நனையாத கவிதைகள்

முழு ஆளை விழுங்கக்
காத்திருக்கிறது
வறண்ட நிலத்தில்
வாய்பிளந்த வெடிப்புகள்

தரைக்கு உள்ளேயும்
தலைக்கு மேலேயும் அனல்

தானாய் தனிக் கிணறு
பீய்ச்சியடிக்கிறது பம்ப்செட்;
தண்ணீர்த்தொட்டிப் பக்கம்
நல்லதொரு மயில்க் குஞ்சாய்
நனையாமல் தூங்கும்
என் கவிதைகள்

(சமூகத்தில் எல்லோர் மேலும் வீசியடிக்கிற காற்று இலக்கியவாதியையும் உணக்குகிறது. தன்னைச் சுற்றியும் தனக்குள்ளும் அதிர்வுகளைத் தருகிறது. இருந்தும் எந்த அதிர்வுகளும் தன் வீட்டு முற்றத்தில் விதைக்கப்படவில்லை என்றொரு பாவனை; வாழ்வைத் தனியாகவும், படைப்புலகத்தை தனியாகவும் பாதுகாத்துக் கொள்கிறவர்களுக்காக.)

- சூரியதீபன் ("எதிர்க் காற்று" கவிதை தொகுப்பு)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை