“மண்டை மயிரிறுதி மாவிடிச்சவளே மயானம் போறவரை தோசை சுட்டவளே” நாட்டுப்புறச் சொலவடை ஒன்றிருக்கிறது. வார்த்தைகளால் அடுக்கி அடுக்கிச் சொன்னாலும், பெண்ணின் பாதரவு தீரப் போவதில்லை. மெல்லியலாள், பூங்கொடி, அனிச்சமலர்ப்பாதம் போன்ற வர்ணிப்புகள் பெண் என்னும் உழைப்புக்குப் பொருத்தப்பாடுடையன அல்ல: யாவும் கலைமனதின் புனைவுகள் தாம்; பெண்ணில் மெல்லியலாளரும் உளர் என்று கருத்து எவருக்கு உண்டோ அவர்கள் பெண் பற்றிய கருத்து நிலையிலிருந்து மாறவேயில்லை என்பது அர்த்தம். மனித குலத்தில் சரிபாதி பெண்கள். அவர்களுக்கு இல்லாள், இல்லத் தலைவி, தாய் போன்ற விருதுளை அளித்துச் சமையலறைப் பண்டமாக ஆக்கி வைத்துள்ளோம். பெண்ணுக்குக் கடமை, பொறுமை, பணிவு, கற்பு என்று வரையறுத்துள்ளோம். அதையே வள்ளுவரும், "பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்" என்று பேசுகிறார். பிறன்மனை நோக்காமை, பொருட்பெண்டிர் போன்ற அத்தியாயங்கள் ஆண்களை நோக்கியவைதாமே என்று கேள்வி எழுகிறது. ஆனால் திருக்குறளில் பெண்ணுக்கு முதன்மை இல்லை; ஆண் சார்ந்தவளாக பெண் நோக்கப்படுகிறாள் என்ற கவிஞர் இன்குலாபின்
கருத்துகள்
கருத்துரையிடுக