பா.செயப்பிரகாசம் நினைவேந்தல் - 2022

மறைந்த முன்னோடி எழுத்தாளர்களை சிறப்பித்த ‘நினைவின் தடங்கள்’, சிங்க‌ப்பூர், 26 நவம்பர் 2022

மறைந்த எழுத்­தா­ளர்­க­ளின் படைப்­பு­களை நினை­வு­ கூ­ர­வும் தமிழ் இலக்­கி­யத்­தில் அவர்­க­ளின் பங்­க­ளிப்­பைச் சிறப்­பிக்­க­வும் தேசிய நூலக வாரி­யம் அண்­மை­யில் நிகழ்ச்சி ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

அந்­தந்த ஆண்­டில் மறைந்த எழுத்­தா­ளர்­க­ளைக் கொண்­டா­டும் வகை­யில் ஒவ்­வோர் ஆண்­டும் ‘நினை­வின் தடங்­கள்’ எனும் நிகழ்வு, தேசிய நூலக வாரி­யத்­தின் ஏற்­பாட்­டில் நடை­பெற்று வரு­கிறது.

மறைந்த எழுத்­தா­ளர்­க­ளின் வாழ்க்­கைக்­கு­றிப்பு, தமிழ் மொழிக்­காக அவர்­கள் ஆற்­றிய நற்­பணி, வெளி­யீடு கண்ட படைப்­பு­கள் உள்­ளிட்­டவை இந்­நி­கழ்­வில் நினை­வு­கூ­ரப்­பட்­டது.

தொடர்ந்து ஐந்­தா­வது ஆண்­டாக இவ்­வாண்­டின் நிகழ்ச்சி நவம்பர் மாதம் 26ஆம் தேதி­யன்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை ‘ஸூம்’ வழி­யாக நடை­பெற்­றது. இவ்­வாண்டு மறைந்த எழுத்­தா­ளர்­கள் செ.கணே­ச­லிங்­கன், ஏ.பி.ராமன், தெணி­யான் (கந்­தையா நடே­சன்), கு.சின்­னப்ப பாரதி, பாவ­லர் இறை­ய­ர­சன், கே.எஸ்.சிவ­குமா­ரன், தெளி­வத்தை ஜோசப், பா.செயப்­பி­ர­கா­சம் என்ற சூரி­ய­தீபன் ஆகிய எட்டு எழுத்­தா­ளர்­க­ளின் படைப்­பு­கள் பற்­றிய சொற்­பொ­ழி­வு­கள் இடம்­பெற்­றன.

விரி­வு­ரை­யா­ளர் உள்­பட பல்­வேறு தமி­ழக அர­சாங்­கப் பொறுப்­பு­களை வகித்­துள்ள எழுத்­தா­ளர் சூரி­ய­தீபன், தம்­மு­டைய படைப்­பு­களில் சமூக அக்­க­றையை வெளிப்­ப­டுத்­து­வ­தில் கைத்­தேர்ந்­த­வர். அவர் பல்­வேறு சிறு­க­தைத் தொகுப்­பு­கள், கட்­டு­ரைத் தொகுப்­பு­கள், கவி­தை­கள் ஆகி­ய­வற்றை எழு­தி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரைச் சார்ந்த தமிழ் ஆர்­வ­லர்­கள் பலர், ஒவ்­வொரு எழுத்­தா­ள­ரைப் பற்­றி­யும் சிறப்­புரை ஆற்­றி­னர். எழுத்­தா­ளர்­க­ளு­டைய சாத­னை­கள், வாழ்க்கை வர­லாறு, பெற்ற விரு­து­கள் உள்­ளிட்ட பல்­வேறு குறிப்­பு­கள் இவ்­வு­ரை­களில் இடம்­பெற்­றன. இந்­நி­கழ்­வினை திரு­வாட்டி இலக்­கியா செல்­வ­ராஜி வழி­ந­டத்­தி­னார்.




தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், புதுச்சேரி, 05-11-2022


எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களுக்கு புகழஞ்சலி புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் 05-11-2022 அன்று நடைபெற்றது.

புதுச்சேரியில் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை ஆதரித்த அவரது சகோதர் குடும்பத்தை சார்ந்தவர்கள் வந்து கலந்து கொண்டது பெரும் மனநிறைவு அளித்தது.

பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஆற்றிய உரை பா.ஜெயப்பிரகாசம் ஆளுமையை பணிகளை அனைவருக்கும் உணர்த்தியது. 

அவருடன் நெருங்கி பழகிய பேராசிரியர் ரவிக்குமார் பேராசிரியர் சிவக்குமார் பேராசிரியர் ரேவதி குணசேகரன் எழுத்தாளர் சீனு.தமிழ்மணி ஆகியோரின் உரைகள் அவரது பணிகளை ஆளுமையை வெளிப்படுத்தியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அ. மு. சலீம் தமிழ் மாமணி தமிழமல்லன் புதுச்சேரி தமிழ் சங்க துணைத் தலைவர் மு. பாலசுப்ரமணியன் செயலாளர் சீனு. மோகன்தாசு ஆகியோரின் உரைகள் அவருக்கு சிறப்பான புகழஞ்சலி உரைகள்.

முஎகச துணை செயலாளர் லெனின் பாரதி புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் திவ்யா ஆகியோர் கவிதைகள் சூப்பர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள் விசாலாட்சி பேராசிரியர் விவேகானந்ததாசன் கவிஞர் ஆறு. செல்வம் மு. சி. இராதாகிருஷ்ணன் சீனு. தமிழ்நெஞ்சன் பட்டிமன்ற பேச்சாளர்கள் கலக்கல் காங்கேயன் உமா அமலோற்பவமேரி உட்பட பலர் பங்கேற்றும் நேர நெருக்கடி காரணமாக  பேச இயலவில்லை.

இந்த நிகழ்ச்சி யை ஏற்பாடு செய்த வகையில் புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு பெருமிதம் என்பது ஒருபுறம் இருக்க தனிப்பட்ட முறையில் அவர் அழைப்பு விடுத்தும் அவரை சந்திக்காமல் வந்து விட்டோமே என்ற எனது மனத்துயரத்தை போக்க்கூடிய நிகழ்ச்சியாக இது அமைந்தது.





தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் & பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளை, சென்னை, 9 நவம்பர் 2022 


‘தூய இலக்கியவாதி’களின் விமர்சனங் களை தனது படைப்புகளால் வீழ்த்தியவர் பா.செயப்பிரகாசம் என்று தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியில் நின்ற போது, கைது செய்யப்பட்ட 10 மாணவர்  தலைவர்களில் ஒருவரான பா.செயப்பிரகாசம் அண்மையில் காலமானார். அவரது நினைவேந்தல் கூட்டம் புதனன்று (நவ.9) சென்னையில் நடைபெற்றது. தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டக் குழுக்க ளும், மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளையும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. ச.தமிழ்ச்செல்வன் இந்நிகழ்வில் பேசிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பேசுகையில், “கட்சி சார்ந்த படைப்பாளிகளுக்கு இலக்கியம் வராது, பிரச்சாரமாகத்தான் எழுதுவார்கள் என்ற பிரச்சாரத்தை முறியடித்தவர் பா.செயப்பிரகாசம். தூய இலக்கியவாதிகள் என்று கருதி கொண்டிருக்கக் கூடியவர்களின் விமர்சனங்களை, அவதூறுகளை வீழ்த்துகிற படைப்புகளை படைத்தார். சூரியதீபன் என்ற பெயரில் எழுதி அவரது படைப்புகள் கலை அமை தியை குலைத்தன. அவர் குறித்த நினைவு களை தொகுதிக்கு மலராக கொண்டு வரலாம். அனைவரும் ஒன்றிணைந்து நிற்க  வேண்டிய தேவையை உணர்ந்து செயல் படுகிறோம்.

அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய உச்சிவெயில் நாவலை இணைந்து வெளியிடுவோம்’’ என்றார். தமுஎகச மாநில துணைத்தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன் பேசுகையில், 1965ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், 1967ல் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற பா.செயப்பிரகாசம், திராவிட இயக்க கருத்தியலில் இருந்து விடுபட்டு, படைப்பிலக்கியத்திற்கு வந்து வெற்றி கண்டார். இறுதிவரை இடதுசாரி படைப் பாளியாக இருந்தார் என்றார். தமுஎகச-வுடன் பா.செயப்பிரகாசம் முரண்பாடு கொண்டிருந்தார். படைப்பு சார்ந்த பிரச்சனைகளில் தமுஎகச தொடர்ந்து தலையீடு செய்வதை கண்டு,  நெருங்கி வந்தார். சங்கத்தில் உறுப்பி னராக இல்லையென்றாலும் இணைந்து பயணித்தார். அவருடைய மறைவு தமுஎகச -வுக்கு ஏற்பட்ட இழப்பு. அதன் அடையாள மாக நினைவேந்தல் கூட்டத்தை தமுஎகச நடத்துகிறது என்றும் அவர் கூறினார். மாநில துணைத் தலைவர் மயிலை பாலு  தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத் தில், பேரா. வீ.அரசு, பேரா. சரஸ்வதி, பேரா.  ரவிக்குமார், பேரா. பெருமாள் முருகன், எழுத் தாளர்கள் அஸ்வகோஷ், வசந்தன், எஸ்.வி.வேணுகோபாலன், இரா.தெ.முத்து, மணிநாத், கவிஞர்கள் நா.வே.அருள், சி.எம். குமார், க.மலர்விழி, மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன், பா.செயப்பிரகாசத்தின் சகோதரி சரஸ்வதி உள்ளிட்டோர் பேசினர்.

நிகழ்ச்சி காணொளியை இங்கு காணலாம்.





விழுப்புரம், 25 அக்டோபர் 2022, கிரீன்ஸ் பிளாசா மினி ஹால் 

1965 மொழிப்போர் மாணவ தளபதிகளில் முன்னணி தோழர் சூரியதீபன் அவர்களுக்கு நினைவஞ்சலி.

தலைமை: ரவிக்குமார் 

பங்கேற்பு: பாவலர் அறிவுமதி, எழுத்தாளர் இமயம், பேராசிரியர் பா.கல்யாணி, கவிஞர் அன்பாதவன் மருதம், இரவிகார்த்திகேயன்





























மீ.தா பாண்டியன் 








காஞ்சிபுரம், இராஜ்பவன் திருமண மண்டபத்தில் ஈகியர் படத்திறப்பு, 18-11-2022 காலை 10 மணி.


தமிழ்த்தேசியத் தலைமகன் வ.உ.சிதம்பரனார் நினைவுநாளில் காஞ்சியில் தமிழ்ச்சான்றோர் படத்திறப்பு.

தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் காஞ்சிஅமுதன் தலைமையேற்று பெருந்தமிழர் வ.உ.சி அவர்களின் ஈக வாழ்வு குறித்து நினைவு கூர்ந்திட....

பெருந்தமிழர் வ.உ.சி படத்தை தமுமுக தலைவர் தாசுதீன் அவர்களும்,
பேராசிரியர் நெடுஞ்செழியன் படத்தை பி.யு.சி.எல் பாரதிவிசயன் அவர்களும்,
எழுத்தாளர் செயப்பிரகாசம் படத்தை திராவிடர் விடுதலைக் கழகம் ரவிபாரதி அவர்களும், வழி.பா இதய வேந்தன் படத்தை ஐந்திணை கலை-பண்பாட்டு இணையத்தின் கவிஞர் அமுதகீதன் அவர்களும் திறந்து வைத்து உரையாற்றினர்.

