பா.செயப்பிரகாசத்தின் 51 ஆண்டு (1971 - 2022) கால படைப்பில் எழுதிய 143 சிறுகதைகள் 14 தொகுதிகளாகவும் மற்றும் 18 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதை தொகுப்புகள், 3 நாவல்கள், 2 மொழி பெயர்ப்பு நூல்கள், தொகுப்பாளராய் 15 நூல்கள் வெளிவந்துள்ளன. சிறுகதைத் தொகுப்புகள் 1. ஒரு ஜெருசலேம் - 1972, 1988 ஒரு ஜெருசலேம் அம்பலக்காரர் வீடு குற்றம் (பா.செயப்பிரகாசத்தின் முதல் கதை, தாமரை 1971 மே மாத இதழில் வெளியானது.) பலிப்பூக்கள் கறுத்த சொப்னம் ஆறு நரகங்கள் புஞ்சைப் பறவைகள் இருளின் புத்ரிகள் திறக்கப்படாத உள்ளங்கள் வேரில்லா உயிர்கள் சுயம்வரம் மூன்றாம் பிறையின் மரணம் பொய் மலரும் 2. காடு, 1973 காடு இருளுக்கு அழைப்பவர்கள் கொசு வலைக்குள் தேனீக்கள் முதலைகள் நிஜமான பாடல்கள் சரஸ்வதி மரணம் இரவின் முடிவு குஷ்டரோகிகள் விடிகிற நேரங்கள் கோபுரங்கள் 3. கிராமத்து ராத்திரிகள், 1975 அக்னி மூலை தாலியில் பூச்சூடியவர்கள் கரிசலின் இருள்கள் அக்னி நட்சத்திரம் தூரத்துப் பாலைவனம் ஒரு கிராமத்து ராத்திரிகள் தெற்கின் ஆத்மாக்கள் 4. இரவுகள் உடையும் - 1978, 1991 அனல் காற்று தூரத்துத் தண்ணீர் வளரும் நிறங்கள்
அஞ்சலி: நா. காமராசன் (1942 – 2017) மதுரைத் தியாகராசர் கல்லூரி விடுதியில் 1965 சனவரி 25 இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி, உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரதிநிதிகளின்ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மதுரைநகரின் நடுவில் அமைந்த திடலுக்கு அவரவர் இடத்திலிருந்து பேரணியாய் வருவது, இந்தியை ஆட்சிமொழியாய் அறிவிக்கும் அரசியல் சட்டப் பிரிவை நீக்குக, ஆங்கிலமே ஆட்சிமொழியாக நீடிக்க வகை செய்க – என்னும் இரு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றுவது என முடிவு செய்தோம். இந்தியே ஆட்சிமொழி என்று அறிவிக்கும் சட்டப்பிரிவைத் தியாகராசர் கல்லூரி மாணவ நண்பர்களான நா.காமராசனும் கா.காளிமுத்துவும் எரிப்பதென முன்வந்தனர். நா.காமராசன், பா.செயப்பிரகாசம், கா.காளிமுத்து, கவிஞர் இன்குலாப் ஆகியோர் முன்பின்னான ஆண்டுகளில் ஒருசாலை மாணாக்கர்கள். சனவரி 25, காலை பத்து மணிக்குத் தியாகராசர் கல்லூரி மாணவர்கள் பேரணியாய்த் திடலைச் சென்றடைய, காமராசனும் காளிமுத்துவும் திடல்மேடையில் ஏறிச் சட்டப் பிரிவுக்குத் தீயிட்டார்கள். எதிர்காலம் இருண்டு போகும், கல்வியைத் தொடர இயலாது என்பதைச் சட்டத்தை எரித்த மாணவர்கள் அறிவார்கள். தமிழக மாணவ சமுதா
இயற் பெயர்: பா.செயப்பிரகாசம் புனை பெயர்: சூரியதீபன் தோற்றம்: 7 டிசம்பர் 1941, இராமச்சந்திராபுரம் (விளாத்திகுளம் அருகில்) மறைவு: 23 அக்டோபர் 2022, விளாத்திகுளம் உடல் தானம்: 25 அக்டோபர் 2022, தூத்துக்குடி மருத்துவமனை தமிழ்ச் சிறுகதைகளின் நெடும்பயண வரலாற்றில் கரிசல் பூமியின் பங்கு மகத்தானது. தமிழுக்குப் புது வடிவம் தந்த மகாகவி பாரதியின் ஜீவன் கலந்து கிடக்கும் பூமி அது. எட்டயபுரம் பாரதியில் தொடங்கிய தமிழ்ச் சிறுகதைகளின் செழுப்பம், நெல்லை புதுமைப்பித்தனில் நடந்து, கரிசல் சீமையின் இடைசெவல் கி.ராஜநாராயணனில் நிறைவாகி, இன்றும் வழிந்தோடுகிறது. கரிசல் இலக்கியம் என்னும் வட்டார மொழி நடையின் முன்னத்தி ஏர் கி.ரா உழுத மண்ணில் பா.செயப்பிரகாசமும் உழுது வெள்ளாமை கண்டார். காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞனின் உண்மையான முகம் கொண்டு இருக்கிறார். இன்
“ஆதலினால் காதல் செய்வீா் உலகத்தீரே” என்றான் பாரதி. சொன்னவன் மஹாகவியா, மக்கள் கவிஞனா - யாராகவும் இருக்கட்டும், அவனையும் தீர்த்துக் கட்டுவோமென கையில் வீச்சரிவாள்களுடன், கத்தி கப்படாக்களுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள் சாதி விசுவாசிகள். காதலால் தனிமனிதனுக்கு - கூட்டுச் சமூதாயத்துக்கு கிட்டும் பலாபலன்களைக் வரிசையிட்டிருப்பான் கவிதையில் பாரதி. காதலினால் மனத்தில் உறுதி உண்டாகும் என்பது கவிஞன் வார்த்தைகளுக்குள் இறங்கிக் கிடக்கிறது. காதலினால் துளி உறுதியும் உண்டாக இடம் தரக்கூடாது என்று கங்கணம் கட்டி, காதலுக்குப் பாடைகட்டிக் கொல்லும் வழி போகின்றனர் ஊரினிலே காதலென்றால் உறுமும் ஒருகூட்டம். பூ மலர்ந்தால் பிஞ்சு கட்டும்: பிஞ்சு கட்டினால் காய் வரும்: காய் பழுத்தால் கனியாகும். காதல் பூ மலர்ந்து கனியாகிறபோது விதைகள் உண்டாகின்றன. விதைகள் குடும்ப விருட்சமாய் விரிகின்றன. இந்தப் பெருமரத்தின் நிழல் சகல தடைகளையும் உடைத் தெறிந்து வரும் மாண்பாளா் அனைவரையும் அனைத்துக் கொள்ளும்; காதல் செய்வதால் உண்டாகும் இந்த ஆரோக்கியமான பெருமரச் சமுதாயத்தின் நிழலில் தாமும் உரம்பெற்றுப் புதியன படைக்கப் புறப்படுவார்கள
கருத்துகள்
கருத்துரையிடுக