நாடாளுமன்றம் முன் மறியல் போராட்டம்

நாடாளுமன்றம் முன் மறியல் போராட்டம்
பா.செயப்பிரகாசம்

ஈழத் தமிழர் தோழமைக் குரல்
எம்.எம்.டி.ஏ. காலனி,
அரும்பாக்கம், சென்னை - 600 106.
தொலைபேசி: 9444909620.
voiceforeelamtamils.blogspot.com


வணக்கம்,

ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கெதிராக தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து ‘ஈழத்தமிழர் தோழமைக் குரல்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

01.02.2009-ல் நடந்த முதல் கூட்டத்தில், தில்லி பாராளுமன்றத்தின் வரும் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் (12.02.2009) பாராளுமன்றத்திற்கு முன் பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்திய அரசே,
  1. ஈழத் தமிழர் மீது சிங்கள அரசு நடத்தி வரும் இனப்படுகொலைப் போருக்கு துணை செய்யாதே!
  2. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கு!
  3. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கு!
  4. தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்!
  5. கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்காக இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடு!
என்ற கோரிக்கைகளை முன் வைத்து தில்லி பாராளுமன்றம் முன் நடத்தவிருக்கும் மறியலில் பங்கேற்க விரும்பும் அனைவரும் ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி,

தொடர்புக்கு:
அமைப்பாளர்கள்

பா.செயப்பிரகாசம் (9444090186),

லீனா மணிமேகலை (9841043438).

(voice.for.eelamtamils@gmail.com)

நன்றி: கீற்று 

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பஞ்சாபி இலக்கியம் - ஆட்காட்டிக் குருவிகளாய் பெண் குரல்கள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்

பா.செ.வின் 'அம்பலகாரர் வீடு' - செ.சண்முகசுந்தரம்