நிகிழ்வில்  உலக ஒளி (காஞ்சிக் கலைக்குழு) வ.உ.சி குறித்து பாட திராவிடர் கழகத்தின் அ.வெ.முரளி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வி.கே பொன்மொழி, அறிவரண் மோகனகிருட்டிணன், பியுசி எல் தேவராசன், தமிழர் தொன்மம், வெற்றித்தமிழன், உழவர் ஆ.மோகன் ஆகியோர் நினைவுரையாற்றிட தமிழர் கழகத்தின் தமிழ் முகிலன் நினைவேந்தல் நிறைவுரையாற்றினார். மா.பெ.பொ.க தோழர் சம்பந்தம் சிவக்குமார் நன்றி கூற நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடந்தேறியது.













விளாத்திக்குளம் வேம்பு மக்கள் சக்தி  இயக்கம், 1 November 2022

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களின் மறைவு இந்த கரிசல் மண்ணின் பாமர மக்களுக்கும் இங்குள்ள கிராமிய கலைஞர்களுக்கும் தெரியாத வண்ணமே உள்ளது....
அவர் தன் வாழ்நாள் முழுவதையும் இங்குள்ள எளிய மக்களை முதன்மை படுத்துவதற்காகவே செலவிட்டார்.
அதன் பொருட்டு அவரின் புகழஞ்சலி மற்றும் நினைவை போற்றும் வகையில் ஒரு நிகழ்வு நடத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம்  விளாத்திக்குளம் வேம்பு மக்கள் சக்தி  இயக்கத்தில் நேற்று நடைபெற்றது.... 🍃








4 டிசம்பர் மாலை நிகழ்வு, எளிமையான தோழரது சிறப்பான எழுத்துக்கு மகத்தான மரியாதை செய்வதாக அமைந்தது.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், இளம் தோழர்கள் நால்வர் பாசெ.வின் கதைகள் அருமையாகச் சொல்லச் சொல்லக் கண்ணீர் மல்கக் கேட்டிருந்தார், நிறைவாக, ஓர் அபாரமான உரை நிகழ்த்தினார்.

மருத்துவர் பிவி வெங்கட்ராமன் பாசெ தனது உறவினர் என்பதினும் உற்ற தோழர் என்று சிலிர்க்க வைக்கும் சில குறிப்புகளோடு நினைவு கொண்டாடினார்.

மருத்துவர் ஆர் சுரேந்திரன், மருத்துவர் ஜெகதா, வழக்கறிஞர் அஜிதா, மொழி பெயர்ப்பாளர் விபா கணேசன், மரு பாலமுருகன், வீரா, ஆல்வின்.... மாணவர் வாலிபர் என 50 பேர் பங்கேற்பு.

கவிஞர் நா.வே அருள் சீரிய தலைமை உரை. கிளை செயலாளர் மூவேந்திரன் பாராட்டுக்கு உரிய பணி.









எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்




மதுரையில் ஆசீவக சமய ஆய்வறிஞா் க. நெடுஞ்செழியன், தமிழறிஞா் அவ்வை நடராசன், மொழிப் போா் தியாகி எழுத்தாளா் பா. செயப்பிரகாசம் என்ற சூரியதீபன் ஆகியோரின் மறைவையொட்டி நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நினைவேந்தல் கூட்டத்தில் பேசும் பேராசிரியா் ம.பெ.சீனிவாசன். உடன் (இடமிருந்து) விரிவுரையாளா் அதிவீர பாண்டியன், பேராசிரியா் பெ.க.பெரியசாமி, பி.வரதராஜன்.

புரட்சிக் கவிஞா் மன்றம் சாா்பில், மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில், நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு புரட்சிக் கவிஞா் மன்றத் தலைவா் பி. வரதராசன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், பேராசிரியா் ம.பெ.சீனிவாசன், அவ்வை நடராசனுடன் பழகிய நாள்கள் குறித்தும், அவரது சிறப்புகள், அவரது சொற்பொழிவின் திறன் குறித்தும் பேசினாா். இதைத் தொடா்ந்து பேராசிரியா் க.நெடுஞ்செழியன் மற்றும் எழுத்தாளா் பா.செயப்பிரகாசம் ஆகியோா் குறித்து பேராசிரியா் க.பெ.பெரியசாமி ராஜா பேசினாா். நிகழ்ச்சியின் முடிவில், செந்தமிழ்க் கல்லூரி விரிவுரையாளா் அதிவீர பாண்டியன் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில், தமிழறிஞா் தமிழண்ணலின் மகன் மணிவண்ணன், பேராசிரியா் இ.கி.ராமசாமி, மதுரை நான்காம் தமிழ்ச் சங்கச் செயலா் ச.மாரியப்ப முரளி, பேராசிரியா்கள், தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்றனா்.









படத்திறப்பு நிகழ்வில் பேசிய உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ.நெடுமாறன்.

தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழா் பேரமைப்பு சாா்பில் தமிழறிஞா்கள் அவ்வை து.நடராசன், க.நெடுஞ்செழியன், பா.செயப்பிரகாசம் ஆகியோரின் படத்திறப்பு நிகழ்வு 21 டிசம்பர் 2022 புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளர் நாயகம் ந.மு.தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முனைவா் அவ்வை து.நடராசனின் படத்தை கலை பண்பாட்டுத் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குநா் இரா.குணசேகரன், முனைவா் க.நெடுஞ்செழியனின் படத்தை சி.அறிவுறுவோன், ம.பொன்னிறைவன், எழுத்தாளா் பா.செயப்பிரகாசத்தின் படத்தை வழக்குரைஞா் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் ஆகியோா் திறந்து வைத்தனா். மறைந்த அறிஞர்களின் குடும்பத்தினர் மேடைக்கு அழைக்கப்பட்டு அவர்களும் மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் நிர்வாகிகளும் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

பின்னா், உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ.நெடுமாறன் பேசியது:
முனைவா் நெடுஞ்செழியன் தன் மகனை ஈழப் போராட்டத்துக்கு ஈகம் செய்தவா். இதற்காக அவா் தன்னுடைய துயரத்தை வெளிக்காட்டியதில்லை. ஆசீவகம் என்பது தமிழா்களின் சமயம் என்பதை முழுமையாகக் கண்டறிந்து, அதை தக்க ஆதாரங்களுடன் நிரூபித்து, நூலாக வெளியிட்டாா். அவருடைய ஆசீவகம் நூல் ஆங்கிலத்தில் வெளியிட்டால், உலகம் முழுவதும் பரவும்.

எழுத்தாளா் செயப்பிரகாசம் மாந்த நேயம் படைத்த ஆளுமைமிக்கவா். அவருடைய படைப்புகளிலிருந்து மாந்த நேயம் மிளிரும். கரிசல் எழுத்தாளா்களில் குறிப்பிடத்தக்கவா்.

அவ்வை நடராசன் மூன்று முதல்வா்களிடமும் பணியாற்றியவா். இந்த மூன்று தமிழறிஞா்களின் படங்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றாா் நெடுமாறன்.

பேரமைப்பின் துணைத் தலைவா் அய்யனாபுரம் சி.முருகேசன், நிா்வாகிகள் து.குபேந்திரன், இல.ரா.பாரதிசெல்வன், மரு. பாரதிசெல்வன், பொறிஞர் ஜோ.ஜான் கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பேராசிரியா் வி.பாரி வரவேற்றாா். நிறைவாக, சமூக ஆா்வலா் பா.செல்வபாண்டியன் நன்றி கூறினாா்.










கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பஞ்சாபி இலக்கியம் - ஆட்காட்டிக் குருவிகளாய் பெண் குரல்கள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்