பா.செயப்பிரகாசம் இரங்கல் கூட்டம், விளாத்திகுளம் - 25 அக்டோபர் 2022
இணைப்பைப் பெறுக
Facebook
Twitter
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
கரிசல்காட்டு எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள் 23.10.2022 அன்று காலமானார். அன்னாரது உடல் தூத்துக்குடி மருத்துவமனை மாணவர்கள் மருத்துவ பயிற்சிக்கு தானம் செய்வதற்கு முன்பாக, 25.10.2022 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் (பா.செயப்பிரகாசம் அவர்கள் வசித்த இல்லத்திற்கு அருகில்) இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
பலதரப்பட்ட ஆற்றல்கள் கலந்து கொண்ட இரங்கல் கூட்டத்தில் தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் மருத்துவர் அறம், செயலாளர் காமராஜ், எழுத்தாளர் இராகுலதாசன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் மீ.த.பாண்டியன், திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், நந்தகோபால் ஐ.ஏ.எஸ், மருத்துவர் வெங்கட்ராமன், வழக்கறிஞர் அஜிதா, மகன் சூரியதீபன், எழுத்தாளர் கோணங்கி, இலக்கிய விமர்சகர் ந.முருகேசபாண்டியன், பா.செ.வுடன் மனஓசை இதழில் இணைந்து இயங்கிய வசந்தன், இகக (மா-லெ) விடுதலை மாநிலக்குழுத் தோழர் அ.சிம்சன், மக்கள் கல்வி இயக்கம் பேராசிரியர் கோச்சடை சேவுகன், கதவு ஆசிரியர் மதி கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இரங்கல் கூட்டத்தை முனைவர் சம்பத்குமார் தொகுத்தார்.
தோழர் பா.செ எப்படி கரிசல் இலக்கியவாதியாக, புரட்சிகர மா-லெ இயக்கத்தின் சிந்தனையாளராக, மண்ணையும் மக்களையும் நேசித்த மனிதாபிமானியாக, ஈழ ஆதரவாளராக, மொழிப் போராட்டக் களப்போராளியாக, அனைத்து முற்போக்கு இடதுசாரிக் கலை இலக்கியப் படைப்பாளிகளுடன் இணக்கமானவராக, மென்மையான உரையாளராக இயங்கியதை அனைவரும் நினைவு கூர்ந்தனர்.
தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தலைவர் மருத்துவர் அறம், பொதுச்செயலாளர் தோழர் காமராஜ், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் மீ.த.பாண்டியன், கதவு ஆசிரியர் மதி கண்ணன் உள்ளிட்டோர் செங்கோடி போர்த்தி செவ்வணக்க முழக்கங்களுடன் தூத்துக்குடி மருத்துவமனைக்கு பா.செயப்பிரகாசம் உடலை வழி அனுப்பி வைத்தனர்.
எழுத்தாளர் இராகுலதாசன்
வழக்கறிஞர் அஜிதா
எழுத்தாளர் கோச்சடை சேவுகன்
தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன்
தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன்
நந்தகோபால் ஐ.ஏ.எஸ்
திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் மீ.த.பாண்டியன்
பா.செயப்பிரகாசத்தின் 51 ஆண்டு (1971 - 2022) கால படைப்பில் எழுதிய 143 சிறுகதைகள் 14 தொகுதிகளாகவும் மற்றும் 18 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதை தொகுப்புகள், 3 நாவல்கள், 2 மொழி பெயர்ப்பு நூல்கள், தொகுப்பாளராய் 15 நூல்கள் வெளிவந்துள்ளன. சிறுகதைத் தொகுப்புகள் 1. ஒரு ஜெருசலேம் - 1975, 1988 ஒரு ஜெருசலேம் (தாமரை இதழ், செப்டம்பர் 1972) அம்பலக்காரர் வீடு (டிசம்பர் 1972) குற்றம் (பா.செயப்பிரகாசத்தின் முதல் கதை, தாமரை 1971 மே மாத இதழில் வெளியானது.) பலிப்பூக்கள் கறுத்த சொப்னம் ஆறு நரகங்கள் (ஆகஸ்ட் 1973) புஞ்சைப் பறவைகள் இருளின் புத்ரிகள் (டிசம்பர் 1973) திறக்கப்படாத உள்ளங்கள் (மே 1973) வேரில்லா உயிர்கள் (நீலக்குயில் இதழ், ஜூன் 1974) சுயம்வரம் (1973) மூன்றாம் பிறையின் மரணம் (1974) பொய் மலரும் (1974) 2. காடு, 1978 காடு (ஜூன் 1977) இருளுக்கு அழைப்பவர்கள் (ஏப்ரல் 1977) கொசு வலைக்குள் தேனீக்கள் (1973) முதலைகள் (மார்ச் 1976) நிஜமான பாடல்கள் (நவம்பர் 1975) சரஸ்வதி மரணம் (மே 1977) இரவின் முடிவு (பிப்ரவரி 1976) குஷ்டரோகிகள் 1 , 2, 3 (1974) விடிகிற நேரங்கள் (செப்டம்பர் 1975) கோபுர
கரிசல் கதைகளின் உலகில் தனித்துவம் பெற்றவர் பா.செயப்பிரகாசம். இதுவரை கதை உலகின் காலடி படாத கிராமத்தின் ஒடுக்கப்பட்ட மக்களையும் அவர்களின் வாழ்க்கைப் பாடுகளையும் விவரிக்கக்கூடியது இவரது எழுத்து. முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவரும் தீவிர இலக்கியவாதியான செயப்பிரகாசம் “விழிகள்”, “சதங்கை”, “மனஓசை" போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தவர். சமூக விடுதலையை நோக்கியதாக எழுத்து அமைய வேண்டும் என்ற உரத்த சிந்தனை கொண்ட பா.செயப்பிரகாசத்தின் மொத்தச் சிறுகதைகள் 'பா.செயப்பிரகாசம் கதைகள்' என்ற தலைப்பில் வெளியாகி உள்ளன. இவரது 'ஒரு கிராமத்து ராத்திரிகள்' என்ற தொகுப்பு, தமிழ்ச் சிறுகதையுலகில் குறிப்பிடத்தக்க ஒன்று. “கரிசலின் இருள்கள்” என்கிற பா.செயப்பிரகாசம் கதையும் திருமணத்தின் வலியைப் பற்றியது. ஆனால், இங்கு திருமணத்தால் பிரச்னை ஏற்படுவதில்லை. மாறாக, கிராமத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மனிதன் ஒருவன் தனது திருமண நாளில்கூட சந்தோஷமாக இருப்பதற்கு உயர்ந்த சாதி மனிதர்களால் அனுமதிக்கப்படுவது இல்லை என்கிற உண்மையைச் சொல்கிறது
