பலியாடுகள்
நஞ்சுண்ணும் பூமியின் நடமாட்ட சாட்சியங்கள் தேடி, அங்ஙன இங்ஙன என்று ஊர், உலகத்துக்குப் போக வேண்டாம். நஞ்சு கரைத்து ஊட்டும் காரியங்கள் தமிழ்ச் சமூகத்தில் தீவிரம் கொண்டிருக்கின்றன. ஆண்டு, மாத நிகழ்வுகளின் அட்டவணையாக முறைவைத்து வருகிறது. பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தின் நிகழ்த்து கலைத்துறைத் தலைவரான கே.ஏ.குணசேகரனின் ‘பலியாடுகள்’ நாடகம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தடை செய்யப்படுகிறது. இது மார்ச் 27 நிகழ்வு. 24-03-15 முதல் 27 முடிய உலக நாடக நாள் விழா - மூன்று நாள் கருத்தரங்கம். நிறைவுக்கு முதல் நாள் இரவு துணைவேந்தர் தொலைபேசியில் “பலியாடுகள் நாடகத்தில் பிராமணர்களைத் தாக்கிப் பேசும் காட்சிகள் வருவதாகச் சொல்கிறார்கள். பிராமண துவேஷம் வெளிப்படும் நாடகத்தை நாளை அரங்கேற்ற வேண்டாம். அறங்கேறுமானால் நுழைவு வாசலில்லேயே மறித்துப் போராட்டம் செய்வோம் என்று சில அரசியல் சக்திகள் சொல்கிறார்கள்” என்று பேசியவர், நாடகம் நடத்த வேண்டாம் எனத் தெரிவிக்கிறார். ’மாதொருபாகன்‘ புதினத்தில் பிரச்சினைக்குரிய பகுதியை நீக்கு; புதினத்தைத் திரும்பப் பெறு, மன்னிப்புக் கேள் - என்று பெருமாள்முருகனின் வீட்டுக்
கருத்துகள்
கருத்துரையிடுக