பா.செயப்பிரகாசம் இரங்கல் கூட்டம், விளாத்திகுளம் - 25 அக்டோபர் 2022
இணைப்பைப் பெறுக
Facebook
Twitter
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
கரிசல்காட்டு எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள் 23.10.2022 அன்று காலமானார். அன்னாரது உடல் தூத்துக்குடி மருத்துவமனை மாணவர்கள் மருத்துவ பயிற்சிக்கு தானம் செய்வதற்கு முன்பாக, 25.10.2022 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் (பா.செயப்பிரகாசம் அவர்கள் வசித்த இல்லத்திற்கு அருகில்) இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
பலதரப்பட்ட ஆற்றல்கள் கலந்து கொண்ட இரங்கல் கூட்டத்தில் தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் மருத்துவர் அறம், செயலாளர் காமராஜ், எழுத்தாளர் இராகுலதாசன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் மீ.த.பாண்டியன், திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், நந்தகோபால் ஐ.ஏ.எஸ், மருத்துவர் வெங்கட்ராமன், வழக்கறிஞர் அஜிதா, மகன் சூரியதீபன், எழுத்தாளர் கோணங்கி, இலக்கிய விமர்சகர் ந.முருகேசபாண்டியன், பா.செ.வுடன் மனஓசை இதழில் இணைந்து இயங்கிய வசந்தன், இகக (மா-லெ) விடுதலை மாநிலக்குழுத் தோழர் அ.சிம்சன், மக்கள் கல்வி இயக்கம் பேராசிரியர் கோச்சடை சேவுகன், கதவு ஆசிரியர் மதி கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இரங்கல் கூட்டத்தை முனைவர் சம்பத்குமார் தொகுத்தார்.
தோழர் பா.செ எப்படி கரிசல் இலக்கியவாதியாக, புரட்சிகர மா-லெ இயக்கத்தின் சிந்தனையாளராக, மண்ணையும் மக்களையும் நேசித்த மனிதாபிமானியாக, ஈழ ஆதரவாளராக, மொழிப் போராட்டக் களப்போராளியாக, அனைத்து முற்போக்கு இடதுசாரிக் கலை இலக்கியப் படைப்பாளிகளுடன் இணக்கமானவராக, மென்மையான உரையாளராக இயங்கியதை அனைவரும் நினைவு கூர்ந்தனர்.
தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தலைவர் மருத்துவர் அறம், பொதுச்செயலாளர் தோழர் காமராஜ், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் மீ.த.பாண்டியன், கதவு ஆசிரியர் மதி கண்ணன் உள்ளிட்டோர் செங்கோடி போர்த்தி செவ்வணக்க முழக்கங்களுடன் தூத்துக்குடி மருத்துவமனைக்கு பா.செயப்பிரகாசம் உடலை வழி அனுப்பி வைத்தனர்.
எழுத்தாளர் இராகுலதாசன்
வழக்கறிஞர் அஜிதா
எழுத்தாளர் கோச்சடை சேவுகன்
தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன்
தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன்
நந்தகோபால் ஐ.ஏ.எஸ்
திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் மீ.த.பாண்டியன்
மக்களின் பேச்சு மொழி ஓசை ஒழுங்கு, லயம், இழுவை, இசைத்தன்மை எனப் பல இணைந்து வெளிப்படுகிறது. இந்த ஓசை ஒழுங்கு எதுகை, மோனையாய் சொற்பிரயோகங்களில் ஒலித்தது. “எண்ணைக்குடம் போட்டவளும் ஆத்தாடி அம்மாடி தண்ணிக்குடம் போட்டவளும் ஆத்தாடி அம்மாடி” சொலவமாக வெளிப்பட்டிருப்பினும், எதுகை,மோனையுடன் ஒரு கவிதையாக நிற்கிறது. இதன் மொழிப்பண்பு நோக்கி பேச்சோசைக் கவிதை எனச் சொல்லலாம். “அறுக்கமாட்டாதவன் இடுப்பில அறுத்தெட்டுப் பண்ணரிவாள்” இரண்டு சொலவடைகள் போதும் எடுத்துக்காட்டுக்கு. இணைவு, எதிர்வு (முரண்), லயம், ஓசை ஒழுங்கு என மக்களின் நா வழக்கிலுள்ள இவைகளிலிருந்து எழுத்து வடிவக் கவிதை எடுத்துக் கொள்கிறது. எடுத்துக் கொண்டது என்பதினும் கடன்வாங்கிக் கொண்டது என்ற வார்த்தை பொருத்தமாய் அமையும். கவிதை மரபு எல்லாக் காலத்திலும் ஏதேனும் ஒரு கூறினை நாட்டுப்புற வழக்காறு எனப்படும் வாய்மொழியிலிருந்து கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது. சங்க காலக் கவிதைக் கருவூலத்தில் எதுகை, மோனை என்ற ஓசை ஒழுங்கு பிரதானமாக இருக்கவில்லை; அதன் பின்னரான கவிதைகள் எதுகை மோனை என்ற ஆடை உடுத்திக்கொள்கின்றன. இதுவரை ஆடை அணியாதிருந்த கவிதை மரபுக்க