கரிசல் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான தோழர் பா.செயப்பிரகாசம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கடந்த 23-10-2022 அன்று காலமானார். 1941 ஆம் ஆண்டு விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் என்கிற கரிசல் கிராமத்தில் பிறந்த பா.செயப்பிரகாசம் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த காலத்தில் கிளர்ந்தெழுந்த 1965 ஆம் ஆண்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராடத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர். அப்போராட்டத்தில் பங்கேற்றமைக்காகக் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டைச் சிறையில் மூன்று மாத காலம் அடைபட்டிருந்தார். அந்த நாட்களில் திராவிட இயக்கப் பிடிப்போடு இருந்தவர், காலப்போக்கில் திமுக மீது அவநம்பிக்கையுற்று மார்க்சிய லெனினிய இயக்கத்தோடு தன்னைப் பிணைத்துக்கொண்டார். கரிசல் வாழ்க்கையை அவருக்கே உரிய தனித்த மொழி, நடையில் தன் சிறுகதைகளில் எழுதினார். 1960களில் நேரு யுகம் முடிவுக்கு வந்து, சுதந்திர இந்தியா விரித்த கனவுகள் ஏதும் நிறைவேறாத ஏமாற்றத்தில் இந்தியா தள்ளாடிக்கொண்டிருந்த காலத்தில் தன் கரிசல் மண்ணில் வாழ்க்கை சீர்குலைந்ததைத் தன் ஒவ்வொரு சிறுகதையிலும் வாசகர் நெஞ்சம் பதைபதைக்க எழுதினார். ஒரு ஜெருசலேம், அம்
Tamil Nadu (a southern State in India) in the recent times witnessed the atrocities of 'sand mafia.' The newspapers were filled with the atrocities done by the villainous group. Whoever was against the evil of the exploitation of the river sand was done away with in heinous manners (Many were run over by the trucks). The river sand is a gold mine for the profit seeking politicians. The mining of river sand for the local use (construction in that particular region) is acceptable. But when it is mined for commercial purposes, that is where the danger lies. The river bed that takes thousand years to form is scratched to nothing in minimum of 10 years. When a river bed is completely robbed of the sand, it leads to the death of a river and that in turn results in killing the livelihoods dependent on the river. The drinking water of the area gets dried up or the water becomes not potable. It kills the villages and the people in the villages. This has been happening in Tamil Nadu. The
ஒவ்வொரு மனிதனுக்கும் மரணநாள் குறிக்கிறான் சித்திரபுத்தன். அன்னார் குறித்துக் கொடுத்த பெயர்ப்பட்டியல் கைக்கொண்டு உயிர் எடுத்துப்போக எருமைவாகனத்தில் வருகிற எமனுக்குத் துணையாய் வருகிறவர்கள் எம்கிங்கிரர்கள்.பெரியஎழுத்துப் புராணக் கதைகளில் சிறுவயதில் வாசித்திருக்கிறோம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னையைத் துவம்சம் பண்ணிய மழைவெள்ளம் எமன் என்றால், நீர்வெளியேறும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமை, கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயின் நதிப் படுகைகள் 30மீ தொலைவுக்கு கட்டிடங்களால் நிறைந்தவை, மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்படாமை எனப் பல முதன்மைக்காரணங்கள் இருந்தாலும், நீரோடும் வழிகளைத் தடுத்து அடைத்த பாலிதீன், பிளாஸ்டிக் குப்பைகள் என்னும் எமகிங்கிரர்கள் முக்கியக் காரணம். வெள்ள வடிவுக்குப் பின் வீடுகளில், வீதிகளில் லாரிலாரியாய் குவிந்து கிடந்தன பிளாஸ்டிக் குப்பைகள். இந்தக் கேடுகாலத்திலும் நிவாரணப்பொருட்களைப் பாலிதீன் பைகளிலும் பிளாஸ்டிக் டப்பாக்களிலும் கொடுக்கிறார்கள். நகரமயமாதல் வாழ்வில் எந்த வேதனையிலும் ஒரு ஒழுங்கில்லை. எல்லை விலகாமல் விவசாயிகள் ஒருசீராய்ப் போய்க்கொண்டிருக்க வேண்டும். சம்சா
கருத்துகள்
கருத்துரையிடுக