எழுதிய கை

கண்ணுக்குத் தெரியாமல்
சடசடக்கிறது மழை
இரவு
காதுகளில் இசை.

கொடிபோல் மேலேறி
வேர்போல் கீழோடும்
அலையாய் உச்சி தாவி
நதியாய் உள்ளடங்கும்;
ஏற்ற இறக்கமாய்
இசைப் பிர்காக்கள்.

புழுக்கம் பெருகி
முத்து முத்தாய் வியர்த்து
மூளைக்குள் ஊழி.
சிந்தனை வெப்பம் தணித்து
தண்ணீர் புரள அடிக்கும்
எழுத்து மழை.

- சூரியதீபன்
- நதியோடு பேசுவேன் (2014)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஒரு நதியின் மரணம்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

நூற்றாண்டுகளினூடாக நடக்கும்‌ குரல்