பிரபலமான பதிவுகள்
ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல் சமூகம்
உலக இலக்கியம், ஒரு ஜெருசலேம் - பா.செயப்பிரகாசம் நினைவேந்தல் சிறப்புக் கருத்தரங்கில் நெகிழ்ச்சி தருணங்கள்
கி.ரா - ஞானபீடம் - கடிதங்கள்
அன்புள்ள ஜெ. கி.ராவுக்கு ஞானபீடம் - இன்றைய தேவை. கி.ரா அவர்களின் தீவிர வாசகி என்ற முறையில் கி.ரா.வுக்கு ஞானபீடம் என்று தாங்கள் விடுத்த அறைகூவல் நிறைவாக இருந்தாலும், இதைக் கூடச் சொல்லிச் செயலாற்றவேண்டிய சூழலில் இருக்கிறோமே என்ற கசப்புணர்வும் சேர்ந்தபடி தான் உள்ளது. ஒரு மாபெபரும் எழுத்தாளரைரக் கொண்டுசென்று சேர்க்கவேண்டிய நிலை என்பதே சற்று அருவருக்கத்தக்க செயலாக எனக்குத் தோன்றுகிறது என்று முதலில் சொல்லிவிடுகிறேன் - தவறென்றால் மன்னிக்கவும். நாடெங்கிலும் இருந்து வாசிப்புப் பசியும் நுண்ணுணர்வும் உள்ளவர்கள் தானே கூட்டம்கூட்டமாக அவரைத் தேடிவரும் நிலை இருக்கவேண்டும்! கி.ரா.வின் படைப்பாற்றலும் மேதமையும் சொல்லித்தான் புரியவைக்கப்படவேண்டும் என்றால், அப்படிப்பட்ட வாசகப்பரப்புக்கு மூன்றாம் தரக் கவிஞர்களும் அசட்டு எழுத்தாளர்களுமே நாயகர்களாக இருக்கட்டுமே. கி.ரா.வை அவரது வாசகர்கள் நாம் கொண்டாடிவிட்டுப் போகிறோம். அது நமக்குக் கிடைத்த பெரும் பேர். ஏன் அவரது அருமை புரியாதோர் முன்னிலையில் அவர் ஆக்கங்களைக் கொண்டுசெல்ல வேண்டும் என்று உணர்வதாக முதலில் பதிவுச...
புலமைத்துவத்தில் வேரூன்றியவர்
முன்னைய நாட்களில் முதுகலைத் தமிழ் பயின்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். முதுகலை வகுப்புச் சேர்க்கையிலிருந்து அது தொடங்குகிறது. ஆங்கில இலக்கியப் பிரிவு மீதான மோகம் தமிழிலக்கியத்தின் பால் உருவாகவில்லை. மோகம் என்ன, அந்தக் கிறுக்கில் சிறுதுளியளவும் தாய்மொழிக்கென முளைவிட்டதில்லை. நாட்டர் வழக்கில் சொல்வதாயின், ஆங்கில இலக்கியப் பிரிவுக்கு ’மவுஸ்’ கூடுதல். தமிழ் இலக்கியப் பிரிவு காற்றோட்டமாய் இருந்தது. எந்தப் பிரிவும் கிடைக்காதவர்கள் தமிழ்ப் பிரிவில் வந்து சேருவார்கள். முதுகலைத் தமிழில் எங்களுடன் ஒரு கூடைப் பந்தாட்ட விளையாட்டுக்காரர் (Basket Ball Player) பயின்றார். அவருக்கு தாய் மொழி தமிழ் அல்ல; சௌராட்டிரம் அவருடைய தாய்மொழி. மதுரைநகரில் தெற்கு மாசி வீதிகளை உள்ளடக்கிய வட்டாரத்தில் வாழும் பட்டுநூல்காரர்கள் (பட்டுநூல் நெசவாளிகள்) என்றழைக்கப்படும் சௌராட்டிர இனத்தைச் சேர்ந்தவர். அவர் போல் வேறு பாடப்பிரிவில் இடம் கிடைக்காத - தொலைபேசி அலுவலகத்தில் பணி செய்யும் ஒருவர் எங்களுடன் முதுகலைத் தமிழ் பயின்றார்: ஒரு துறையில் பணியாளராக இருந்து கொண்டு, அதி...
கருத்துகள்
கருத்துரையிடுக