பஞ்சாபி இலக்கியம் - ஆட்காட்டிக் குருவிகளாய் பெண் குரல்கள்
இந்தியாவின் தென்மேற்கு எல்லைக்கு அண்டக் கொடுத்தது போல் உள்ள பஞ்சாப் பிரதேசம்; முட்டுச்சுவர் போல் மலைகள் உண்டென்றாலும் படையெடுப்புகள் வரும் போது, திறந்து கொள்கிற கணவாய்கள் உண்டு. தென் மேற்கிலிருந்து எந்த ஆக்கிரமிப்பானாலும் முதல் 'மொத்து' பஞ்சாப்புக்கு. இந்தியா ஒரு நாடாய் உருவெடுப்பதற்கு முன்பிருந்து மத்திய ஆசியாவிலிருந்து, கிரேக்கத்திலிருந்து, ஆப்பானிஸ்தான், பலுசிஸ்தானிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள், நாடு பிடிக்கும் வேட்டையர், அவர்களின் கொடுக்குப் பிடித்தபடி குடியேறி மக்களும் - அத்தனை பேரும் பஞ்சாபில் குதித்தார்கள். மலைவழி, வனவழி குதிக்காமல் நீர்வழி வந்து ஆக்கிரமித்தவர்கள் வெள்ளைக்காரர்கள்; போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என ’டக்கு டக்காக’ கடல்வழி வந்திறங்கினாலும் இறுதியில் நிலைத்து நின்றது ஆங்கிலேயர்கள் தாம். வெள்ளைக்காரர் என்ற சொல் மேற்கிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர் அனைவருக்கும் பொத்தாம்பொதுவான ஒரு சொல். ஆங்கிலேய ஆக்கிரமிப்பின்போது தான் இந்தியா என்ற பெயரில் ஒரு நாட்டை அடையாளப்படுத்தினார்கள். தென்மேற்கிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக