பா.செயப்பிரகாசம் இரங்கல் கூட்டம், விளாத்திகுளம் - 25 அக்டோபர் 2022
இணைப்பைப் பெறுக
Facebook
Twitter
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
கரிசல்காட்டு எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள் 23.10.2022 அன்று காலமானார். அன்னாரது உடல் தூத்துக்குடி மருத்துவமனை மாணவர்கள் மருத்துவ பயிற்சிக்கு தானம் செய்வதற்கு முன்பாக, 25.10.2022 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் (பா.செயப்பிரகாசம் அவர்கள் வசித்த இல்லத்திற்கு அருகில்) இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
பலதரப்பட்ட ஆற்றல்கள் கலந்து கொண்ட இரங்கல் கூட்டத்தில் தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் மருத்துவர் அறம், செயலாளர் காமராஜ், எழுத்தாளர் இராகுலதாசன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் மீ.த.பாண்டியன், திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், நந்தகோபால் ஐ.ஏ.எஸ், மருத்துவர் வெங்கட்ராமன், வழக்கறிஞர் அஜிதா, மகன் சூரியதீபன், எழுத்தாளர் கோணங்கி, இலக்கிய விமர்சகர் ந.முருகேசபாண்டியன், பா.செ.வுடன் மனஓசை இதழில் இணைந்து இயங்கிய வசந்தன், இகக (மா-லெ) விடுதலை மாநிலக்குழுத் தோழர் அ.சிம்சன், மக்கள் கல்வி இயக்கம் பேராசிரியர் கோச்சடை சேவுகன், கதவு ஆசிரியர் மதி கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இரங்கல் கூட்டத்தை முனைவர் சம்பத்குமார் தொகுத்தார்.
தோழர் பா.செ எப்படி கரிசல் இலக்கியவாதியாக, புரட்சிகர மா-லெ இயக்கத்தின் சிந்தனையாளராக, மண்ணையும் மக்களையும் நேசித்த மனிதாபிமானியாக, ஈழ ஆதரவாளராக, மொழிப் போராட்டக் களப்போராளியாக, அனைத்து முற்போக்கு இடதுசாரிக் கலை இலக்கியப் படைப்பாளிகளுடன் இணக்கமானவராக, மென்மையான உரையாளராக இயங்கியதை அனைவரும் நினைவு கூர்ந்தனர்.
தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தலைவர் மருத்துவர் அறம், பொதுச்செயலாளர் தோழர் காமராஜ், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் மீ.த.பாண்டியன், கதவு ஆசிரியர் மதி கண்ணன் உள்ளிட்டோர் செங்கோடி போர்த்தி செவ்வணக்க முழக்கங்களுடன் தூத்துக்குடி மருத்துவமனைக்கு பா.செயப்பிரகாசம் உடலை வழி அனுப்பி வைத்தனர்.
எழுத்தாளர் இராகுலதாசன்
வழக்கறிஞர் அஜிதா
எழுத்தாளர் கோச்சடை சேவுகன்
தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன்
தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன்
நந்தகோபால் ஐ.ஏ.எஸ்
திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் மீ.த.பாண்டியன்
இந்தியாவின் தென்மேற்கு எல்லைக்கு அண்டக் கொடுத்தது போல் உள்ள பஞ்சாப் பிரதேசம்; முட்டுச்சுவர் போல் மலைகள் உண்டென்றாலும் படையெடுப்புகள் வரும் போது, திறந்து கொள்கிற கணவாய்கள் உண்டு. தென் மேற்கிலிருந்து எந்த ஆக்கிரமிப்பானாலும் முதல் 'மொத்து' பஞ்சாப்புக்கு. இந்தியா ஒரு நாடாய் உருவெடுப்பதற்கு முன்பிருந்து மத்திய ஆசியாவிலிருந்து, கிரேக்கத்திலிருந்து, ஆப்பானிஸ்தான், பலுசிஸ்தானிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள், நாடு பிடிக்கும் வேட்டையர், அவர்களின் கொடுக்குப் பிடித்தபடி குடியேறி மக்களும் - அத்தனை பேரும் பஞ்சாபில் குதித்தார்கள். மலைவழி, வனவழி குதிக்காமல் நீர்வழி வந்து ஆக்கிரமித்தவர்கள் வெள்ளைக்காரர்கள்; போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என ’டக்கு டக்காக’ கடல்வழி வந்திறங்கினாலும் இறுதியில் நிலைத்து நின்றது ஆங்கிலேயர்கள் தாம். வெள்ளைக்காரர் என்ற சொல் மேற்கிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர் அனைவருக்கும் பொத்தாம்பொதுவான ஒரு சொல். ஆங்கிலேய ஆக்கிரமிப்பின்போது தான் இந்தியா என்ற பெயரில் ஒரு நாட்டை அடையாளப்படுத்தினார்கள். தென்மேற்கிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள்
மனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது? “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா?” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது? சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளும்
1962 - 63ல், மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் இளங்கலை முதலாமாண்டு. கவிஞர் நா.காமராசன், இளங்கலை இரண்டாமாண்டு. கவிஞர் அபி, இளங்கலை மூன்றாமாண்டு. கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், முதுகலைத் தமிழ் இறுதியாண்டு. கவிஞர் இன்குலாப், எனக்குப் பின்னால் அடுத்த ஆண்டு இளங்கலைத் தமிழில் சேர்கிறார். அவருடைய வகுப்புத் தோழர் – பின்னாளில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்து மறைந்த கா.காளிமுத்து. மதுரை தியாகராசர் கல்லூரி விடுதியில் 1965 சனவரி 25-ம் நாள், இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி, உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் முன் ஆலோசிப்பு நடந்தது. நண்பர்கள் காமராசன், காளிமுத்து ஆகியோர், ‘இந்தியே ஆட்சி மொழி’ என்று அறிவிக்கும் சட்டப் பிரிவு பிரதியை எரிப்பதென முடிவு செய்தனர். ‘சட்டத்தை’ எரிக்கும் நண்பர்களை அக்காரியம் நிறைவேற்றும் முன் கைது செய்யாமலிருக்க, ஒரு தலைமறைவு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தினோம். எங்களில் சிலரைத் தவிர அந்த இடம் வேறு யாருக்கும் தெரியாது. சனவரி 25-ம் நாள் அன்று மாணவர்கள் சுற்றிலும் பாதுகாப்பாக வர, காமராசனும் காளிமுத்துவும் திடல் மேடையில் ஏறி, சட்டப
இயற் பெயர்: பா.செயப்பிரகாசம் புனை பெயர்: சூரியதீபன் தோற்றம்: 7 டிசம்பர் 1941, இராமச்சந்திராபுரம் (விளாத்திகுளம் அருகில்) மறைவு: 23 அக்டோபர் 2022, விளாத்திகுளம் உடல் தானம்: 25 அக்டோபர் 2022, தூத்துக்குடி மருத்துவமனை தமிழ்ச் சிறுகதைகளின் நெடும்பயண வரலாற்றில் கரிசல் பூமியின் பங்கு மகத்தானது. தமிழுக்குப் புது வடிவம் தந்த மகாகவி பாரதியின் ஜீவன் கலந்து கிடக்கும் பூமி அது. எட்டயபுரம் பாரதியில் தொடங்கிய தமிழ்ச் சிறுகதைகளின் செழுப்பம், நெல்லை புதுமைப்பித்தனில் நடந்து, கரிசல் சீமையின் இடைசெவல் கி.ராஜநாராயணனில் நிறைவாகி, இன்றும் வழிந்தோடுகிறது. கரிசல் இலக்கியம் என்னும் வட்டார மொழி நடையின் முன்னத்தி ஏர் கி.ரா உழுத மண்ணில் பா.செயப்பிரகாசமும் உழுது வெள்ளாமை கண்டார். காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞனின் உண்மையான முகம் கொண்டு இருக்கிறார். இன்
கி.ரா, கு.அழகிரிசாமி, மேலாண்மை பொன்னுச்சாமி, லட்சுமணப் பெருமாள் என்று காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து வரிசையில் மற்றுமொரு தவிர்க்க முடியாத பெயர் பா.செயப்பிரகாசம். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறவர். தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறையில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற செயப்பிரகாசம் ‘சூரியதீபன்’ என்ற புனைப் பெயரில் எழுதிவருகிறார். 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருந்தார். தாமரை, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கணையாழி, காலச்சுவடு, மனஓசை போன்ற இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. சமூக நீரோட்டத்துடன் செல்லாமல் எதிர்க் கருத்தியலை வைத்து நடைபோட்ட மனஓசை இதழின் பொறுப்பாசிரியராக இருந்தவர். இலக்கிய மேடைகளிலும், அரசியல் அரங்குகளிலும் கருத்து செறிந்த சொற்பொழிவுகள் ஆற்றுபவர். இதுவரை கதை உலகின் காலடி படாத கிராமத்தின் ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களின் பாடுகளையும் தன் புனைவிலக்கியத்தில் சித்தரிக்கிறார். இவரின் கதைகள் மனிதர்களின் துய
கருத்துகள்
கருத்துரையிடுக