மதுரை வடக்கு மாசி வீதியில் பேரா.துளசிராமசாமியின் ‘அரூசா’ அச்சகத்தின் படியில் அவர் நின்று கொண்டிருந்தார். நிஜ நாடக இயக்கம் பேரா.மு.ராமசாமியின் ‘விழிகள்’ மாத இதழும் அச்சாகியதால் மு.ரா.வும் இருந்தார். மதுரையில் கோயில்களுக்கும் சாமி வலங்களுக்கும் குறைவில்லை. முன் மாலையை லேசாய் அசைத்துத் தள்ளியபடி இரவு பின்னால் மெதுவாக வந்தது. அது குளிர்காலமில்லை. கோடைகாலம். மதுரைக் கோடையில் இரவு அப்படித்தான் ஆடி அசைந்து வரும். ‘பெட்ரோமாக்ஸ்’ – விளக்கு வெளிச்சத்தில் வடக்கு மாசி வீதியில், கிழக்கிலிருந்து மேற்காக ‘அம்மன்’ சப்பரத்தில் வந்து கொண்டிருந்தாள். ஒவ்வொருவரது கைகளும் கன்னங்களும் இதற்காகவே இருப்பது போல் கூப்புவதும் கன்னத்தில் போடுவதுமாய் இருந்தார்கள். “எவ்வளவு பெரிய தேர். எத்தனை பெரிய கூட்டம். இவ்வளவு பெரிய தேரில் அம்மன் உரு மட்டும் கண்ணுக்குத் தெரியலே. இந்த மனுசப்பயல்களைப் பார்த்து பயந்து ஒரு மூலையில் ஒடுங்கி உக்காந்திட்டா போல” - அவர் பேசினார். கூட்டத்திலிருந்து அவர் பேச்சு விலகியதாய்க் காணப்பட்டது. எதுவொன்றையும் பொதுப்புத்திப் பார்வையிலல்லாமல் புதிய கோணமாய் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருந்
1962 - 63ல், மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் இளங்கலை முதலாமாண்டு. கவிஞர் நா.காமராசன், இளங்கலை இரண்டாமாண்டு. கவிஞர் அபி, இளங்கலை மூன்றாமாண்டு. கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், முதுகலைத் தமிழ் இறுதியாண்டு. கவிஞர் இன்குலாப், எனக்குப் பின்னால் அடுத்த ஆண்டு இளங்கலைத் தமிழில் சேர்கிறார். அவருடைய வகுப்புத் தோழர் – பின்னாளில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்து மறைந்த கா.காளிமுத்து. மதுரை தியாகராசர் கல்லூரி விடுதியில் 1965 சனவரி 25-ம் நாள், இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி, உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் முன் ஆலோசிப்பு நடந்தது. நண்பர்கள் காமராசன், காளிமுத்து ஆகியோர், ‘இந்தியே ஆட்சி மொழி’ என்று அறிவிக்கும் சட்டப் பிரிவு பிரதியை எரிப்பதென முடிவு செய்தனர். ‘சட்டத்தை’ எரிக்கும் நண்பர்களை அக்காரியம் நிறைவேற்றும் முன் கைது செய்யாமலிருக்க, ஒரு தலைமறைவு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தினோம். எங்களில் சிலரைத் தவிர அந்த இடம் வேறு யாருக்கும் தெரியாது. சனவரி 25-ம் நாள் அன்று மாணவர்கள் சுற்றிலும் பாதுகாப்பாக வர, காமராசனும் காளிமுத்துவும் திடல் மேடையில் ஏறி, சட்டப
மனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது? “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா?” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது? சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளும்
(’பொன்னீலன் 80‘ நூலில் வெளியான கட்டுரையின் செழுமைப் படுத்திய வடிவம்) படைப்பாளிகளை நேரில் சந்தித்து அறிமுகமாவதினும் வாசிப்பு வழி அறிமுகம் எளிது, அநேகம் எழுத்தாளர்களின் படைப்புக்கள் வழி இது சாத்தியமாகிறது. கொள்ளைக்காரர்கள் – குறுநாவல் தாமரை இலக்கிய இதழில் வாசித்தேன்; வாசிப்பு மூலம் அவர் எனக்கு முதல் அறிமுகம். வாசித்து முடித்து அசை போடுகையில் சிறு சந்தேக மின்னல் கீறியது; கொள்ளைக்காரர் யார்? கதையில் வருகிற காவல்துறை மாந்தர்களா? கடத்தல் வியாபாரிகளா? கதை தந்த எழுத்தாளரா? கதை மாந்தர்களின் பேச்சும், கதை உரைப்புப் பாங்கும் மலையாளமும் தமிழும் பிசைந்து பிழிந்த மூலிகைச்சாறு போல வட்டார வழக்கான குமரி மொழியில் வெளிப்பட்டிருந்தது. வட்டார மக்களை உலுக்கி உன்மத்தம் பிடிக்கச் செய்து கொண்டிருந்த ‘அரிசிப் பிரச்சனை’. கதை காட்டிய உண்மையின் பக்கம்; மக்கள் பக்கம் நின்று அவர் வாதாட்டம் செய்த மொழி - கதையைப் படைத்த எழுத்தாளர் என்பது எனக்கு உறுதிப்பட்டது. ஒரு கைகுலுக்கள் செய்ய நினைத்தேன். படைப்பாளி அருகில் இல்லை. அது 1973 – மதுரை ‘ஹாலேஜ் ஹவுஸ்’ உணவக மாடி அரங்கத்தில் ‘புதிய மொட்டுகள்’ என்றொரு கதைத்தொக
கரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச
கருத்துகள்
கருத்துரையிடுக