(’பொன்னீலன் 80‘ நூலில் வெளியான கட்டுரையின் செழுமைப் படுத்திய வடிவம்) படைப்பாளிகளை நேரில் சந்தித்து அறிமுகமாவதினும் வாசிப்பு வழி அறிமுகம் எளிது, அநேகம் எழுத்தாளர்களின் படைப்புக்கள் வழி இது சாத்தியமாகிறது. கொள்ளைக்காரர்கள் – குறுநாவல் தாமரை இலக்கிய இதழில் வாசித்தேன்; வாசிப்பு மூலம் அவர் எனக்கு முதல் அறிமுகம். வாசித்து முடித்து அசை போடுகையில் சிறு சந்தேக மின்னல் கீறியது; கொள்ளைக்காரர் யார்? கதையில் வருகிற காவல்துறை மாந்தர்களா? கடத்தல் வியாபாரிகளா? கதை தந்த எழுத்தாளரா? கதை மாந்தர்களின் பேச்சும், கதை உரைப்புப் பாங்கும் மலையாளமும் தமிழும் பிசைந்து பிழிந்த மூலிகைச்சாறு போல வட்டார வழக்கான குமரி மொழியில் வெளிப்பட்டிருந்தது. வட்டார மக்களை உலுக்கி உன்மத்தம் பிடிக்கச் செய்து கொண்டிருந்த ‘அரிசிப் பிரச்சனை’. கதை காட்டிய உண்மையின் பக்கம்; மக்கள் பக்கம் நின்று அவர் வாதாட்டம் செய்த மொழி - கதையைப் படைத்த எழுத்தாளர் என்பது எனக்கு உறுதிப்பட்டது. ஒரு கைகுலுக்கள் செய்ய நினைத்தேன். படைப்பாளி அருகில் இல்லை. அது 1973 – மதுரை ‘ஹாலேஜ் ஹவுஸ்’ உணவக மாடி அரங்கத்தில் ‘புதிய மொட்டுகள்’ என்றொரு கதைத்தொக
கரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச
Title: P.Jeyaprakasam sirrukathaikal kattum karisal kattu makkalin valviyal (பா. செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்) Researcher: T.Poovai subramanian (த .பூவை சுப்பிரமணியன்) Guide(s): V.Kesvaraj (வே .கேசவராஜ்) Keywords: Tamil University: தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி, Manonmaniam Sundaranar University Completed Date: March 2007 Abstract: None Pagination: vii, 209p. URI: http://hdl.handle.net/10603/77832 ; https://sg.inflibnet.ac.in/handle/10603/77832 Appears in Departments: Department of Tamil ஆய்வு விளக்கம் முன்னுரை:- கரிசல் வட்டாரத்தினையும் அம்மக்களின் வாழ்க்கை முறையினையும் பா.செ. வின் கதைப்படைப்புகள் மூலம் வெளிப்படுத்தும் வகையில் அமையும் இவ்வாயிவிற்குப் ‘பா.செய்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்’ என்ற தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு அணுகுமுறை:- இவ்வாய்வில் பகுப்பாய்வு அணுகுமுறை, விளக்கமுறை திறனாய்வு, சமூகவியல் அணுகுமுறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வுப் பகுப்பு:- இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை
மனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது? “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா?” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது? சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளும்
கருத்துகள்
கருத்துரையிடுக