எழுதிய கை

கண்ணுக்குத் தெரியாமல்
சடசடக்கிறது மழை
இரவு
காதுகளில் இசை.

கொடிபோல் மேலேறி
வேர்போல் கீழோடும்
அலையாய் உச்சி தாவி
நதியாய் உள்ளடங்கும்;
ஏற்ற இறக்கமாய்
இசைப் பிர்காக்கள்.

புழுக்கம் பெருகி
முத்து முத்தாய் வியர்த்து
மூளைக்குள் ஊழி.
சிந்தனை வெப்பம் தணித்து
தண்ணீர் புரள அடிக்கும்
எழுத்து மழை.

- சூரியதீபன்
- நதியோடு பேசுவேன் (2014)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை