“ஆதலினால் காதல் செய்வீா் உலகத்தீரே” என்றான் பாரதி. சொன்னவன் மஹாகவியா, மக்கள் கவிஞனா - யாராகவும் இருக்கட்டும், அவனையும் தீர்த்துக் கட்டுவோமென கையில் வீச்சரிவாள்களுடன், கத்தி கப்படாக்களுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள் சாதி விசுவாசிகள். காதலால் தனிமனிதனுக்கு - கூட்டுச் சமூதாயத்துக்கு கிட்டும் பலாபலன்களைக் வரிசையிட்டிருப்பான் கவிதையில் பாரதி. காதலினால் மனத்தில் உறுதி உண்டாகும் என்பது கவிஞன் வார்த்தைகளுக்குள் இறங்கிக் கிடக்கிறது. காதலினால் துளி உறுதியும் உண்டாக இடம் தரக்கூடாது என்று கங்கணம் கட்டி, காதலுக்குப் பாடைகட்டிக் கொல்லும் வழி போகின்றனர் ஊரினிலே காதலென்றால் உறுமும் ஒருகூட்டம். பூ மலர்ந்தால் பிஞ்சு கட்டும்: பிஞ்சு கட்டினால் காய் வரும்: காய் பழுத்தால் கனியாகும். காதல் பூ மலர்ந்து கனியாகிறபோது விதைகள் உண்டாகின்றன. விதைகள் குடும்ப விருட்சமாய் விரிகின்றன. இந்தப் பெருமரத்தின் நிழல் சகல தடைகளையும் உடைத் தெறிந்து வரும் மாண்பாளா் அனைவரையும் அனைத்துக் கொள்ளும்; காதல் செய்வதால் உண்டாகும் இந்த ஆரோக்கியமான பெருமரச் சமுதாயத்தின் நிழலில் தாமும் உரம்பெற்றுப் புதியன படைக்கப் புறப்படுவார்கள
Title: P.Jeyaprakasam sirrukathaikal kattum karisal kattu makkalin valviyal (பா. செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்) Researcher: T.Poovai subramanian (த .பூவை சுப்பிரமணியன்) Guide(s): V.Kesvaraj (வே .கேசவராஜ்) Keywords: Tamil University: தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி, Manonmaniam Sundaranar University Completed Date: March 2007 Abstract: None Pagination: vii, 209p. URI: http://hdl.handle.net/10603/77832 ; https://sg.inflibnet.ac.in/handle/10603/77832 Appears in Departments: Department of Tamil ஆய்வு விளக்கம் முன்னுரை:- கரிசல் வட்டாரத்தினையும் அம்மக்களின் வாழ்க்கை முறையினையும் பா.செ. வின் கதைப்படைப்புகள் மூலம் வெளிப்படுத்தும் வகையில் அமையும் இவ்வாயிவிற்குப் ‘பா.செய்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்’ என்ற தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு அணுகுமுறை:- இவ்வாய்வில் பகுப்பாய்வு அணுகுமுறை, விளக்கமுறை திறனாய்வு, சமூகவியல் அணுகுமுறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வுப் பகுப்பு:- இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை
மனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது? “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா?” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது? சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளும்
நண்பர் நாஞ்சில் நாடன் ஒரு கண்ணாடியை நம் பார்வைக்குத் தூக்கிப் பிடிக்கிறார்: செக் குடியரசின் தலைநகரான பிராக் (PRAUGE) விமானநிலையத்தில் இறங்குகிறீர்கள். வெளியில் வந்ததும் முகப்பில் ஒரு அறிவிப்புப் பதாகை - ‘இசைக்கலைஞர் மொசாட், எழுத்தாளர் காப்கா பிறந்த மண் உங்களை வரவேற்கிறது’. நெல்லை தொடர் வண்டி நிலையத்தில் இறங்குகிறோம். தொடர் வண்டி நிலைய முகப்பில் 'மகாகவி பாரதி பிறந்த மண்: புதுமைப் பித்தன் பிறந்த பூமி வரவேற்கிறது' என சின்னஞ்சிறு அறிவிப்பினையேனும் செக்கொஸ்லாவிகா தலைநகரின் வரவேற்பை தொடர் வண்டி நிலையம் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பதாக கருதிப் பார்க்க இயலுமா? கனவு மெய்ப்படாது. மற்றொரு வரலாற்றுப் பதிவு: பிரான்சின் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து அல்ஜீரியா போராடிக் கொண்டிருந்தது. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தில் சேர்ந்து பலப்படுத்துமாறு இளைஞர்களை பிரெஞ்சு அரசு அழைப்புவிடுத்தது. ’விடுதலைக்குப் போராடும் அல்ஜீரிய மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமாட்டோம்’ என்ற இளைஞர்களின் எதிர்ப்பினை நியாயமானது என வரவேற்றார் எழுத்தாளர் ழீன் பால்சாத்தரே. பிரான்ஸ் காலனியாதிக்கத்தின
1962 - 63ல், மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் இளங்கலை முதலாமாண்டு. கவிஞர் நா.காமராசன், இளங்கலை இரண்டாமாண்டு. கவிஞர் அபி, இளங்கலை மூன்றாமாண்டு. கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், முதுகலைத் தமிழ் இறுதியாண்டு. கவிஞர் இன்குலாப், எனக்குப் பின்னால் அடுத்த ஆண்டு இளங்கலைத் தமிழில் சேர்கிறார். அவருடைய வகுப்புத் தோழர் – பின்னாளில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்து மறைந்த கா.காளிமுத்து. மதுரை தியாகராசர் கல்லூரி விடுதியில் 1965 சனவரி 25-ம் நாள், இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி, உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் முன் ஆலோசிப்பு நடந்தது. நண்பர்கள் காமராசன், காளிமுத்து ஆகியோர், ‘இந்தியே ஆட்சி மொழி’ என்று அறிவிக்கும் சட்டப் பிரிவு பிரதியை எரிப்பதென முடிவு செய்தனர். ‘சட்டத்தை’ எரிக்கும் நண்பர்களை அக்காரியம் நிறைவேற்றும் முன் கைது செய்யாமலிருக்க, ஒரு தலைமறைவு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தினோம். எங்களில் சிலரைத் தவிர அந்த இடம் வேறு யாருக்கும் தெரியாது. சனவரி 25-ம் நாள் அன்று மாணவர்கள் சுற்றிலும் பாதுகாப்பாக வர, காமராசனும் காளிமுத்துவும் திடல் மேடையில் ஏறி, சட்டப
கருத்துகள்
கருத்துரையிடுக