மதுரை வடக்கு மாசி வீதியில் பேரா.துளசிராமசாமியின் ‘அரூசா’ அச்சகத்தின் படியில் அவர் நின்று கொண்டிருந்தார். நிஜ நாடக இயக்கம் பேரா.மு.ராமசாமியின் ‘விழிகள்’ மாத இதழும் அச்சாகியதால் மு.ரா.வும் இருந்தார். மதுரையில் கோயில்களுக்கும் சாமி வலங்களுக்கும் குறைவில்லை. முன் மாலையை லேசாய் அசைத்துத் தள்ளியபடி இரவு பின்னால் மெதுவாக வந்தது. அது குளிர்காலமில்லை. கோடைகாலம். மதுரைக் கோடையில் இரவு அப்படித்தான் ஆடி அசைந்து வரும். ‘பெட்ரோமாக்ஸ்’ – விளக்கு வெளிச்சத்தில் வடக்கு மாசி வீதியில், கிழக்கிலிருந்து மேற்காக ‘அம்மன்’ சப்பரத்தில் வந்து கொண்டிருந்தாள். ஒவ்வொருவரது கைகளும் கன்னங்களும் இதற்காகவே இருப்பது போல் கூப்புவதும் கன்னத்தில் போடுவதுமாய் இருந்தார்கள். “எவ்வளவு பெரிய தேர். எத்தனை பெரிய கூட்டம். இவ்வளவு பெரிய தேரில் அம்மன் உரு மட்டும் கண்ணுக்குத் தெரியலே. இந்த மனுசப்பயல்களைப் பார்த்து பயந்து ஒரு மூலையில் ஒடுங்கி உக்காந்திட்டா போல” - அவர் பேசினார். கூட்டத்திலிருந்து அவர் பேச்சு விலகியதாய்க் காணப்பட்டது. எதுவொன்றையும் பொதுப்புத்திப் பார்வையிலல்லாமல் புதிய கோணமாய் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருந்
புனை பெயர்: சூரிய தீபன் தமிழ்ச் சிறுகதைகளின் நெடும்பயண வரலாற்றில் கரிசல் பூமியின் பங்கு மகத்தானது. தமிழுக்குப் புது வடிவம் தந்த மகாகவி பாரதியின் ஜீவன் கலந்து கிடக்கும் பூமி அது. “காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.” இது தன்னுரை அல்ல; அவர் பற்றிய பிறரின் அளவீடு. கல்வித் தகுதி: முதுகலை (தமிழ்), மதுரைத் தியாகராசர் கல்லூரி. ம
19.2.2017 ஞாயிறு புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் கறம்பக்குடி பேரூரில் நடைபெற்ற துரை.குணாவின் ‘கீழத்தெரான்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பினேன். தனது இசைப்பாடல் நூலுக்கு அணிந்துரை கேட்டு வந்திட்ட தலித் சுப்பையா – ஒரு கவிஞர். பாட்டுக் கட்டி இசையமைத்துப் பாடுகிற இசைஞர். இன்னொரு பெருமிதம் கொள்ளத்தக்க பாரம்பரிய உறவும் எங்களுக்கிடையில் இருந்தது. இருவரும் முன்பின்னான ஆண்டுகளில் பயின்ற கலாசாலை மதுரைத் தியாகராசர் கல்லூரி. 2016-ல் ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற புதினத்தை எழுதியதால் ஊரிலிருக்கும் அடாவடிச்சாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானவர் துரை.குணா. சாதிக் கொளுப்பு சற்றும் அடங்காதவர்களின் தூண்டுதல் காரணமாய், ஜூன் மாதம் பத்தாம் தேதி அதிகாலை ஐந்தரை மணிக்கு தட்டி எழுப்பி இழுத்துப் போய் பொய் வழக்குப் போட்டார் கறம்பக்குடி காவல்துறை ஆய்வாளர். ஒரே நேரத்தில் ஆதிக்க சாதியினர், காவல் துறை ஆய்வாளர் ஆகிய இரு வன்முறைக்கும் ஆளான தலித் எழுத்தாளர் துரைகுணாவின் கவிதை நூல் ”கீழத்தெரான்”- கீழத்தெருக்காரன் என்று பொருள். “இயல்பாகவே சிறுமை கண்டு பொங்கும் எழுத்து குண
மனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது? “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா?” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது? சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளும்
(தூர்வை, கூகை – நாவல்களால் தன் வட்டார மக்களின் வாழ்வியலை அழுத்தமாய்ப் பதிவு செய்த எழுத்தாளர் சோ.தர்மனின் ’சூல்‘ நாவலுக்கு 2019-க்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப் பெற்றுள்ளது. அடுத்து “பதிமூனாவது மையவாடி“ என்னும் புதிய நாவல் சனவரியில் நடைபெறும் புத்தகக்காட்சிக்கு வெளிவருகிறது. அவரது சிறுகதைகளின் முழுத்தொகுப்பு ‘சோ.தர்மன் கதைகள்’ என வெளிவந்துள்ளது.) கரிசல் இலக்கிய வகைமையின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போலத் தோன்றினும், அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. அது முன்னர் நடைமுறைலிருந்த பொதுமொழி என்னும் ’உயர் உரைநடையிலிருந்து’ விலக்கமாகி, வட்டாரமொழிப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்து கருக்கொண்டது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது. அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யத் தேவையில்லை என்கிற மாதிரி ’மொதுமொது’ என்று விளைச்சல் கொண்டுள்ளது. வட்டாரம் என்பது நிலவியல் அடிப்படையில் கிராமங்களின் மக்கள் தொகுதி, நாட்டுப்புற மக்களின் பேச்சு, சொல்லாடல்,சொலவம், வழக்காறுகள், பழ
கருத்துகள்
கருத்துரையிடுக