கலைஞன் சுதந்திரம்

சிற்ப விநோதங்களைச் செய்து காட்டுகிறவர்களுக்கு, பரிசு என்று அரசன் அறிவித்தான்.

ஒரு சிற்பி மன்னனின் சிலையை நேர்த்தியான முறையில் செய்து வந்திருந்தான். மன்னனுக்குப் பிடித்து விட்டது; மன்னன் சொன்னான்

"மக்கள் பெருந்திரளாக வரும் கோயிலில் கொண்டுபோய் வையுங்கள், மக்களனைவரும் கண்டு மகிழ்ச்சி கொள்ளட்டும்"

சிலையில் சிற்பி, ஒரு சின்ன சிற்பவிநோதம் பண்ணியிருந்தான். சிலையின் மூக்கு வழியே குச்சி விட்டால் காது வழியே வந்தது, காது வழியே விட்டால் வாய்வழியே வந்தது.

மக்கள் எல்லோரும் இந்த வேடிக்கையை ரசித்தார்கள். குச்சி போட்டுப் பார்க்க எக்குத் தப்பான கூட்டம் கூடியது.

அரசன் காதுகளுக்கு சேதி எட்டியது. சிற்பியை அழைத்து வரச் சொன்னான்.

"மன்னனைப் போற்றிப் பாராட்டத்தான் கலைகளே தவிர மன்னனை, கிண்டல் செய்வதற்கு அல்ல. நேரடியாகவோ, மறைமுகமாகவோ மன்னனை கிண்டல் செய்வதோ, கேலி செய்வதோ ராஜத் துரோகக் குற்றம். இவனைச் சிறையிடையுங்கள்"

- சூரியதீபன்
- மனஓசை - பிப்ரவரி 1982

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை