மந்தை வேம்புகளுக்கு மேலாக, கிழக்குத் திசையிலிருந்து ஊருக்குள் இறங்கும் நிலா. உயர்ந்த ஒற்றைத் தென்னை வழியாக வெள்ளித் தகடாய் உருகி வழிகிறது. உயரமான ஒரு நெஞ்சுக்குள்ளிருந்து குளுமை புறப்பட்டு, ஊர் முழுதையும் குளிப்பாட்டி நிற்பது போல் தெரிகிறது. இருபது, முப்பது வருசங்கள் முன், கிராமம் முன்னிருட்டி விடும், ஏழு மணிக்கு ஒதுங்க வைத்து தூங்கப் போய் விடும். ஒரு சின்னப் பிள்ளை முழித்தெழுவதைப் போல், வாழ்வு தொடங்கும் காலை; இரவின் மிச்சமான கறுப்பு படிவங்களை உடைத்துவிட்டு, மிதக்கும் வெள்ளை வெயில், கண்மாய் ஓடுகால் காலாங்கரை நெடுகிலும், அந்திக்காற்றில் சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு என்று ஆடுகிற மஞ்சள் ஆவாரம்பூக்கள். குழந்தைகளுக்கு 'சீர் அடிச்சிருச்சி' என்பார்கள். ஆவரம் பூக்களின் மொட்டையும், பேர் சொல்லாததையும் சேர்த்து அரைத்துக் கொடுத்தால், அந்த நோய்க்கு சட்டென்று கேட்கும். “ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ” என்பது சொலவம். ஊர் தலை கீழாக உருண்டிருந்தது. ராத்திரி 10 மணிக்கு கடைசி பஸ் ஊரில் கால் வைக்கிறபோது வெளிச்சம் மூஞ்சியில் படுவதை, துடைத்துக்கொண்டே பெண்...
பா.செயப்பிரகாசத்தின் 51 ஆண்டு (1971 - 2022) கால படைப்பில் எழுதிய 141 சிறுகதைகள் 14 தொகுதிகளாகவும் மற்றும் 18 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதை தொகுப்புகள், 3 நாவல்கள், 2 மொழி பெயர்ப்பு நூல்கள், தொகுப்பாளராய் 15 நூல்கள் வெளிவந்துள்ளன. சிறுகதைத் தொகுப்புகள் 1. ஒரு ஜெருசலேம் - 1975, 1988 ஒரு ஜெருசலேம் (தாமரை இதழ், செப்டம்பர் 1972) அம்பலக்காரர் வீடு (டிசம்பர் 1972) குற்றம் (பா.செயப்பிரகாசத்தின் முதல் கதை, தாமரை 1971 மே மாத இதழில் வெளியானது.) பலிப் பூக்கள் கறுத்த சொப்னம் ஆறு நரகங்கள் (ஆகஸ்ட் 1973) புஞ்சைப் பறவைகள் இருளின் புத்ரிகள் (டிசம்பர் 1973) திறக்கப்படாத உள்ளங்கள் (மே 1973) வேரில்லா உயிர்கள் (நீலக்குயில் இதழ், ஜூன் 1974) சுயம்வரம் (1973) மூன்றாம் பிறையின் மரணம் (1974) பொய் மலரும் (1974) 2. காடு, 1978 காடு (ஜூன் 1977) இருளுக்கு அழைப்பவர்கள் (ஏப்ரல் 1977) கொசு வலைக்குள் தேனீக்கள் (1973) முதலைகள் (மார்ச் 1976) நிஜமான பாடல்கள் (நவம்பர் 1975) சரஸ்வதி மரணம் (மே 1977) இரவின் முடிவு (பிப்ரவரி 1976) குஷ்டரோகிகள் 1 , 2, 3 (1974) விடிகிற நேரங்கள் (செப...
(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சைதை கிளைப் பேரவையில் `நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டு சவால்கள்' என்ற தலைப்பில் தோழர் சூரியதீபன் ஆற்றிய உரையின் சுருக்கம். எழுத்துருவம்: சூரியசந்திரன்) தென்மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்றொரு சிறுநகரம். அந்த நகரத்துக்கு நான் சென்றிருந்தபோது பொங்கல் நேரம். வீதிகளெல்லாம் சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தன. எல்லா வாசல்களிலும் இரவு முழுவதும் கண்விழித்து கோலங்கள் இட்டிருந்தார்கள். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நானும் எனது நண்பரும் கோலங்களைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தோம். அந்தக் கோலங்கள் ஒவ்வொன்றையும் தாண்டிச் செல்கிறபோது என்னுடைய கால்கள் சடக்கென ஒடிந்து விழுவதைப்போல ஒரு கோலத்தின் மீது நின்றது. காரணம் அந்தக் கோலத்தில் Happy pongal என்கிற வாசகம் இருந்தது. காலையிலே, அவர்கள் வீட்டு முற்றத்திலே பொங்கலிட்டு முடிந்த பிறகு ஒன்பது மணியளவில் ஒலிபெருக்கியிலிருந்து “இப்போது நாம் பொங்கலிடுவதற்காக பிள்ளையார் கோயில் முன் கூடுவோம்” என்றொரு அறிவிப்பு வருகிறது. அதாவது, இன்னொரு பொங்கலுக்குத் தயாராகும்படியான அறிவிப்பு அது. இந்த இரண்டு சம்பவங்களிலும் இரண்டு பண்பாட்ட...
“கவிஞனின் பணி கவிதை மட்டுமா? ஒரு போராட்டத்தை முன்னின்று நடத்தவும் வேண்டும்” - வியட்னாம் புரட்சியாளர் ஹோசிமின். “எழுத்தாளன் என்பவன் பழங்கால ஞானி போல் மனசாட்சியுடன் இயங்கவேண்டும்” - ஆப்பிரிக்க கென்ய எழுத்தாளர் கூகிவாதியாங்கோ. இவ்வாசகங்களின் சாட்சியாய் தமிழிலக்கியவாதிகளில் நான் கண்டவர் இருவர் - பாவலர் இன்குலாப், எழுத்தாளர் அஸ்வகோஷ் என்ற இராசேந்திரசோழன். எதுகை மோனைகளில் ‘அந்தர் பல்டி’ அடித்து, தனிமனிதத் துதிபாடும் எழுத்துக்களும், புராணப்புளுகுப் பேச்சுக்களும், வெட்டிப் பட்டிமன்றங்களும், மதியச் சாப்பாட்டுக்குப் பின்னான அரைத்தூக்க ஆராய்ச்சிகளும் கலை இலக்கியக் கொடியேற்றிப் பெருமிதம் கொண்டிருந்த நாட்களில் இவர்களுடைய வருகை நிகழ்ந்தது. ‘யாருக்கு கலை, இலக்கியம்? எந்த நோக்கத்திற்காக?’ என்ற திசைப் புறக்கணிப்புச் செய்து, ‘கலை கலைக்காக’ என்னும் கொள்கையில் மயிர் பிளக்கும் வாதங்களில் ஒரு பகுதியினர் மூழ்கிக் கொண்டிருக்கையில் இவர்கள் தோன்றினர். நிலம் பார்த்து நீர் வழங்கும் மழை மேகங்கள் போல் இவர்கள் பயணிப்பு நடந்தது. கவிதைகளில் தொடங்கினார் இன்குலாப்; கட்டுரை, பாடல், இதழியல் ஆசிரியர...
கருத்துகள்
கருத்துரையிடுக