பொருள்."




"பெரியார் காட்டிய ஒளிமிக்க புதிய சமுதாயத்துக்கும் பழஞ் சமுதாயத்துக்குமான போராட்டம் நடந்துகொண்டிருக்கிற காலத்தில் நாம் வாழுகிறோம். நாம் எந்தப்பக்கம் என்பதை தீர்மானம் செய்யவேண்டும்."


 
இன்றைய சமகால உலகறிவு என்பது -
”ஏதேனும் ஒன்றைப் பற்றி முழுமையாக அறிந்திருத்தல்,  
எல்லாவற்றைப் பற்றியும் ஏதேனும் அறிந்திருத்தல்”
என்னும் வழியில் அறிவுச் சேகர ஆற்றலாக ஒவ்வொரு படைப்பாளிக்கும் கைவசப்பட வேண்டும்.



 

"படைப்பாளிகளது வேர் எப்போதும் மக்களின் வாழவியலில் மட்டுமல்ல, வெளிப்பாட்டு மொழியிலும் ஊன்றி நிற்க வேண்டும்."



 இடையூறு செய்வதுதான் ஜனநாயகம்
இடையூறு செய்வதை அனுமதிக்காத இடம் சர்வாதிகாரம்

- பா. செயப்பிரகாசம் (2016-03-09- புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்)



 

சாவு - கொடூரமானது.

இறந்தவருக்கு அது ஒன்றுமில்லை. இருப்பவர்களுக்கு அது தான் சாவு. இறப்பு சித்தித்தவருக்கு அதன்பின் எந்த அனுபவமும் இல்லை. இருப்பவர்களுக்கு அவரால் இனி நிகழவிருக்கிற எல்லா அனுபவங்களும் உண்டு.

இறந்து போனவருக்கு சிந்திப்பின் புள்ளி மறைந்து விடுகிறது. வாழ்ந்து தீர வேண்டும் என்றிருப்பவர்களுக்கு, இனிமேல் தான் ஆரம்பமாகிறது.



 

ஒரு சாவு தரும் வெறுமையை, முதுமை முன் கூட்டியே தூக்கிக் கொண்டு வந்து காட்டுகிறது. இனி ஏதும் செய்வதற்கில்லை என்ற அயர்ந்த மனதின் வெளிப்பாடென இதுவரை கை கூடி வந்த கூட்டல்கள் எல்லாம் முதுமையில் இப்போது கழித்தல்களாக மாறுகின்றன. 

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்